இந்த பாகம் கெமிஸ்ட்ரியை அதிகம் போதிப்பதால் ஒருமுறைக்கு இருமுறை படிக்கலாம்.

மாண்ட்லீவ் அணு எடையை வைத்து, வரிசைப் படுத்தப்பட்ட தனிமங்களை ஏழின் மடங்கில் அட்டவணைப் படுத்தினார். அவ்வாறு அட்டவணைப் படுத்தும் போது ஒத்த குணமுள்ள தனிமங்கள் நெடுக்கிலும், சமயத்தில் குறுக்கிலும் தங்களது இருப்பிட அமைப்பை நியாயப் படுத்தின. இடையில் நிறைய வெற்றிடங்கள் ஏற்பட்டது.

அட்டவணையை ஏழின் விதிப்படி மாண்ட்லீப் அமைத்ததும் கண்டு பிடிக்கப் படாமல் இருந்த பொருட்கள் அணைத்தும் தங்கள் தங்கள் இடங்களில் வந்து உட்கார்ந்து கொண்டு தாங்கள் மொத்தம் எத்தனை பேர் உள்ளோம், எந்த கூட்டத்தை, மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்கள், என்ன குணநலன் உள்ளவர்கள் என்று பாட்டு பாட ஆரம்பித்து விட்டன உன்மையில் அது ஒரு அற்புதமான மாயக்கட்டம் தான் ஆமாம், அந்த அட்டவணையும் கூட பல தனிமங்களை கண்டுபிடித்து கொடுத்தது என்பதுதான் உண்மை.


இதில் முக்கியமான விஷயம், உயர்ந்த அல்லது மந்தமான வாயுக்கள் என்று அழைக்கப்படும் தனிமங்கள் அதுவரை அறியப்படவில்லை. ஆனாலும் அவைகளின் தாமதமான கண்டுபிடிப்பு இந்த அட்டவணையில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அவை ஆறும் ஒட்டு மொத்தமாக வில்லியம் ராம்சே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு அட்டவணையில், வரிசைகளில் கடைசி இடம் (அதாவது எட்டாவது குழுவாக), ஏற்கனவே தங்களுக்காகவே ரிசர்வ் செய்யப்பட்டது போல், இடம் கொடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டது. அறிவியலாருக்கே வியப்பை கொடுத்த நிகழ்ச்சி இது. அன்றிலிருந்து எட்டின் விதிப்படி அமையப்பெற்ற அட்டவணையாகிவிட்டது.

இந்நிகழ்ச்சியை இயற்கை மனம் திறந்து பேசிய சம்பவமாக கூட எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை இசைக்கு மயங்கி, இயற்கை தனது ரகசியத்தை உளறி விட்டதோ?. மாண்ட்லீவ் ”சரிகம” என்று ஆரம்பித்த உடன் இயற்கை மீதிப்பாட்டை பாடி முடித்து விட்டதோ?. அறிவியல் ஆர்வலர் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வீட்டின், சுவற்றில் மாட்டி வைத்துக் கொள்ள வேண்டிய அட்டவணை. இந்த அட்டவணையை நன்றாகத் தெரிந்து கொண்டால் வேதியலில் பாதி தெரிந்து கொண்டதற்கு சமம். மாண்ட்லீவ்க்கு மரியாதை செய்யும் விதமாக அவர் பெயரை ஒரு தனிமமத்திற்கு சூட்டியுள்ளனர். அதன் பெயர் மாண்டிலீவினியம்.

இங்கு காணப் படும் அட்டவணை கடந்த நூறு வருடங்களாக பற்பல மாற்றங்களுடன் மேம்படுத்தப் பட்டுள்ளது.ஆனாலும் அடிப்படையில் எந்தமாற்றமும் இல்லை. G1 லிருந்து G8 வரை குழுக்கள் உள்ளன. எலக்ட்ரானின் அமைப்புக்குத் தகுந்தவாறு ”டிரான்ஸிஸன்” மூலகங்கள் எனப்படும் நான்கு d ஷெல்லுக்கான (10 X 4)தனிமங்கள் தனியாக (Transition Elements) நடுவில் திணிக்கப் பட்டுள்ளது.அது மட்டுமில்லாமல் அதற்கு நடுவில் இரண்டு f ஷெல்லுக்கான லாந்தனைடுகளும், (14) ஆக்டினைடுகளும்(14) திணிக்கப் பட்டுள்ளது. தனிம வரிசையில் 92 க்கு மேலுள்ளவை நிலையற்றவை அல்லது செய்ற்கை முறையில் உருவாக்கப் பட்டவை.



அட்டவணை.

அணுவுக்குள் எலக்ட்ரான்கள் K,L,M,N,O,P, என்ற வரிசையில் அடுக்கடுக்காக அமைந்துள்ள கோள வடிவ அமைப்புகளில் சுற்றுகின்றன. ஒவ்வொரு கோளத்திற்க்கும் குறிபிட்ட எண்ணிக்கையில் தான் எலக்ட்ரான்கள் உள்ளன. அவை முறையே 2, 8, 18, 32, 32, 32 ஆகும். வட்டப்பாதை ஒவ்வொன்றிலும் s,p,d,f என உட்பிரிவுகளும் உள்ளன. உட்பிரிவில் முறையே 2,6,10,14 எலக்ட்ரான்களுக்கு மேல் இருக்கமுடியாது. இப்படத்தில் வரையப் பட்டுள்ள வட்டங்களை கோளத்தின் ஒரு பகுதிகளாக 3D யில் கற்பனை செய்து கொள்ளுங்கள்



இங்கு கீழே அட்டவணையில் கடைசியாக வரும் செயற்கையில் உருவாக்கப் பட்ட லாரன்சியம் எனப்படும் தனிமத்தைப் பற்றி பார்ப்போம். இந்த தனிமத்தில் 103 எலக்ட்ரான்கள் உள்ளன. இந்த அணுவுக்குள் எலக்ட்ரான்கள், K,L,M,N,O,P, என்ற வரிசையில் அடுக்கடுக்காக அமைந்துள்ள கோள அமைப்புகளிலுள்ள, உள் வட்ட பாதைகளில் அமைந்த விதத்தை கீழே உள்ள அட்டவணை மூலம் தெரிந்து கொள்ளலாம். எலக்ட்ரான்கள் நிரப்பப்படும் வரிசை முறையும் (Filling order) குறிப்பிடப்பட்டுள்ளது.



இங்கு நிரப்பும் வரிசை முறை மாறியுள்ளதை கவணிக்கவும்.முதல் 5 வரை ஒழுங்காக வரிசைப்படி நிரப்பிவிட்டு 05 க்குஅடுத்து 07 என்றும் அதையடுத்து தொடர்ச்சியா மாறி மாறி வருகிறது.அதாவது 1, 2, 3, 4, 5, 7, 6, 8, 10, 13, 9, 11, 14, 17, 12, 15, 18, 16 என்று வரிசை மாறி உள்ளது. அதைத்தான் எட்டை எட்டி விடும் அவசரம் என்கிறேன். கீழே உள்ள அட்டவணை, மந்தவாயுக்களின் (Inert gases or Noble gases ) அணு அமைப்பை விளக்குகின்றது.அல்லது எட்டாவது குழுவின் அணு அமைப்பை பற்றிய விவரம்.



மேற்கண்ட அட்டவணைப்படி பொருட்களுடைய அணுவின் கடைசி அடுக்கு K அடுக்காக (ஷெல்) இருந்து அதில் 2 எலக்ட்ரான்களும், அல்லது கடைசி அடுக்கு L,M,N,O,P, ஆகிய இவற்றில் ஏதாவது ஒன்றாக இருந்து அதில் 8 எலக்ட்ரான்களும் அமையப் பெற்றால் அவைகள் எந்த விதமான வினைகளிலும் ஈடுபடுவதில்லை. அவை ஒரு மாதிரியான ஆற்றல் சமநிலையை அடைந்து விடுகிறது. இதனால்தான் அவற்றை ஒரு விதத்தில் உயர்ந்த வாயுக்கள் என்றும் மற்றொரு விதத்தில் மந்தவாயுக்கள் என்றும் அழைக்கின்றனர். ஏனென்றால் இந்த மாதிரி கடைசி அடுக்கில் எட்டு எலக்ட்ரான்கள் அமைந்து விட்டால், அவைகள் எந்த வினைகளிலும் ஈடுபடுவதில்லை. ஆகவே அந்த சம நிலையை அடையவே பொருட்கள் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கின்றன.



இதில் ஸெனான் எட்டை எட்டுவதற்கு காட்டும் அவசரத்தைஅந்த வரிசையைப் பார்த்தாலே புரியும். அதாவது N அடுக்கில் 32 எலக்ட்ரான்களை 2,6,10,14 என்ற வரிசையில் நிரப்பி விட்டுத்தான் அடுத்த O அடுக்குக்கு போக வேண்டும். ஆனால் எல்லாத் தனிமங்களும் 2,6,10 ஐ நிரப்பி விட்டு அடுத்து நிரப்ப வேண்டிய 14 ஐ பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று அதற்கு அடுத்த O அடுக்கிற்கு சென்று எட்டை நிரப்பி விட்டு, முக்தி நிலை அடைந்து விட போட்டி போடுகின்றன.

கடைசியில் ஸெனான்தான் வெற்றி பெறுகிறது.அதற்கு பின் வரும் தனிமங்களாகிய சீசியம், பேரியம் முதலில் Pஅடுக்கின் உள் அடுக்கான 6s அடுக்கில் 2 எலக்ட்ரான்களை நிரப்பி பார்த்து விட்டு முயிற்சியை கைவிட்டன. அதற்கு பின் வந்து முயற்சி இல்லாமல் சிவனே என்று 4f ல் 14 ஐயும் நிரப்பியவர்களை லாந்தனைடுகள் என்று பெயரிட்டு சோம்பேறிகள் என்று தனியாக கட்டம் கட்டி வைத்து விட்டனர். அதற்கு பின் வருபவர்கள் 5d யில் 10ஐ நிரப்புகிறார்கள். பின் P அடுக்கிற்க்கான எட்டை எட்டி விடும் போட்டியை ஆரம்பிக்கின்றன. இந்த முறை வெற்றியை ரேடான் பெற்றது. இம்முறை 5f ல் கட்டம் கட்டப்பட்ட 14 பேருக்கு ஆக்டினைடுகள் எனப் பெயரிடப்பட்டது.

எட்டை எட்டி விட்டால் முக்தி நிலை, மோனநிலை, நிரந்தர அமைதி ஆகியவை கிட்டி விடும் என்பதற்கு ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், ஸெனான், ரேடான் ஆகிய மந்த வாயுக்களே உதாரணம். ஆற்றலின் சமநிலை ஏதோ ஒரு வகையில் எட்டால் நிறுவப் படுகிறது. இவைகள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவை. உலகில் எந்த விதமான பொருட்களுடனும் இவைகள் கலப்பதில்லை. வேதியல் வினைகளுக்கு அப்பாற்பட்டவை. நிறைகுடம் கூத்தாடுவதில்லை என்பதற்கு சரியான உதாரணம். இவைகளுக்கு நிறம், மணம், சுவை விருப்பு, வெறுப்பு கிடையாது. முற்றும் துறந்த யோகிகள் போன்றவர்கள். உயர்ந்த நிலைப்புத் தன்மை பெற்றவை. மிகவும் குறைந்த அளவில் காணப்படுபவை. அணு நிலையில் (எப்படி முனிவர்கள் நிர்வாண நிலையில் காணப் படுவார்களோ அது போன்ற நிலையில்) காணப்படுபவை.

அப்படி ஒரு மோன நிலை எய்துவதற்கான, எட்டை எட்டி விடும் எலக்ட்ரான்களின் முயிற்சியில் தான் எத்தனை தில்லுமுல்லு, கூட்டணி, பொதுவுடைமை, வேற்றுமை, விட்டுக்கொடுத்தல், பிரித்தாளுதல் அடேங்கப்பா சொல்லி மாளாது. எட்டை எட்டி விடும் எலக்ட்ரான்களின் முயற்சியில் ஏற்பட்டவைதான் நான், நீங்கள்,எனது எழுத்து, மாறுபட்ட பொருட்களின் உருவாக்கம், குறைந்தபட்ச நிலைப்புத் தன்மைக்கு ஏற்ற, பொருட்களின் இணைப்பு வகைகள், இயக்கம், காற்றோட்டம், நீரோட்டம், உயிரோட்டம் என கணக்கிலடங்காது. அதனால்தான் எட்டுக்குள்ளே உலகம் இருக்கிறது என்பதை நானும் ஆதரிக்கிறேன்.

பொருட்கள் எந்த நிலையில் இருந்தாலும் அமைதி நிலை அல்லது ஆற்றல் குறைந்த நிலையை எட்டிவிடும் வரை ஆற்றலை இழந்தோ, பெற்றோ சமநிலையை (Equalibrium) அடைவதற்க்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன.

இந்த உலகில் எத்தனை வகையான பொருட்கள் உள்ளனவோ, கிட்டத்தட்ட அத்தனை வகையான யுக்திகளைப் பயன்படுத்தி எலக்ட்ரான்கள் எட்டை அடைகின்றன. எல்லாவற்றிற்கும் விதிவிலக்கு இருப்பது போல் இங்கும் ஆதிமூலமான ஹைட்ரஜனுக்கு மட்டும் விதி விலக்கு உள்ளது. ஹைட்ரஜன் மட்டும் தனது கடைசி K அடுக்கில் ஒரே ஒரு எலக்ட்ரான் தான் கொண்டுள்ளது. இரண்டு எலக்ட்ரான்கள் அதாவது கூடுதலாக ஒரு எலக்ட்ரான் கிடைத்தாலே ஹீலியம் அடைந்த மோன நிலையை பெற்றுவிடும். ஆகவே ஹைட்ரஜன் சாதாரணமாக அணு நிலையில் இருப்பதில்லை. மூலக்கூறு (Molecule) நிலையில் தான் காணப்படும். அதாவது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் தங்களது எலக்ட்ரான்களை பொதுவில் போட்டு ஒவ்வொன்றும் தனது கடைசி அடுக்கில் இரண்டு எலக்ட்ரான்கள் வருமாறு இணைந்து கொண்டு இரட்டையர்களாகவே திரிகின்றன. அதாவது குறைந்தபட்ச மோனநிலை அல்லது முக்தி நிலை அடைந்தாக காட்டிக் கொள்கின்றன. இதனால்தான் உலகத்தில் மந்த வாயுக்களைத் தவிர எதுவுமே அணு நிலையில் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எட்டை எட்டி விடும் தத்துவத்தில்தான் இந்த அண்டத்தின் அனைத்துப் பொருட்களின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் காரணமான சூட்சுமம் அடங்கியுள்ளது.

நியானில் உள்ள எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் ஆகியவற்றின் அமைப்பை ஆராய்ந்தால் எல்லாவற்றிற்குமான காரணம் கிடைத்துவிடும். இயற்கையின் முழுமை அதில்தான் இருக்கிறது.அது சரி ஒருவேளை ஸ்ட்ரிங் தியரி ஏற்றுக் கொள்ளப் பட்டால் இந்த ”எட்டை எட்டி விடும் எலக்ட்ரானின்” நிலை என்ன? என்ற கேள்வி எழும். கவலையில்லை அப்பொழுதும் எட்டு என்பது அந்த நுண்ணிய ஆற்றல் ஸ்ட்ரிங்கின் நீளம் அல்லது அதிர்வெண் சார்ந்து ஒரு அலகாக அமைந்துவிடும். ”எட்டு” என்பதன் பெயர்தான் மாறியிருக்கும்.

ஆக்ஸிஸன் அணுவின் கடைசி அடுக்கான L அடுக்கில் ஆறு எலக்ட்ரான்கள் தான் உள்ளன. முக்தி நிலை அல்லது உன்னத நிலை அடைவதற்கு இன்னும் இரண்டு எலக்ட்ரான்கள் தேவைப்படுகிறது. ஆகவே ஒரு எலக்ட்ரான் உள்ள இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து தனது கடைசி அடுக்கில் எட்டு எலக்ட்ரான்கள் வருமாறு பார்த்துக் கொண்டு H2O என சொல்லப்படும் எளிதில் பிரிக்க முடியாத தண்ணீராக உருவானது.



அந்த தண்ணீரின் சிறப்புக் குணமே திட, திரவ, வாயு என்ற மூன்று நிலைகளிலும் இப்பூமியில் காணப்படுவது தான். தண்ணீருக்கு இந்த ஒரு சிறப்புக் குணம் மட்டுமில்லை பல உண்டு. தண்ணீரின் சிறப்பு பற்றி நூறு காரணம் சொல்வேன் என்று வைரமுத்து ஏற்கனவே ஒரு கவிதை பாடியுள்ளார். அந்தப் பாடலுடன் அடுத்து தொடருவோம்...............................



முந்தைய பதிவு

மேலும் படிக்க...!
உயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)
உயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 2)
உயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 3)



முன்பதிவுச் சுருக்கம்

அண்டத்தின் தோற்றம் பற்றி விளக்குவது பெருவெடிப்பு (BigBang) கொள்கை

உயிரின் தோற்றம் பற்றி விளக்குவது டார்வினின் பரிணாமக்(Evolution) கொள்கை.

பெரு வெடிப்பு கொள்கை ஒத்துக் கொள்ளப்பட்டதா? ஆம் அண்டத்திலுள்ள காலக்ஸிகள், நெபுலாக்கள், சூப்பர் நோவாக்கள், கருந்துளைகள்,(BlackHoles) நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள்,(சூரியமண்டலம்) ஆகியவை அனைத்தும் பொதுவான ஒரு மையத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விலகிச் செல்வது பலவகைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பினால் தோன்றிய முதல் பொருளாக ஹைட்ரஜன் என்னும் வாயுதான் எங்கும் இருந்தது, இருக்கிறது. பெரு வெடிப்பின் வெப்பத்தினால் சேர்க்கையும், பிரிவும்( Fusion & Fission) ஏற்பட்டு ஹைட்ரஜன் மூலம் ஏற்பட்ட பொருட்கள் பல வகைப்பட்டன. பூமியும் அதன் பொருட்களும் அவ்வழித் தோற்றம்தான்.

பூமியும் அதிலுள்ள பொருட்களும் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆனபோதிலும் புதிய பொருட்கள் தோன்றுவதும், பொருட்களின் மாற்றமும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பொருட்கள் எந்த வித வேதியல் வினைகளில் ஈடுபட்டாலும் ஒன்றிலிருந்து இன்னொன்றாகத்தான் மாறுகிறது என்றும், எந்த சூழ்நிலையிலும் முற்றிலுமாக அழிவதில்லை என்பதையும் கண்டுபிடித்தனர். எப்பொருளுக்கும் அழிவில்லை என்பதால் பொருள் அழிவின்மைத் (Conservation of Matter ) தத்துவம் தோன்றியது. பொருட்களின் தோற்றமும், மாற்றமும், இயக்கமும் ஏன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும் என்ற காரணத்தை ஆய்வோம்.

பொருட்களை ஆராயத் தொடங்கிய அறிவியலார்கள் உலகில் மொத்தமே 92 பொருட்கள்தான் உள்ளன என்றும் அவற்றின் மாறுபட்ட கலவையினால் எண்ணிலடங்கா பொருட்கள் தோன்றின எனவும் கண்டு கொண்டனர். ஆராய்ச்சியின் தொடர்ச்சியினால் அந்த 92 பொருட்களும் மிக நுண்ணிய அணுக்களால் ஆகியவை என்றும், அந்த அணுக்களும் இரண்டு நுண்ணிய அடிப்படை துகள்களால் ஆனவை என்றும் அறிந்தனர். உலகத்திலுள்ள 92 பொருட்களும் இந்த இரண்டு துகள்களின் மாறுபட்ட எண்ணிக்கையினாலும் அமைப்பினாலும் உருவானவையே என்று கண்டு பிடிக்கப்பட்டது. . அவைகள் எலக்ட்ரான், புரோட்டான் எனவும் இவை இரண்டும் சேர்ந்து உருவான மற்றொறு துகள் நியூட்ரான் எனவும் பெயரிடப் பட்டது.

பொருட்களில் இந்த துகள்கள் அமைந்த விதத்தை கண்டறிந்து பலர் (ஜேஜே தாம்ஸன், டால்டன், ரூதர் போர்டு) கூறினர். அதில் முக்கியமாகக் கருதப்படுபவர் நீல்ஸ் போர் என்பவராவர். அது பற்றிய ஆராய்ச்சி இன்றளவும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது அந்த நுண்ணிய துகள் பற்றிய கருத்துக் கோட்பாடுகளும் மாறிக் கொண்டே இருக்கிறது. இருந்தாலும் நீல்ஸ் போர் அறிவித்த அணு அமைப்பின் மாதிரியில் (Bohr's Model) இது வரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. புத்தம் புதிதாக வந்த ஸ்ட்ரிங் கொள்கையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றாலும், அதுவும் நீல்ஸ் போர் மாதிரியில் பெரிதாக எந்த மாற்றமும் எற்படுத்தப் போவதில்லை. ஆகவே அதை அடிப்படையாகக் கொண்டே தொடருவோம்.

Bohr's Model




இந்த நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் அணுவாக எப்படி அமைந்துள்ளது என நீல்ஸ் போர் வரைந்து விளக்கிய அமைப்புக்கு பெயர் ”போர் மாதிரி” (Bohr's Model) எனப் படுவதாகும். அதாவது சூரியமண்டலத்தில் சூரியனும், கிரகங்களும் எப்படி அமைந்துள்ளதோ அது போன்று, மையத்தில் நியூட்ரான், புரோட்டான்கள் அமைதியாக இருக்க எலக்ட்ரான்கள் அதைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. சுற்றிக் கொள்வதிலும் தங்களுக்குள்ளே சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டுள்ளன. அதை என்னவென்று அறிவோம்.இதுவரை நான் எழுதியது உங்களுக்கு சரியென்று பட்டால் நமக்குள் ”கெமிஸ்ட்ரி”ஒத்துப் போகிறது என்று அர்த்தம். ஆகவே இனிமேல் கெமிஸ்ட்ரியைப் பார்ப்போம். போன பதிவில் வைரமுத்து கவிதை ஒன்றைப் பார்ப்போம் என்று கூறியிருந்தேன். அதைத்தான் கீழே கொடுத்துள்ளேன்


எட்டுக்குள்ளே உலகம் இருக்கு ராமைய்யா
நான் புட்டு புட்டு வைக்கப் போறேன் கேளய்யா
………..கவிஞர் வைரமுத்து.

எட்டு எட்டாக பிரித்துப் பார் என்று மனிதனின் வயதை பிரித்து வாழ்க்கையை புட்டு புட்டு வைத்தார். அவர் பார்த்த பார்வை வேறு . நாம் பார்க்கப் போகும் பார்வை வேறு. அவர் மனித வாழ்க்கையைப் பார்த்தார், நாம் பொருட்களைப் பார்க்கப் போகிறோம். இந்த உலகம் மற்றும் பொருட்களையும் எட்டு எட்டாக பிரித்து ஆராயப் போகிறோம். நமது கவிஞருக்கு முன்பே எட்டின் மகத்துவம் எல்லோரையும் எட்டி விட்டது போலும்.

ஆங்கிலேயர்கள் இசையை சுரம் பிரிப்பது எட்டாகத்தான் பிரிக்கிறார்கள் (Octaves). சதுரங்க கட்டத்தில் கூட கட்டங்கள் எட்டுக்கு எட்டாகத்தான் உள்ளது. திசைகள் எட்டு. சித்திகள் எட்டு, ஜாதகத்தில் எட்டாமிடத்தை (ஆயுளை) பார்த்துவிட்டுத்தான் பலன் சொல்லவே ஆரம்பிக்கிறார்கள்.

எதுகை மோனையுடன் எட்டு நட்டம் என்பார்கள். வாகனத்தின் பதிவு எண்ணின் கூட்டுத் தொகை எட்டு வரக்கூடாது என்பார்கள். இறந்தவருக்கு எட்டாம் நாள் காரியம் செய்வதை ”எட்டுக்கு” என்பார்கள்.
.
கம்ப்யூட்டரின் அடிப்படை மெமரி அளவு 1 பிட்டில் ஆரம்பித்து 64 பிட்டாக வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் கூட எட்டு பிட்டுகளை அடுக்கி வைத்து கொண்டு அதைத்தான் மெமரியின் அளவுகோலான பைட் (Byte) என்று கூறுகிறார்கள். ஆக ஏதோ நன்மை தீமை எல்லா வகையிலும் எட்டு முக்கியத்துவம் அடைந்து விட்டது.

முதன் முதலாக 1789 இல் லாவாய்சியர் என்பவர், அதுவரை அறியப்பட்ட 33 மூலகங்களைப் (தனிமங்களை) பற்றி ஆய்ந்து தகவல் வெளியிட்டார். கண்டுபிடிக்கப் பட்ட அந்த மூலகங்களூக்குள் ஏதோ ஒரு வகையில் ஜாதி பிரிக்காவிட்டால் மனிதன் அவை முழுமை அடைந்ததாக நினைக்கமாட்டான் போலும். ஆகவே அவற்றையும் வகைப் படுத்த முதலில் மூன்று மூன்றாகப் (Triads) பிரித்துப் பார்த்தான். பின்னர் ஏழுஏழாக பிரித்தான் ஏழை அடிப் படையாக கொண்ட ஒருவித ஒற்றுமையைக் கொண்டு பிரித்தான். அதற்குப் பின் மூலகங்களின் இயல்பிற்கும் ஏழுக்கும் உள்ள தொடர்பு வலுப் பெற ஆரம்பித்தது. கிட்டதட்ட ஒரே மாதிரியான குணங்கள் கொண்ட மூலகங்களாகப் பிரிக்கும் போது தங்களுக்குள்ளும் சில குழுக்கள், கூட்டங்கள், உள்ளதை காட்டிக் கொண்டன. அதிலும் உயர்ந்தவை (Noble Metals), அபூர்வமானவை (Rare Earths), இடைப்பட்டவை (Transistion elements), மந்தமானவை (Inert Gases), உக்கிரமானவை (Alkali metals),உலோகமற்றவை(Non-metals) என குழுக்கள் உள்ளன.

அதிலும் ஒவ்வொரு குழுவிலும் குணங்கள் படிப் படியாக தீவிரமாகி இருக்கக் கண்டனர். அந்த அடிப்படையில், இருக்கின்ற மூலகங்களை வரிசைப் படுத்தும் போது ஏழுக்கு அடுத்து, வரிசையில் முதலாவதாக அமையும் மூலகத்தினால் சிறு குழப்பம் ஏற்பட்டது. பின்னர் எட்டை அடிப்படையாக வைத்து பிரித்தவுடன் குழப்பங்கள் மறைந்து விட்டது. ஆனால் அவைகளோ எட்டை அடிப்படையாக கொண்ட பிரிவினையை ஏற்கனவே தமக்குள் வைத்துள்ளன என்று பின்னர் அறிந்து கொண்டான். உலகத்தில் இருக்கின்ற மூலகங்களை அதாவது தனிமங்களை எட்டு எட்டாக வகைப் படுத்தினர்.

மேலை நாட்டவரின் ஸ்வரங்கள் எட்டு (Octaves) என்பதாலும் எட்டை அடிப்படையாக கொண்டு மூலகங்களின் புதிய அட்டவணை (Periodic Table) தயார் செய்யப்பட்டதால் இந்த அட்டவணையை எட்டின் விதிப்படி அமையப்பெற்ற அட்டவணை என்றனர்.

இந்தியர் சுரத்தை ஏழாகப் பிரித்தாலும் சொல்லும் போது என்னவோ ச,ரி,க,ம,ப,த,நி,ச என்கிறார்கள். எண் வரிசையில் சூன்யத்தை இடையில் செருகி 0,1,2,3,4,5,6,7,8,9 ஒன்பது வரை சொல்லி ஒன்று இல்லாதது போல் தோன்றினலும் இருக்குமாறு செய்தது போல் ச,ரி,க,ம,ப,த,நி,ச என்று பகுத்து சப்த ஸ்வரங்கள் என்றான்.ஆக ஸ்வரங்களின் அடிப்படையிலும் அட்டவணை அமையப் பெற்றதாகக் கருதலாம். ஆக இசைக்கும் எட்டுக்கும் சம்பந்தமுண்டு. அல்லது இசைக்கும் இயற்கைக்கும் பந்தமுண்டு.

முதலில் அந்த எட்டாவது மூலகத்தை மனிதன் அடையாளம் கண்டு, பிரித்து வைக்க மிகவும் சிரமப் பட்டுவிட்டான். ஏனென்றால், அது எவ்வகை குணமும் காட்டவில்லை. அதுதான் ”நியான்” எனப்படும் வாயு. இதை அடையாளம் கண்ட பின் அதன் அண்ணன்மார்களை எளிதில் கண்டு கொண்டனர்.

இந்த இடத்தில் மாண்ட்லீப் என்னும் ஆராய்ச்சியாளரைப் பற்றி கூறாவிட்டால் என்னுடைய உடம்பிலுள்ள ரசாயானத்திற்கு கூட கோபம் வந்துவிடும். உலக மக்கள் அனைவராலும் இன்றும் போற்றப்படும் அந்த அட்டவணையை வடிவமைத்ததில் முக்கிய பங்கு மாண்ட்லீவ் என்பவர்க்குத்தான். அதுவரையிலும் உலகத்தில் கிட்டதட்ட ஐம்பது தனிமங்கள்தான் அறியப்பட்டிருந்தது. இயற்கை தனது ரகசியங்களை அவ்வளவு எளிதாக யாருக்கும் காட்டி விடாது போலும். ஏனென்றால், இயற்கையின் ரகசியங்களை கண்டுபிடிப்பதற்குள் ஏராளமானவர்கள் உடல், பொருள், உயிர் இழந்திருந்தனர்.

தொடரும்.............

மேலும் படிக்க...!
எனது ஆத்திகன் vs நாத்திகன் என்ற பதிவிற்கு நன்பர் ரகுநாத் என்ற நறுமனம்-அன்பன் பின்னூட்டமாக பலகேள்விகள் எழுப்பியுள்ளார் அங்கேயே பதிலளிப்பதைவிட அதையே ஒரு பதிவாக பதிவிட்டேன்

கேள்வி: கடவுள் பற்றிய என்னுடைய வரையறை (Definition) ”அவர் வரையறைக்கு உட்படாதவர்”.
நன்றாக எழுதியுள்ளீர், அலசல் என்றும் சொல்லாம் ஆயினும் தங்களின் முடிவு / பதிவின் நோக்கம் நிதர்சனம் போல் பிம்பத்தை தான் உருவாக்குகின்றது.

பதில்: ”நிதர்சனம் போல் பிம்பத்தை ” இதில் முதலாவதாக முரண்படுகிறீர்கள்

கேள்வி: தங்களின் பதிவை ஒரு முறைக்கு இருமுறை படித்தபின்பே இங்கு எனது பதிவை வைக்கின்றேன்.
தாங்கள் பதிவின் இறுதியில் வரையறுத்த தங்களின் நம்பிக்கையில் முரண்படுகின்றீர்,
கடவுள் பற்றிய என்னுடைய வரையறை (Definition) ”அவர் வரையறைக்கு உட்படாதவர்”.
ஆனால் தங்கள் பதிவிலே வரையறுத்து விட்டீர்
கடவுளை நம்பாமல் கோவிலைப் பூட்டி வைப்பவன்.
கோவிலில் சிலையாக இருப்பவன் என்று வரையறுக்கிறீர்.
கதவை பூட்டும் பூசாரி என்று சொல்லாமல் கோவிலை புட்டும் பூசாரி என்று சொல்லும் போதே, தெளிவாக கடவுளை வரையறுக்கிறீர்.

பதில்:கடவுள் பற்றிய என்னுடைய வரையறை (Definition) ”அவர் வரையறைக்கு உட்படாதவர்” என்று முடிவில் சொல்வதால் அதையே முடிவாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று புரியாதா?

கேள்வி: “for what shall i wield a dagger, o lord?
what can i pluck it out of or plunge it into
when you are all the world?”

— 10th century Indian poet and saint, Devara Dasimayya

பதில்: உங்களுடைய ரகத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லையே இதைப் பற்றிய கேள்வி எதற்கு?

கேள்வி: குரங்கிலிருந்து வந்த மனித இனத்தின் பரிணாமம் சுமார் ஒரு மில்லியன் வருடங்களுக்கு மேலானது. குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்பதற்கு நிறையவே ஆதாரங்கள் உள்ளது அதில் சந்தேகம் வேண்டாம்.
நிறைய ஆதரங்கள் உள்ளது சந்தேகம் வேண்டாம் என்கிறீர், இளமை பருவத்தை கடந்த பின் மனிதனை கடவுள் படைத்தான் என்று ஒருவன் நம்புதல் வேண்டும் அல்லவா ?
ஒருவன்
கடவுள் இருக்கு என்பதற்கு ஆதாரத்தை காட்டு
கடவுள் இல்லை என்பதற்க்கு ஆதாரத்தை காட்டு
மற்றொருவன் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதற்கு ஆதரத்தை காட்டு
இங்கு ஆதாரம் எனத் தாங்கள் முன்வைப்பது யாது ?
இதனை ஒரு முறக்கு இருமுறை படித்து நான் கூற விழைவதை புரிந்து விளக்கம் அளிக்கவும்.

பதில்: எழுதியவன் ஒரு முறைக்கு இருமுறை படிக்கவேண்டிய அவசியமில்லை.. நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டு சரியாக கேள்வி கேட்டால் போதும்.

கேள்வி: இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருட்களும் தானாகத் தோன்றியது
கடவுளை நம்புவனுக்கு ஒரே ஒரு நம்பிக்கைதான் கடவுள் மட்டும்தான் தானக தோன்றினார்
பதிவின் முடிவில் தாங்கள் ஆத்திகன் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். கடவுள் மட்டும் தானாக தோன்றினார், மற்றவைகள் தானக தோன்றாமல் பிறரால் தோற்றுவிக்கபட்டது, தோற்றுவித்தவர் கடவுள், அவ்வாறு தானே ! குரங்கை கடவுள் தோற்றுவித்து மனிதனை மட்டும் பரிணாமவியல் என்ற நிகழ்வில் விட்டுவிட்டார் கடவுள் !

பதில்: கேள்வியில் தெளிவில்லை. நான் ஆத்திகனுமல்ல நாத்திகனுமல்ல. சமூக அக்கறைக்காக யாரை வேண்டுமானாலும் தட்டிக் கேட்க தயாராக உள்ள மனிதன்.
கேள்வி: தங்களின் பதிவின் "முடிவு" அது தானே, வரையறைக்கு உட்படாதவரை தாங்கள் கடவுள், கடவுள் இவ்வாறு என பல இடங்களில் வரையறுகீற்கள்.

பதில்:பல இடங்களில் கடவுளைப் பற்றிய வரையறை நான் அரை குறையாக சொல்வதாக உங்களுக்கு தோன்றினாலும் முடிவாக சொல்லப்படுவதுதான் முழுமையானது. ஆகவே அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

கேள்வி:அதைச் சார்ந்த தங்களின் ஒரு பின்னுட்டம்
Quote:
//தொடர்ந்து வருகை தாருங்கள் உங்களை விபூதி தட்டுடன் நிப்பாட்டுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்//

பதில்: ஆமாம் அந்த பதில் அவருக்கு.
கேள்வி ஒன்றாயினும் ,கேட்கப் படும் நபரை பொறுத்துதான் பதிலும் அமையும்.காலம் மாறி கேட்கப் படும் கேள்விக்கும் பதில் மாறுபடும் என்பதையும் குழந்தையின் கேள்விக்கான பதிலும் முதியவரின் கேள்விக்கான பதிலும் மாறுபடும் என்பதையும் முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஆகவே அதை இங்கே குறிப்பிடவேண்டாம்.
உங்களுடைய தன்விவரம் கொடுத்தால், பொத்தாம் பொதுவாக பேசாமல் தெளிவாக விவாதிக்கலாம். ஏனெனில் விவாதமும் விவாஹமும் சம அந்தஸ்தில் இருந்தால் தான் முழுமை ஏற்படும். நீங்கள் நாத்திகரா அல்லது ஆத்திகரா? நாத்திகர் என்றால் பெரியார் பாசறையில் இருப்பவரா? கடவுள் மறுப்பு மட்டுமா அல்லது மூடநம்பிக்கை ஒழிப்புமா? எவையெல்லாம் மூட நம்பிக்கை? உங்களுடைய வயதென்ன? நீங்கள் என்ன மதம்? இஷ்டமிருந்தால் சொல்லுங்கள். சொல்லாவிட்டாலும் தொடருங்கள். முதலில் தலைப்பை படியுங்கள் இது ஆத்திகம் vs நாத்திகம் அல்ல ஏனென்றால் அது தீராத பிர்சனை. நாசாவின் கேண்டீனிலும் இந்தப் பிரச்னை உள்ளது. நம்மாலும் தீர்க்க முடியாது. ஆனால் இந்த உளுத்துப்போன நாத்திக வாதத்தால் கால விரயமும், சமூக ஒழுக்கக் கேடும் தான் மிச்சம் என்பது இந்த சமூகத்திற்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.ஆகவே
”ஆத்திகன் vs நாத்திகன்” என்று மனிதனைப் பற்றி விவாதிப்போம் .


கேள்வி: ”//பூசாரியாய் இருப்பவனும் கடவுளை நம்புவதில்லை” என்பதில் என்ன வரையறைக் குழப்பம்?//

கோயிலை பூட்டுவதால் அவர் நாத்திகராவார், ஏன் ? கடவுளை நம்பாமல் கோயிலை பூட்டுகிறார்... கடவுள் என்பதை தங்களால் விளக்க முடியவில்லை explain / define, ஏனெனில் அது நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கிறது, தனி மனிதனின் மனநிலைக்கு ஏற்ப, அவ்வாறு தானே.

பதில்: கடவுள் என்பதை விளக்கமுடியாது என்பதைத்தான் விளக்கியுள்ளேன். புரிந்து கொள்ளாமலே விவாதம் பன்னுகிறீர்கள். I explained by my definition.

கேள்வி: நான் ஒன்றை பதிவிட்டேன், அதை மீண்டும் பதிவிடுகின்றேன்... தாங்கள் அதில் என்ன புரிந்துக் கொண்டீர் என்பதனை தெளிவாக்கவும்

“for what shall i wield a dagger, o lord?
what can i pluck it out of or plunge it into
when you are all the world?”

— 10th century Indian poet and saint, Devara Dasimayya
இதை விட்டுவிட வேண்டாம், மறவாமல் இது பற்றிய தங்களின் கருத்தை தெரிவிக்கவும்.

பதில்: நீயே யாவுமாகி நின்றபின் ,ஆண்டவனே
எனக்கென்ன வேலை ?
என்கிறான் தேவார தாசிமய்யா

அவ்வாறு தெளிவாக உணர்ந்துவிட்டநிலையில் ,ஆண்டவனே ,கொல்லுவதும் கொல்லப்படுவதும் நீயாகிவிடுவதால் அந்த முதல்பாதி வேலையை நான் செய்கிறேன் என்பான் லொள்ளு பிடித்தவன். அதனால்தான் மனிதனை நல்வழிப்படுத்த ”நீ இயல்பாய் செயலாற்று பலனை நான் ஏற்றுக் கொள்கிறேன் ” என்கிறது பகவத் கீதை.

கேள்வி: இந்த பகுத்தறிவை விட்டுவிடுவோம், அது அரசியல் சார்ந்த பகுத்தறிவு, இயல்பாக அறிவை எடுத்துக் கொள்வோம், 40 வயதுக் மேல் நாத்திகம் பேசினால் அது எவ்வகையில் மூளை குன்றிய நிலை, ஏனெனில் தாங்கள் நாத்திகனாக இருந்து ஆத்திகனாக அந்த நிலையில் தெளிவை உணர்ந்திருக்கிறீகள் என்பது தங்களின் பார்வை, அதனால் தானோ தொடர்ந்து வருகை தாருங்கள் உங்களை விபூதி தட்டுடன் நிப்பாட்டுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன் என்று கூறியுள்ளீர்கள். இங்குள்ள சமூக மன நிலையை மனதில் வைத்துக் கொண்டு மக்கள் அனுகினால் அவ்வாறு தான் தெரியும்... இதைச் சார்ந்து
தங்களுக்கு பதில் கிடைக்காத கேள்விகள் எவை அதாவது நாத்திகனா இருந்தபோது, தற்போது தெளிவான பதில் கிடைத்து ஆத்திகனாக உள்ளீர்கள், கேள்விகள், பதில்கள் இரண்டையும் பகிர்ந்துக் கொள்ளவும்.

பதில்: பதில் கிடைக்காத கேள்விகளை எழுத 4० வருடங்களுக்கு மேலாகும். உதாரணத்துக்கு விருமாண்டி பாணியில், உங்களுக்கு எங்கே எப்பொழுது அரிக்கும் என்று என்னால் ஏன் சொல்ல முடியவில்லை. இதற்கான நேரடியான பதில் கிடைக்கும் வரை நான் நாத்திகனல்ல

கேள்வி: நன்று, ஆதாரம் என்பது என்ன, அதன் அவசியம் பற்றிய தங்களது கருத்து?

பதில்: இந்தக் கேள்வி கேட்கப்பட்டதன் அர்த்தம் விளங்கவில்லை.

கேள்வி://ஆண்டவன் ஆற்றலையும் சில விசைகளையும்,சில விதிகளையும் ஒரு புள்ளியில் இருந்து வெடிக்கச் செய்து எந்தக் கட்டத்திலும் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.//
இது முன்முடிவு... a premise.

பதில்: அறிவியலின் ஆரம்பம் அனுமானம்


மேலும் படிக்க...!

வாங்க டீ சாப்பிடலாம்.

இரண்டு தொடர்களுக்கு அடுத்த பாகங்களை எழுத நேரமில்லை. இந்தச் சூழலில் ஒரு மாதம் ஒடிவிட்டது. நவம்பர் மாத பதிவிற்காக சுறுசுறுப்பாக ஏதாவது எழுதலாம் என்று யோசித்து முதலில் டீ சாப்பிடலாம் என்ற நினைப்பில் தோன்றியவைகளை பதிந்துள்ளேன்.

நான் இங்கு டீ, எந்தநாட்டிலிருந்து வந்தது , எப்படி வந்தது,எப்படி செய்வது என்றெல்லாம் சொல்லப் போவதில்லை .அதனுடைய வேறொரு பரிமானத்தைப் பற்றிச் சொல்லப் போகிறேன்
"நான் டீ,காபி சாப்பிடுவதில்லை "என்று பெருமையாகச் சொல்பவர்களின் பின்னனியை ஆராய்ந்தால் சில உண்மை புலப்படும். அவை

1) அவர்களுக்கு நன்பர்களே இருக்கமாட்டார்கள்
2)சோம்பேறியாய் இருப்பார்கள்.
3)இளைஞர்களாக இருந்தால் அவர்களுக்கு முகத்தில் பரு இருக்கும்
4) வயதானவர்களாக இருந்தால் அவர்களுக்கு வயிற்றில் அல்சர் இருக்கும்.
5) ஏழ்மையான குடுபத்தில் இருப்பார்கள்.
6)மொத்தத்தில் கஞ்சர்களாக இருப்பார்கள்.
7)24 மணிநேர குடிகாரர்களும் டீ சாப்பிடமாட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை டீ,காபி சாப்பிடுவதில் தவறேதுமில்லை. ஏழைகளின் அல்லது உழைக்கும் வர்க்கத்தின் புத்துணர்ச்சி பானமாக இருக்கிறது. ஆண்களுக்கு” டீ ”என்றால் பெண்களுக்கு காப்பி என்று ஆகிவிட்டது. பொதுவாக சைவர்கள் காபியை விரும்பி சாப்பிடுவதால் சிலரால் டீ அசைவமாக கூட கருதப் படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் அது ஒரு பொருளாதாரப் பிர்ச்னையாக மாறிவிட்டது.2008ல் ஒரு டீ 2 ரூபாயாக இருந்தது, கலைஞரின் புண்ணியத்தில் 5 ரூபாய்க்கு வந்து விட்டது. அவர் தனது பேரப் பிள்ளைகளின் டீச் செலவை வைத்து டீயின் விலையை 15 ரூபாயாக தீர்மானித்தார். அதில் இந்த குறைந்தபட்ச உத்திரவாதத்துடன் கூடிய உபசரிப்பு பானமான டீயின் விலை ஏறியதால் ஏழைமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

ஒரு திரைப்படத்தில் .
கவுண்டமணி ஒரு கிராமத்தில் வைத்தியம் பார்த்து கொண்டிருக்கிறார். அப்பொழுது அவரிடம் ஒருவர் தலையை சொறிந்து கொண்டு வருகிறார்..
வ‌ந்த‌வ‌ர் இளிக்கிறார்..
"நான் நூறு வ‌ருஷ‌ம் வாழ‌ணுங்க‌..அதுக்கு நீங்க‌ தான் ஒரு ம‌ருந்து சொல்ல‌ணும்.."
"சொல்லீருவோம்...மொத‌ல்ல‌ இங்க‌ வா. நீ காபி டீ.. குடிப்பியா?"
”இல்லைங்க”
”பீடி , சிகரெட் குடிப்பியா”
"அந்த‌ ப‌ழ‌க்க‌மே ந‌ம்ம‌க்கிட்ட‌ இல்லீங்க‌.."
"மது மாது பழக்கம் உண்டா?.."
"அய்ய‌ய்யோ..இல்ல‌வே இல்லீங்க‌.."
........................
"அப்ப‌ என்ன‌த்துக்குடா நீயெல்லாம் நூறு வ‌ருஷ‌ம் வாழ‌ணும்..ம‌வ‌னே நீ நாளைக்கே செத்து போயிரு..இல்ல நானே ம‌ருந்து குடுத்து கொன்னுடுவேன்..காலைலேயே வ‌ந்துட்டானுங்க‌டா ”

இது கொஞ்சம் அதிகம் தான்.
ஆனால் டீ சாப்பிடுவதில் தப்பில்லை . டீ என்பது இன்றைய காலகட்டத்தில்
நீண்ட ஆயுளுக்குத் தேவைப்படும் ஆண்டி ஆக்ஸிடண்ட் (Anti Oxidant) அதிகமுள்ள பொருட்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. அதுமட்டுமில்லாமல் டீ அதிகமாகச் சாப்பிட்டு இறந்தார்கள் என்பதற்கு புள்ளி விபரம் ஏதுமில்லை.

உழைப்பில் ஆர்வமுள்ளவர்கள் தங்களுக்கான புத்துணர்ச்சி பானமாக டீ யை பாவிக்கிறார்கள்.
மூளை வேலைக்காரர்களுக்கு வேலை செய்யும் போது தலையில் சூடு ஏறுகிறது . அவர்கள் டீ அருந்த எடுத்துக் கொள்ளும் கால இடைவெளியில் அது தன்னை ஆசுவாசப் படுத்துகிறது. புற உறுப்புகள் வேலைசெய்யும் போது அக உறுப்புகள் அமைதி காத்து பொறுமை இழந்து விடுகிறது. உடலுழைப்பு உள்ளவர்களுக்கு அந்தச் சிறிது நேர இடைவெளி, ஓய்வையும், அமைதியாக இருந்த வாய், நாக்கு, குடல் ஆகியவற்றிற்கு சிறிது வேலையும் கொடுக்கும் போது உடல் சமநிலை எய்துகிறது. இந்த நாக்கு இருக்கிறதே அது மிகவும் பொல்லாதது. அதற்கு கண்டிப்பாக வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வெகு நேரம் நமது உறுப்புகள் அசையாமல் இருந்தால் மரத்துவிடும். அதிலும் வயிறோ தனக்கு உணவில்லை எனில் குடலையே சாப்பிட்டுவிடும்.

இப்படித்தான் சுனாமியால் பாதிக்கப் பட்ட குழந்தை ஒன்று ,முகத்தில் பட்ட அடியினால் வாயைத் திறந்தால் வலிக்குமென்று பல்லிடுக்கு வழியாக திரவ ஆகாரமாக சாப்பிட்டு வந்தது.மூன்றுமாத காலத்தில் கீழ்த்தாடை எலும்பு மூட்டுகள் இறுகி தாடை திறக்க முடியாத அளவுக்கு அதைச்சுற்றிலும் எலும்பு வளர்ந்து விட்டது.. பின்னர் இந்திய அளவில் பெரிய நிபுனர் குழு வந்து அறுவைசிகிச்சை செய்து தாடை எலும்புகளை சரி செய்ய வேண்டியதாயிற்று.

இந்த இடத்தில் உடலியலில்”சந்துருவின் தங்க விதி”(Chandru's golden rule)யைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. ”அடிக்கடி பயன்படுத்தாதது எதுவும் விரைவில் பயன் படாமல் போய் விடும்.”என்பதுதான்.

ஆகா ஒரு டீ க்கு இவ்வளவு வீடுகட்டணுமா(Build up) என்று கேட்கிறீர்கள். அது ஒரு புத்துணர்ச்சி பானமட்டுமில்லை அது ஒரு ஆரோக்கியமான மருந்து என்பதால்தான் இவ்வளவு கட்ட வேண்டியதிருக்கு. நகரத்தில் சொல்வார்கள்,” தூங்கும் போது கூட காலை ஆட்டிக் கொண்டே தூங்குடா இல்லைன்னா உயிர் போய்விட்டதாக எடுத்து புதைச்சிருவானுக “என்று அந்தக் கதைதான் அடிக்கடி டீ குடிப்பதும். வாய், வயிறு,குடல் இவற்றை அடிக்கடி வேலை வாங்க வேண்டும்.

கிராமத்தில் கஞ்சர்களைப் பற்றி பேசும் போது சொல்வார்கள் ”அவன் உமுறுக் குடிச்சுக்கிட்டே உலகத்தை சுத்திவருவான்” ஆக எப்படியோ ஒன்றைக் குடித்தால்தான் புத்துணர்ச்சி என்பது நிச்சயம் (உமுறு - எச்சில்)

இந்த டீ உங்கள் ஆரோக்கியத்திற்கான டானிக் மட்டுமில்லை. நட்பை வளர்க்கும் காம்ப்ளான். பாசமான பசங்க முன்பெல்லாம் (இப்ப உஜ்ஜாலாவுக்கு மாறிட்டாங்க).நன்பர்களைப் பார்த்துட்டா வாடா மாப்பு டீ சாப்பிடலாம் என்று கூப்பிட்டு போய் ”ஒன் பை டூ ”என்று சொல்லி டீக்கடைக்காரரை இழுத்து கட்டுவாங்க (டென்சன் படுத்துறது) .கடைசியில் “ஒன் பை டூ தானே, மாப்பு காசை நீ கொடுத்துரு” என்று சொல்லும் போது நட்பு தடுமாறினாலும் பிற்காலத்தில் மலரும் நினைவுகளில் ஒன்றாகிவிடும்.

சிலர் இருக்கிறார்கள் அவர்கள் ”வாங்க மாமா டீ சாப்பிடுங்க” என்று சொல்லி கூட்டிப் போய் டீக்கடைக்காரரிடம் ”மாஸ்டர் மாமாவுக்கு ஒரு டீ “ என்று சொல்லி வாங்கி கொடுத்துவிட்டு நீங்கள் பரிதாபமாக டீக் குடிப்பதை பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருப்பார்கள்.ஆகவே அவர்களிடம் ஏமாந்து அந்த டீயைக் குடிக்காதீர்கள். ஆளைப் பொறுத்து அவர்களிடம் மாப்பிள்ள நான் பூஸ்ட் தான் சாப்பிடுவேன் என்றோ அல்லது சாப்பிட்டா இரண்டும் பேரும் சாப்பிடுவோம் என்றோ அல்லது என்னிடம் காசு இருக்கிறது இரண்டும் பேரும் சாப்பிடலாம் என்று சொல்லியோ சமாளித்துக் கொள்ளுங்கள்.

கலைவாணர் என் எஸ் கே, தன் காதலைச் சொல்ல தனது காதலியின் வீட்டிற்குச் சென்றாராம் அவரை விருந்தோம்பும் விதமாக அவரது காதலி ”என்ன சாப்பிடுகிறீர்கள் டீயா காபியா?” என்று கேட்டாராம்..அதற்கு கலைவாணர் ”எனக்கு டீ ஏ மதுரம்” (T.A.Mathuram)என்றாராம். (மதுரம் என்றால் இனிமை என்று பொருள்மட்டுமல்ல அவரது காதலியின் பெயரும் அதுதான்).

நீங்கள் வீட்டில் இருந்தால் உங்கள் மனைவியை அடிக்கடி டீ கேட்டு வாங்கிப் பருகுங்கள், கேட்டால் ”உன்னைப் போல் யாரும் டீ போடமுடியாது என்று சொல்லுங்கள்,அது என்னமோ தெரியலை நீ டீ போட்டா நல்லாருக்கு ”என்று சொல்லுங்கள். ஏனென்றால் பிற்காலத்தில் சன்டையைத் தீர்க்கும் சமாதானக் கொடியாக இந்த டீயை இருவருமே பயன்படுத்தலாம்.

வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிக்க டீ கொடுங்கள். எப்பொழுதும் வீட்டில் நல்ல டீத்தூள் வைத்திருங்கள். பால் இல்லை என்றாலும் பரவாயில்லை கறுப்பு டீயாக கொடுங்கள்.வீட்டில் இதெல்லாம் நடைமுறைப் படுத்த நீங்கள் ஒருநாளைக்கு இரண்டு டீ யாவது சாப்பிட வேண்டும். உங்களது நன்பர் வீட்டிற்கு சென்று வெகு நேரமாகியும் டீ வரவில்லை என்றால் நன்பரை அழைத்து ”வாப்பா வீட்டுல தொந்தரவு பன்னாம வெளிய போய் டீ சாப்பிட்டு வரலாம் ”என்று சொல்லி அவருக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுங்கள்.

இப்படித்தான் சமீபத்தில் எனது வேலைக்காக ஒரு ஆளை வெளியூரிலுள்ள எனது நெருங்கிய உறவினரை பெருமையாகப் பேசி அவர் வீட்டிற்கு அனுப்பினேன். அவர் போய்விட்டு வந்து என்னங்க ஒரு டீ கூட வாங்கித் தரவில்லை என்று குறைபட்டார். இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் கவனமாக இருங்கள்.அனுப்பியவர் பெயரையும் உங்கள் பெயரையும் காப்பாற்றுங்கள்.

உங்களுக்கு டீ பிடிக்கவில்லை என்றால் வாழ்க்கையில் எதையாவது சாதித்து ஒரே ஒருமுறையாவது ”அணுவுடன் காப்பி” (Coffee with Anu )சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

என்னுடைய இந்தப் பதிப்பில் உங்களுக்கு முற்றிலும் முரண்பாடு இருந்தால் பீருடன் வாருங்கள் ”சந்துருவுடன் பீர்” சாப்பிட்டுக் கொண்டே விவாதிக்கலாம்.

மேலும் படிக்க...!
மனித மூளை கம்ப்யூட்டரை விட சிக்கலான ஒரு அமைப்பு கொண்டது. காட்சிகள் சம்பந்தப் பட்ட விஷயத்தை நினைவு கொள்ள அதற்கு அதிக நினைவிடம் தேவை என்பது கம்ப்யூட்டர் கண்டுபிடித்த பின்புதான் தெரிய வந்தது. ஏனென்றால் 1980 வரை ஒரு போட்டோவை கம்ப்யூட்டரில் பார்ப்பது அரிதாக இருந்தது. இன்றைக்கு மோட்டிகன் என்ன சைஸில் இருந்ததோ அதுதான் அன்று அனிமேஷன் விண்டோவின் சைஸ். அன்றைக்கு ஒரு ஹார்ட் டிஸ்க்கின் மெமரி சைஸ் 640 MB என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.இன்று செல்போனுக்குள் வைக்கும் விரல் நகம் அளவு உள்ள சிப்பில் 2 ஜிபி உள்ளது

ஆனாலும் நமது மூளை கம்ப்யூட்டரை போல் அல்லாது சில விஷயங்களை எளிதாக நினைவிலிருந்து எடுத்து வர ஒருவித யுக்தியை கையாள்கிறது. ஒரு நினைவை இன்னொன்றுடன் சம்பந்தப் படுத்தி வைத்துக் கொள்வதன் மூலம் எளிதில் நினைவுக்கு (Data access or Retrieve) கொண்டுவர முடிகிறது.ஒரு விஷயத்தை இன்னொன்றுடன் தொடர்பு படுத்துவதால், அதை வேண்டும் பொழுது நினைவுக்கு கொண்டு வரமுடிகிறது. இதற்காகத்தான் ஒரு விஷயத்தை ஒரு கதையுடன் பின்னிச் சொல்வார்கள். அல்லது உவமானத்துடன் சொல்வார்கள்

பொதுவாக எல்லோரும் சில வரிகளை படித்துக் காண்பித்துவிட்டு திரும்பவும் சொல்லச் சொன்னால் திணறுவார்கள். அதையே ராகத்துடன் பாடி சொன்னால் எளிதாக யாரும் திருப்பிச் சொல்லிவிடுவார்கள். கச்சேரியில் பார்த்து இருப்பீர்கள் நாதஸ்வரக்காரர் எவ்வளவு நேரம் வாசித்தாலும் தவில்காரர் தனது தவிலில் அதே சங்கதியை பிட்டு விடாமல் அடித்து கான்பிப்பார். இதெல்லாம் ராகம் சம்பந்தப் பட்ட விஷயம். திருமண வீட்டில் பெண்கள் நலுங்குப் பாடல்களை எவ்வளவு நீளமாக பாடினாலும் நம்ம நாதஸ் அப்படியே முழுவதையும் ராகமாக நினைவு படுத்தி, தனது வாத்தியத்தில் பாடிக் காண்பிப்பார்.

தொலைகாட்சி விளம்பர பாடல்களை குழந்தைகள் அட்சரம் பிசகாமல் பாடுவதைக் கேட்டிருப்பீர்கள் ஆனால் பாடத்தை நினைவில் கொள்ளமாட்டார்கள். வார்த்தைகளை நினைவில் பத்திரப் படுத்த இந்த இடத்தில் வார்த்தைகள் ராகத்துடன் கோர்க்கப்படுகிறது. ராகத்துடன் பாடுவதற்கு வார்த்தைகள் ஒத்துழைக்க வேண்டும். வார்த்தைகள் ஒத்துழைக்காத பட்சத்தில் வார்த்தைகளை சிறிது மாற்றி உச்சரிக்கலாம் தப்பில்லை. முதல்வன் திரைப் படத்தில் ”முத்தல்வனே” ”வன்னே வன்னே வன்னே வன்னே” என்பது போன்று கடித்து துப்பலாம். இதுவே கொஞ்சம் அதிகம்தான். அதற்காக ஆங்கிலப் பாடல் ராகத்தில் பாடுவதாகக் கூறிக் கொண்டு வார்த்தைகளை அடித்து சுருக்கி, இழுத்து நீட்டி மெட்டுக்கு தோதாகக் கொண்டு வந்து என்னவென்று புரியாத மாதிரி பாடித் தொலைக்கிறார்களே அது கருமத்துக்கு ரொம்ப அதிகம்.

இங்கே சிலர் பாடுவதை கேட்டுப் பாருங்கள் புரியும்.

(இதற்குத்தான் சொல்வார்கள் ”தரத்தை தரம் அறியவேண்டும் தடிக்கம்பை நாய் அறிய வேண்டும்” என்று.நமது தரம் தெரிந்து கொண்டு மேடை ஏற வேண்டும்.இல்லாவிட்டால் இந்த கேவலத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.: இது அந்த விஜய் டிவி வீடியோவிற்கான கமெண்ட்)

எதிலும் ஒரு ரைம் இருக்கவேண்டும் அதைத்தான் எதுகை மோனை என்கிறார்கள். நன்பர்கள் பேசும் பொழுது கூட க னாவுக்கு கா னாவா என்று நக்கல் அடிப்பார்கள். உங்களுக்கு ஹிந்தியில் 1,2,3 என்ற எண் வரிசை சொல்லத் தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள் பெரும்பாலோர் தெரியாது என்பார்கள். ஆனால் அவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். ”ஏக்தோ தீன் சார்பான்ஞ்” என்ற ஹிந்திப் பாடலை ஆரம்பியுங்கள் அவர் என்ன பாடுகிறோம் என அறியாமலே ஹிந்தியில் எண்களுக்கான வரிசையில் 13 வரை பாடி முடித்து விடுவார்.அதுதான் கவிதையின் மகத்துவம். இதை யெல்லாம் உணர்ந்த தமிழர்கள் மிகப் பழங்காலத்திலே, சொல்லும் விஷயம் எதுவாயினும் கவிதையில் சொல்வோம் என வழிவகுத்தனர். அந்த வழியில் வந்தது தான் ராகம், மெட்டு, கவிதை.அதற்கு அடுத்த கட்டமாக வந்தவைகள்தான் சீர், தளை, எதுகை மோனை என்ற யாப்பிலக்கணம்.

ஒரு கருத்தை விளக்க முதலில் உரைநடையில் விளக்குவது, பின் பழகு தமிழில் சொல்லுவது. அடுத்து பண்பட்ட தமிழில் பேசுவது அதற்கு அடுத்து எதுகை மோனையுடனும், பின் அடுக்கு மொழியிலும் பேசுவது பிறகு உவமான உவமேயங்களுடன் பேசுதலாகும். பின்னர் உவமானத்தை மட்டும் சொல்வதாகும். பாமரத்தமிழன் கூட தான் பேசும் போது ராகம் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழில் அர்த்தமற்ற சொற்களையும் அன்றாடம் பயன்படுத்துகிறான். உதாரணமாக

சத்தம் கித்தம் போடக் கூடாது,
பஸ்ஸுக்கு கிஸ்ஸூக்குன்னு அலையாம ட்ரெயின்ல வந்துரு.
பாட்டுகீட்டு ன்னு பாடுங்க ஆனா அதுல மெட்டுகிட்டு இருக்கனும்
கவிதை கிவிதைன்னுட்டு எவனாச்சும் வந்தீங்க.........
யாப்புகீப்புன்னு நீங்கதான் கழுதையா கத்துறீங்க எவன் கேக்றான்( உதாரணத்துக்குதாங்க, உடனே ஆதாரத்தோட சண்டைக்கு வராதீங்க)
நாய் கீய் வந்தா கல்லக் கில்ல கொண்டு எறிந்து விடாதே கடித்து கிடித்து தொலைந்துவிடும்.

இதுல கித்தம், கிஸ்ஸு,கீட்டு, கிவிதை,கிட்டு, கீப்பு, கீய், கில்ல, கிடித்து இவை எல்லாம் அர்த்தமற்றவை என எல்லோருக்கும் தெரியும்.ஆனாலும் ஓசைநயத்துக்காக இவற்றை சேர்த்துப் பேசுகிறான்.

தமிழன் மொழிப் பற்று மிகுந்தவன். மற்றவர்களெல்லாம் வேற்று மொழியில் திட்டினால்தான் தெரியாமல் சிரித்துக் கொண்டே இருந்து விடுவார்கள்.ஆனால் தமிழனை தமிழில் திட்டினால் பொறுத்துக் கொள்வான்.ஏனென்றால் திட்டுவது யாராக இருந்தாலும் காதில் விழும் போது தமிழாக இருப்பதால் மெய் மறந்து விடுகிறான். தமிழில் பாடினால் தலையையே கொடுத்தவனின் கதையும் கலம்பகம் பாடினால் பரலோகம் நிச்சயம் என்று தெரிந்தும் பாடச்சொல்லி கேட்டவனும் தமிழன்தான் ..காட்டு மிராண்டி என்று திட்டினால் சிலை வைப்பவனும் தமிழன்தான். அடுக்குமொழியில் பேசினால் ஆட்சிப் பொறுப்பையே கொடுத்து விடுவான்.என்பது நிகழ்கால சான்றாகும்.இங்கெல்லாம் தமிழுக்குதான் முக்கியவத்துவம் கொடுக்கிறான்.ஏனென்றால் தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்.

ஹிட்டான பாடல்கள் சிலவற்றில் இதைக் கவனித்திருப்பீர்கள்.

ஒருவன் ஒருவன் முதலாளி,
தில்லானா தில்லானா தித்திக்கின்ற
கண்ணும் கண்ணும் பேசியது
கட்டிப்பிடி கட்டிப்பிடி டா
தீப்பிடிக்க தீப்பிடிக்க
கண்ணே கண்ணே கொல்லாதே
கண்டேன் கண்டேன்
(ஆதவன் படப் பாடல்கள் முழுவதும்)


ஒரு வார்த்தைக்கு ஒத்திசைவா (Harmony) அதே வார்த்தையைப் போட்டு பாடுகிற போது நன்றாக அமைந்து விடுகிறது. இப்படி இருக்கும் போது வரிக்கு ஒரு வார்த்தை போட்டு ஒற்றைச் சீரில்(வார்த்தையில்) கவிதை எழுதினால் அதில் என்ன சங்கதி வைக்க முடியும்.

இப்படி அநேகமாக எல்லா வார்த்தைகளுக்கும் ஒட்டும் மெட்டும் போட்டு பேசுபவர்கள் அதிகமாக இருக்கும் பொழுது கவிதை பாடுகிறேன் என்று சில பேர்வழிகள் ஓசை நயமில்லாமல் ஒற்றை வார்த்தைகளை (இதெப்படி!! ஓவன்னாக்கு ஒனா) படிக்கட்டாக அடுக்கிவிட்டு கவிதை என்றால் அதை நாம் படிக்கனுமா?


பழமொழிகள் எல்லாமே எதுகை மோனையுடந்தான் இருக்கும். அதனால்தான் சொல்ல வேண்டிய விஷயத்தை பழமொழியில் சொல்லி எளிதாக புரிய வைக்கிறார்கள்.பழமொழி கூட குறள் வடிவில் இருக்கிறது பாருங்கள்.

ஆறிலும் சாவு
நூறிலும் சாவு

ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையுமா

ஆயிரம் பேரைக் கொன்றவன்
அரை வைத்தியன்

உழுதவன் கணக்குப் பார்த்தால்
உழக்கு மிஞ்சாது

நொறுங்கத் தின்றால்
நூறு வயது

.
ஒப்பாரிப் பாட்டிலும் கேட்கலாம்.

கல்லால கோட்டை கட்டி கவணமா நீ இருக்க
காலன் வந்து பூந்திட்டானோ
இரும்பாலே கோட்டை கட்டி இறுமாப்புடன் நீ இருக்க்
ஏமன் வந்து பூந்திட்டானோ

ஏன் தாலாட்டுப் பாடல்களிலும்
இந்த எதுகை மோனை இருப்பதைக் கானலாம்.

"கானல் அடிக்கிதுன்னு
கையாலே குடை பிடிச்சு
வெய்யில் அடிக்கிதுன்னு
விரலாலே குடை பிடிச்சு

தரையிலே விட்டா
தண்டைக்கால் நோகுமின்னு
மார்மேல் தொட்டில் கட்டி
மடிமேல் நடை பழக்கி
தோள்மேல் தொட்டில் கட்டி
தொடைமேல் நடை பழக்கி..."


கவிதையில் எதுகை மோனை இல்லாவிட்டாலும் ராகம் அமைத்து மெட்டுப் போடுபவர்கள் வரிகளுக்கு, பாடும் திறமையால் உயிர் கொடுப்பார்கள்.
உதாரணமாக வறுமையின் நிறம் சிவப்பு என்ற படத்தில் கதையின் நாயகியான ஸ்ரீதேவி மெட்டை சொல்லி வார்த்தையை போடுமாறு கதாநாயகன் கமலிடம் கேட்க ஒரு பாடல் உருவாகும் பாருங்கள், ஆஹா என்ன மாதிரியான ஒரு காட்சி அமைப்பு.அதில் அந்த மெட்டுக்கு வார்த்தையைப் போடும் போது மனதில் உள்ள காதலையும் வார்த்தையில் கலந்து கவிதையாய் பாடும் நேர்த்தி, உன்மையில் மெட்டுடன் கூடிய கவிதையின் பிரசவத்தை நேரில் பார்த்த மாதிரியான ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. அதைச் சொல்வதற்கும் வார்த்தைகள் கிடையாது.





சரி, திரையுலக பிதாமகன் அவரிடம் வித்தை இருக்கிறது என்று காட்டி விட்டார் என்று மகிழ்ச்சியும் சமாதானமும் அடையும் போது அவருடைய மாணவன் கமல் சவாலாக ”ஐயா உமது கதாநாயகன் கதைப்படி சிறந்த அறிவாளியாக காட்டியுள்ளீர்கள் அதனால் அவன் மெட்டுக்குத் தகுந்த வார்த்தைகளைப் போட்டான். அதில் ஒன்றும் சிறப்பு இல்லை, ஆனால் எனது கதாநாயகனோ ஒரு பைத்தியம். இந்த பைத்தியத்தின் வார்த்தைக்கும் தகுந்த மாதிரி கதாநாயகியினால் மெட்டு போட்டு பாடமுடியும் என சந்தானபாரதியுடன் சேர்ந்து நிரூபித்துவிட்டார் கமல்.ஆக குருவை மிஞ்சிய சீடராகி விட்டார். அதற்கு சிறந்த உதாரணம் குணாவில் வரும் பாட்டு. அந்த அரைக் கிறுக்கு சொல்லும் வார்த்தைகளை பாடலாகப் பாடிக் காட்டுவதால் பாடல் அமையும் முறை தெளிவாகப் புரியும். ஆனால் அதற்கு ஒரு மெட்டு அமைக்கும் வித்தகர் தேவைப் படுவார். இந்த இரண்டு பாடல்களையும் நன்றாக கேட்டு புரிந்து கொண்டால் போதும் கவிதையும் ராகமும் கலக்கும் விதம் தெரிந்து கொள்ளலாம்..





ஆனால் நாளடைவில் கவிஞர்களுக்கு, கவிஞர்கள் தங்கள் திறமையை காட்டும் முகமாக, சுற்றி வளைத்து பொருள் கொள்ள வைப்பது, புதிர் போடுவது போல் எளிதில் புரியாத மாதிரி எழுதுதல் என ஆரம்பித்தனர். ஆனாலும் ராகத்துக்கு மிகவும் அடிப்படையான யாப்பிலகணத்தைப் பின் பற்றினர்

மேலும் படிக்க...!
இப்பொழுதெல்லாம் மக்கள் என்ன செய்கிறோம் என்று யோசிக்காமலே காரியம் செய்கின்றனர். உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன். அன்று வியாழக்கிழமை தெட்சினாமூர்த்தி சன்னதியில் கூட்டம் அதிகமாக இருந்தது.

அங்கு எனது நன்பர் ஒருவரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவரிடம் கேட்டேன் ”வியாழனை பார்த்தீர்களா” என்று. அதற்கு அவர் அவன் சன்னதியில் இருந்து கொண்டே இந்தக் கேள்வியை கேட்கலாமா? என்று பதில் கேள்வியை போட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் நிற்பதோ தெட்சினாமூர்த்தி சன்னதியில் இவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் முழித்துவிட்டு என்ன சொல்கிறீர்கள் என்றேன். குரு பகவான் சன்னதியில் நின்றுகொண்டு ” குருவை பார்த்தீர்களா” என்று கேட்டால் என்ன சொல்வது என்றார்.
அப்பொழுதுதான் எனக்கும் புரிந்தது, தெட்சினாமூர்த்தியைத்தான் தவறாக குருபகவான் என்று சொல்கிறார் என்று.

பின்னர் அவரிடம் விளக்கம் கூறினேன். குருபகவானின் இஷ்ட தெய்வம் தெட்சினாமூர்த்தியாக இருப்பதாலும் குருபகவானுக்கு என்று தனியாக சன்னதி இல்லாததாலும் அவருடைய இஷ்ட தெய்வமான சிவபெருமானாகிய தெட்சினாமூர்த்தியை வணங்கினால் நம்மை ஒரே சாமி கும்பிடுகிற பங்காளியாக கருதி நமக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் ஏற்பட்டதுதான் தெட்சினாமூர்த்தியை, அவரது கிழமையில் வணங்கும் முறை என்று சொன்னேன். உன்மையில் நாம் வணங்குவது ஆதிமூலமான ஆலமர்ச்செல்வனாகிய, சிவபெருமானைத்தான் என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்லி புரிய வைத்தேன்.



இப்பொழுது மீண்டும் கேட்டேன் வியாழனைப் பார்த்தீர்களா? என்று. அவர் ஒரு மாதிரியாகப் பார்த்தார். சரி அவரை மேலும் குழப்ப வேண்டாமென்று நானே சொன்னேன். கடந்த ஒருமாதமாக வானில் தெரியும் வியாழனைப் பார்த்தீர்களா? ஏனென்றால் சுமார் 75 வருடங்களுக்கு ஒரு முறைதான் அது பூமிக்கு மிக அருகில் வருகிறது. அந் நிகழ்வு தற்பொழுது நடக்கிறது. போனமாதம் செப்டம்பர் 20 தேதி பூமிக்கு மிக அருகில் வந்த விஷயத்தையும் தற்பொழுது நிலவுக்கு அருகில் மிகவும் பளிச்சென்று இருப்பதையும் வானில் காட்டினேன். நீங்கள் தினமும் உங்கள் வீட்டு மாடியில் நின்றவாறே இன்னும் பலவாரங்களுக்கு வணங்கலாம் என்று கூறி அவரை குழப்பி அனுப்பிவிட்டேன்.

அவர் வீட்டிலிருந்து வணங்குவாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் தினமும் அந்த காட்சியை கான வானத்தைப் பார்க்கிறேன். நிலவுடன் தோன்றி நிலவுடன் சென்று மறைகிறது. ஆனாலும் இந்த பருவ நிலை காரணமாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் காணக் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் வானத்தைப் பார்த்து மகிழுங்கள்

மேலும் படிக்க...!
குவாண்டம் கொள்கை

அறிவியலார் குவாண்டம் கொள்கைக்கு வந்த விதத்தைப் பார்ப்போம்.

ஒலி எவ்வாறு பரவுகிறது என்று ஆராயும் போது அது காற்று என்ற ஊடகத்தின் மூலம் அலைஅலையாக பரவுகிறது என்று அறிந்தனர். ஆக பரவுதல் வேண்டுமென்றால் கடலலை போல் அலை வடிவத்தில் தான் செல்லமுடியும் என தீர்மானிக்கப் பட்டது. அதே சமயம் ஒலி வெற்றிடத்தில் பரவுவதில்லை என்பதையும் கண்டுபிடித்தனர். ஒலி செல்ல காற்று வேண்டும், கடலலை செல்ல நீர் வேண்டும்.ஆக எதுவும் பரவுவதற்கு ஊடகம் வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதே அடிப்படையில் ஒளியை ஆராய்ந்தனர். ஆனால் சூரியனிடமிருந்து ஒளியானது கதிர் வடிவில் வெற்றிடத்திலும் பரவி பூமியை வந்தடைவது அறிவியலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வெற்றிடத்தை முழுமையாக ஆராய்ந்தனர் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனாலும் ஒளி பரவுவதற்கு தேவையானவற்றை வைத்து என்ன மாதிரியான ஊடகமாக இருக்க முடியும் என ஆராய்ந்து யூகித்து கண்டுபிடித்தனர். அதன் பெயர்தான் ”ஈதர்”


சும்மா சொல்லக் கூடாது ஈதரும் சுமார் நாற்பது வருடங்களாக அறிவியல் அறிஞர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தது. அதனுடைய வாழ்விற்கும் உலை வைக்க ஒரு வில்லன் அல்ல இருவர் வந்தனர். மைக்கல்சன் - மார்லே என்பவர்கள் தான். அவர்களின், குரங்கு பிடிக்கப் போய் பிள்ளையாரான கதையான ஒரு பரிசோதனையின் முடிவில் இதுகாறும் ஏமாற்றி வந்த ஈதருக்கும் அவர்களை அறியாமலே கல்லறையை கட்டி விட்டனர். எதைக் கண்டுபிடித்து நிரூபிக்கப் போனார்களோ அதற்கே முடிவு கட்டி விட்டு வந்தனர். உவமானம் சரியாகத்தான் எழுதியுள்ளேன்.ஏனென்றால் ஈதரை கண்டுபிடிக்கும் ஒரு பரிசோதனையை முப்பது வருடங்களாக மெருகூட்டி மெருகூட்டி எதை எதையோ கண்டுபிடித்து கடைசியில் ஈதர் இல்லை என்ற முடிவிற்கு வந்தனர். ஐன்ஸ்டீன் மூளையில் கணக்குப் போட்ட சொன்ன விஷயமான ஒளியின் வேகம் சார்பற்ற தனிமுதலானது என்ற உயர்ந்த தத்துவார்த்தமான எளிதில் நிரூபிக்க முடியாதென நினைத்த கொள்கையைக் கூட இந்தச் சோதனையின் இடையில் போற போக்கில் நிறுவினர். ஒளியின் வேகத்தை அடிக் கணக்கில் சுத்தமாக கண்டுபிடித்தனர்.

ஈதருக்கு கல்லறை கட்டிவிட்டதால் ஒளி இப்பொழுது எப்படி பரவுகிறது என்று சொல்லியாகனும்.ஒளியானது சொந்தமாக வண்டி(Carrier) வைத்துக் கொண்டுதான் எங்கும் போகிறது வருகிறது. வெற்றிடத்திலும் துப்பாக்கி குண்டு போகுமல்லவா அது போல ஒளித்துகள் வெற்றிடத்தில் பரவுகிறது என்றும் அதற்கு ஃபோட்டான் என்றும் பெயரிட்டனர் அதுவரைக்கும் மெல்லிய குரலில் பேசப் பட்ட துகள் கொள்கை வலுப்பெற்றது. ஒளியானது அலைவடிவாக மட்டுமில்லாமல் துகள் வடிவாகவும் பரவுகிறது என நிரூபிக்கப் பட்டது.

ஆனால் அதுவும் குழப்பத்துடந்தான் ஏற்றுக் கொள்ளப் பட்டது. ஏனென்றால் அது இயக்கவிதிக்கு ஒத்து வராத துகளாக இருந்தது. உதாரணமாக ஒளியானது கண்ணாடி வழியாக வரும் பொழுது தனது வேகத்தை சிறிது குறைத்துக் கொண்டு கண்ணாடியை விட்டு வெளியேறியவுடன் மீண்டும் தனது பழைய வேகத்தை, கவனிக்கவும் ”மீண்டும் தனது பழைய வேகத்தைப்” பெற்றுக் கொள்கிறது. ஒளி பிரதிபலிக்கும் போதும், போய் கொண்டிருக்கும் திசையில் மோதி மீண்டு, எந்த வித சேதாரம்? இல்லாமலும் இயக்கவிதிக்கு மாறாக எதிர்த் திசையில் வேகம் துளி கூட குறையாமல் செல்வது ஓளியினால் மட்டும்தான் முடியும். இதே நிலைமையை ஒரு துப்பாக்கிக் குண்டை வைத்து யோசித்துப் பாருங்கள். ஒரு சிறிய மணல் மூட்டையை துளைத்துக் கொண்டு வெளியேறும் துப்பாக்கி குண்டு மீண்டும் தனது ஆரம்ப வேகத்தை அடைய முடியுமா? முடியவே முடியாது. முடியுமானால் ஹிட்லர் குண்டுச்செலவே இல்லாமல் உலக மக்கள் தொகையில் பாதிப் பேரை கொன்றிருப்பான்.

பின் எப்படி ஒளியினால் மட்டும் முடிகிறது. ஆகவே அது துகள் அல்ல அலை என்றனர்.அது மட்டுமில்லாமல் ஒளியின் மூலக்கூறுகளாக விப்ஜியார் (VIBGYOR) என்று அறிந்தனர். ஆனால் அவைகளை பிரித்தறியும் போது அவைகள் ”அலைநீளம்” என்ற ஒரு பண்பால் மட்டுமே வேறுபடுவதால் இது கண்டிப்பாக துகள் இல்லை அலை தான் என்றனர். இந்த பண்பால்தான் மின்காந்த அலைகளும், கதிர் வீச்சுகளும், ஒளிக்கு பங்காளிகளாக மாறிவிட்டனர்.ஆதலால் கடைசியில் எல்லாமே மின்காந்த அலைகள்தான் என உறுதி செய்யப் பட்டது.அந்தவகையான மின்காந்த அலைகளின் அணிவகுப்பு மிகப் பெரியது. அதில் ஒளியின் பங்களிப்பு மிகவும் குறைவு.கீழே கொடுக்கப் பட்டுள்ள படத்தை கிளிக் செய்து பாருங்கள் ஒளியின் குடும்பம் எவ்வளவு பெரியது என்று.ஆக ஒளியில் அலைகளும்,துகள்களும் ஆற்றலும் உண்டு என நிரூபிக்கப் பட்டது.



குந்தி தின்றால் குன்றும் கரையும் என்பார்கள்.அணுவுக்குள் எலக்ட்ரான் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தால் என்ன ஆவது. வெளியில் இருந்து ஆற்றல் கிடைக்காத போது நாய் வாலை அறுத்து நாய்க்கே சூப் வைத்த கதையாக அணுவிற்குள் நடைபெறும் இடையறா இயக்கத்திற்கு அணுவுக்குள் இருந்துதான் ஆற்றலை எடுக்க வேண்டியதிருக்கும்.

மனிதன் ஓடும் போது வியர்வையும் வெப்பமும் ஏற்பட்டால்தான் மனிதன்..அந்த வியர்வையும் வெப்பமும் ஏற்பட அவன் நீரும் உணவும் சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் ஒடினால், சாகாமல் இருந்தால் எலும்புதான் மிஞ்சும்

அது போல் மின் இயக்க விதிப்படி, அணுவுக்குள் எலக்ட்ரான் வட்டப் பாதையில் செல்லும் போது காந்த அலைகள் உருவாகும் அதனால் ஆற்றல் செலவு ஏற்படும். ஆற்றல் செலவிற்கு அணுவில் இருந்துதான் எடுத்து செலவழிக்க வேண்டும். அதனால் அணு அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு பொருட்கள் உருமாறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசியில் பொருட்கள் ஏதும் இருக்காது. ஆற்றல் மட்டும் இருக்கும்.

ஆனால் உன்மையில் பொருட்கள் மாறாதிருப்பதால் மின் இயக்க விதி அணுவுக்குள் செல்லுபடியாகவில்லை எனத் தெரிந்து கொள்ளலாம். ஆகவே ஒரு நிலையான வட்டப்பாதையில் எலக்ட்ரான் சுற்றும் போது மின் இயக்க விதிக்கு விதிவிலக்காக ஆற்றல் இழப்பு ஏற்படுவதில்லை. ஆனால் வேறு வட்டப்பாதைக்கு( பொதுவாக சிறிய வட்டப்பாதைக்கு ) மாறும் போது அது இழக்கும் ஆற்றல் கதிர் வீச்சின் மூலம் வெளிப்படுகிறது. இதைத்தான் ஒளி வீச்சுக்கும் சொல்கிறார்கள். ஆற்றல்ச் செலவின்றித்தான் ஒளி, பயணம் செய்கிறது என்று.

எலக்ட்ரான்களைப் பொறுத்த வரை தேவைக்கு அதிகமாக ஒரு கடுகளவு ( கடுகா? சும்மா, அப்புறம் எடுத்துக் காட்டுக்கு எதைத்தான் சொல்வது?) சக்தியானாலும் மிககுறுகிய கால அளவில் கூட வைத்திருக்காது, கதிர் வீச்சின் மூலம் ஆற்றல் எவ்வாறு வெளியேறுகிறது என்று பார்ப்போம் . பொதுவாக பரவுதல் என்றால் துடிப்பு(Pulse) அல்லது அலை(Wave) இவைதான் நெடுந்தொலைவு பயணத்திற்கு ஏற்றது.ஆற்றல் தொடர்ந்து நூல் (string) போல் வெளியேறுவதில்லை மாறாக சிறுசிறு பருக்கை(Quanta)களாக அல்லது துகள்களாகத்தான் (துடிப்பு அல்லது அலைஅலையாக) வெளியேறுகிறது. ஒரு நொடியில் வெளியேறும் துகள்களின் எண்ணிக்கை கதிர்வீச்சின் அலைவெண் ( v )எனப்படும். இக்கொள்கையை உலகுக்கு சொன்ன பிளாங்க் என்னும் அறிவியலார் ஒரு துகளின் ஆற்றலை கணக்கிட ஒரு சமன்பாட்டை உருவாக்கினார்.

( Quantum) E = hv

இதில் h என்பது பிளாங்கின் மாறிலி எனப்படும், v என்பது அக்கதிரின் அலைவெண் ( v ) .ஆகவே எலக்ட்ரான் என்பதும் அது இருக்கும் இடத்திற்கு தகுந்த அளவில் ஒரு குறிபிட்ட கோண வேகம் கொண்ட எடையற்ற, உருவமற்ற ஆற்றல் குவாண்டாக்கள் தான். இதைத்தான் குவாண்டம் கொள்கை (Quantum mechanics) என்கிறார்கள்.மொத்தத்தில் அலையும் துகளும் ஆக காட்சி அளிப்பது ஆற்றல்தான் என முடிவுகட்டினர். துகளுக்கு ”குவாண்டா” எனப் பெயரிட்டனர்.

விஞ்ஞானமே விழி பிதுங்கி நின்ற இடம் இதுதான்.இதுவரை பருப்பொருளாக எண்ணிக் கொண்டிருந்த அனைத்தும் ஆற்றலாம். நாம் இதுவரை கண்ணில் காண்பதும், தொட்டு உணர்வதும் எல்லாமுமே பொய்த்தோற்றமா? உலகே ஆற்றல் மயமா? அல்லது மாயமா? இதைத்தான் ”எங்கெங்கு கானினும் சக்தியடா” என பாரதியார் கூறினாரோ. இதைத்தான் வள்ளுவரும் தீர விசாரித்து ”மெய்ப் பொருள் காண்பது அறிவது” என்றாரோ?. நன்பர்களே புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் ஏனெனில் இது மூளையை குழப்பிவிடும் விஷயம். ஆனால் மொத்ததில் இது ஒருமுக்கியமான கண்டுபிடிப்பாகும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆகவே எடை, வேகம் பற்றிய இயக்கவியல் விதிகள் எதற்கும் ஒத்துவராத நிலையில் அணுவுக்குள் உள்ள துகள்கள் யாவும், பருப்பொருள் அல்ல, ஆற்றலின் வடிவம் தான் என உறுதியாக கூறலாம். ஆக ஆற்றல் எனப்படும் சக்திதான் தான் பொருளாக கண்களுக்குத் தெரிகிறது. பொருள்தான் ஆற்றலாக, சக்தியாக மாறுகிறது.

நமது அன்றாட அறிவின் மூலம், பொருள் அழிவின்மைத் தத்துவம் இப்பொழுது ஆற்றல் அழிவின்மை (Conservation of Energy) தத்துவமாக மாற்றி அமைக்கப்பட்டதை ஏற்றுக் கொள்வோம். அதாவது பொருள் ஆற்றலாக மாறும், ஆற்றல் பொருளாக மாறும்.ஆற்றலை அழிக்கமுடியாது. ஒரு வடிவத்தில் இருந்து இன்னொரு வடிவத்திற்கு மாறும் இதைத்தான் ஐன்ஸ்டீன் தனது கணக்கீட்டால் நிரூபித்து உள்ளார்.அதன் அடிப்படையில் பொருளை சக்தியாக மாற்றுவதற்கான சமன்பாடு இதுதான்.

E =MC2

(E=சக்தி, M=எடை, C=ஒளியின் வேகம்)

சக்தி = பொருளின் எடை X 30,000,000,000 X 30,000,000,000

ஜூல்ஸ் / செகண்ட்= 1கிராம் X 30,000,000,000 X 30,000,000,000 cm

ஒரு கிராம் பொருளை மின் சக்தியாக மாற்றினால் 250,000,000,000 யூனிட் மின்சாரம் கிடைக்கும் என்றால் பார்த்து கொள்ளுங்கள் எவ்வளவு பிரம்மாண்டமானது என்று. ஒளியானது எவ்வாறு அலை வடிவாகவும் துகள் (Photon) வடிவாகவும் உள்ளதோ அது போன்றே எலக்ட்ரானும் உள்ளது. இயற்பியலர்கள் இன்னும் தெளிவான கொள்கையால் விளக்க முயற்சிக்கிறார்கள். நீங்களும் முயற்சிக்கலாம் கொள்கை ரீதியில் யோசிப்பதற்கு காசு பணம் தேவையில்லை. பொறிதட்டினால் நீங்களும் ஒரு ஐன்ஸ்டீன் தான்.

வட்டப்பாதையில் எலக்ட்ரான் எங்கு இருக்கும் என்று கேட்டால் எங்கும் இருக்கும் என்று பிரகலாதன் ஸ்டைலில் கூறுகிறார்கள். ஸ்கார்டிங்கர் (Schordinger) அது வட்டப் பாதையும் கிடையாது, மையத்திலிருந்து சமதூரத்தில் அமைந்துள்ள கோளவடிவமான தளத்தில் எலக்ட்ரான் எங்கு வேண்டுமானாலும் இருக்ககூடிய (uncertainty principle) நிச்சயமற்ற வாய்ப்போடு உள்ளது என்கிறார்.

இன்னும் விவரமாக கேட்டால் உயிர் இருக்கும், இல்லாமலும் இருக்கும் ஸ்கார்டிங்கர் பூனை பற்றி படித்து கொள் என்று ஆன்மிகவாதிகளை விட குழப்புகிறார்கள்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த பூனைக்கதையில்.

ஒரு இரும்புத்தகட்டுப் பெட்டியில் ஒரு சிறிய உபகரனம் உள்ளது .ஒரு சிறிய கண்ணாடிக் குப்பியில் ஹைட்ரோ சயனிக் அமிலம் உள்ளது. கொஞ்சம் கதிரியக்க (Radio active) பொருளும் சிறிய அளவில் உள்ளது. நாம் பெட்டியை மூடின நேரத்தில் அந்த கதிரியக்கபொருளில் உள்ள ஒரு அணு, ஒரே ஒரு அணு கதிரியக்கத்தால் சிதைந்தாலும் (வாய்ப்பு 50/50) அந்த பாதிப்பு, அந்த குப்பியை உடைத்து அந்த அமிலம் பரவி உள்ளே இருக்கும் பூனை இறந்து விடுமாறு அமைக்கப் பட்டுள்ளது. இப்பொழுது பெட்டியில் பூனையை வைத்து விட்டு பெட்டியை மூடிவிட்டால் இப்பொழுது பூனை உயிருடன் இருக்கிறதா இல்லையா என்று சொல்லமுடியாது. அதன் நிலைமையை தெரிந்து கொள்ள பெட்டியை திறந்தால் தான் முடியும். திறக்காத வரை சொல்லமுடியாது. திறந்தவுடனே (அதாவது அளவிடும் போதே ) கூட இறந்துவிடலாம் அல்லது உயிரோடு இருக்கலாம்.அது போல்தானாம் எல்க்ட்ரானின் நிலைமை நாம் அதை பார்க்கும் போது எங்கு இருக்கிறதோ அதுதான் அதன் நிலை. ஆகவே அனுமானத்திற்கோ கணக்கீட்டிற்கோ ஒத்துவராது என்கிறார் போலும்.

இவர் இதை விளக்க இதை விட நல்ல உதாரணம் தேடி இருக்கலாம். விரைவில் யாராவது நல்ல உதாரணத்துடன் வாருங்கள்.



அவர் சொல்ல வருவது என்னவென்றால் எலக்ட்ரான் ஒரு பொருளல்ல அதற்கு இருக்கும் இடம் சொல்ல முடியாது, ஆனால் கருவிகளால் உணரலாம். மாயாவி போலும்!!. கால இடைவெளிகளில் இருப்பிடத்தை அளந்து பார்த்தால் அது வட்டப் பாதையில் இருப்பது போல் தோன்றினாலும் உன்மை நிலை அவ்வாறு இல்லை.அதை ஒரு புள்ளியால் குறிக்கமுடியாது.(இந்த cycle கேப்பில் தான் ஸ்ட்ரிங்க் தியரி நுழைகிறது).
அதன் இருப்பிடம்தான் குழப்பமே ஒழிய அதன் செயல் பாட்டில் மாறுதல் இல்லை. இப்பொழுது நான் நன்றாக குழப்புகிறேனா?

அறிவியலின் பாலபாடமே கணக்கீட்டிற்கு எதுவும் வரவில்லை என்றால் அது அறிவியலே இல்லை என்பதுதான் அப்புறம் என்ன? அன்செர்ட்டியன்ட்டி பிரின்சிபல் என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டால் ஏற்றுக் கொள்ளலாமா?. என்றெல்லாம் கேட்கக் கூடாது. அவர்கள் பேசுவதெல்லாம் மிக மிக மிக மிக நுண்ணிய அளவுகள் பற்றியது.

அப்படியானால் ஆற்றலின் அடிப்படையில் நியூட்ரான்,எலக்ட்ரான் புரோட்டானுக்கு விளக்கம் என்ன? ஆற்றலில் நெகட்டிவ் , பாசிட்டிவ் என்று உண்டா? ஆற்றலில் நெகட்டிவ், பாசிட்டிவ் என்றிருந்தால் பொருளிலும் நெகட்டிவ் இருக்க வேண்டுமே.அப்படியானால் நெகட்டிவ் பொருள் உண்டா? ஆண்டி மேட்டருக்கு வந்து விட்டோமா?

சரி சரி எங்கோ தப்பு செய்கிறார்களா? இதுவும் ”ஈதர்” கதையாகி விடப் போகிறது. நாம் யோசிப்போம், மாத்தி யோசிப்போம். அறிவியலோடு சொல்ல முயற்சிப்போம். அல்லது பொறுத்திருப்போம் யாராவது சரியாக சொல்வார்கள்.

அறிவியல் இந்தமாதிரி முட்டுச்சந்தில் நின்று முழி பிதுங்கிய சந்தர்ப்பங்கள் ஏராளம் முன்பொருமுறை ”ஈதர்” என்ற இல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு 40 வருடங்களாக ஜல்லி அடித்துக் கொண்டிருந்தனர். ஈதரும் கணக்கு பிசகாமல் நடந்து கொண்டு ஏமாற்றிக் கொண்டிருந்தது. பின்னர் மைக்கல்சென் - மார்லே இவர்களின் பரிசோதனையில் தாக்கு பிடிக்க முடியாமல் ஓடி மறைந்து விட்டது. அதே போல் அரிஸ்ட்டாடில் காலத்தில் ”பிளாங்கிஸ்டன்” என்பதும் வந்து மறைந்த சமாச்சாரம்தான். அந்த வரிசையில் இப்பொழுது வந்து காத்திருப்பது பிளாஸ்மா, நாலாவது பரிமாணம்,மற்றும் பலவித பரிமாணங்கள்,ஸ்ட்ரிங் தியரி அல்லது Theory of everything TOE.இவைகளில் எவையெவை தேறும் தேறாது என்பதை காலம்தான் சொல்லும்.

நாம் இதுவரை பார்த்தது 60 வருடங்களுக்கு முந்தைய அணுவின் நிலைமை. நியூட்ரான் புரோட்டான் எலக்ட்ரான் ஆகியவை ஆற்றலின் வடிவங்கள் என்றால், மிகவும் அடிப்படையானது ஆற்றல் தான் என்று வருகிறது. ஆற்றலின் வெவ்வேறு வடிவங்கள்தான் துகள்களாக மாறி காட்சியளிக்கின்றது. அப்படியானால் இதுவரை சொன்ன விஷயங்களை எல்லாம் ஆற்றலின் அடிப்படையில் மாற்றி அமைக்கவேண்டியதாகிறது. ஆற்றல் அடிப்படையில் நான் ஏற்கனவே கூறியது போல் கிட்ட தட்ட 30 துகள்களாக பிரித்துள்ளனர்.





அவ்வாறு ஆற்றலின் வெவ்வேறு வடிவமான அந்த முப்பது துகள்களும் கீழ்க்கண்டவாறு பிரிக்கப் பட்டது.

1) போஸான்ஸ் (Bosons) ஆற்றலை சுமந்து ஆற்றலாக இருக்கும், மாறும் துகள்கள்
2) ஃபெர்மியான்ஸ் (Fermions) பொருளாக இருக்கும், எடை கூடிய ஆற்றல் துகள்கள்

இவைகள் மேலும் குவார்க் குடும்பம், லெப்டான் குடும்பம், டாக்கியான்கள்,மீசான்,பேரியான் குளுவான்கள், ஃபோட்டான்கள். கிராவிட்டான்கள் எனப் பிரிக்கப் பட்டது. குவார்க் மற்றும் லெப்டான் ஆகிய ஒவ்வொரு குடும்பத்திலும் தலா ஆறு உறுப்பினர்கள் உள்ளனர்.குவார்க் குடும்பத்தில் எல்லோரும் எடை மிகுந்தவர்கள். மொத்தத்தில் குண்டோதரர்கள் குடும்பம்தான் குவார்க் குடும்பம். அவர்களின் பெயர்கள், பெரிய அண்ணா, சிறிய அண்ணா, நடு அண்ணா, குட்டி அண்ணா குண்டு அண்ணா, ஒல்லி அண்ணா என்பது போன்று பெயர்கள் வைத்துள்ளனர்.



உண்மையில் அவைகளின் பெயர்கள் Up,Down, Charm, Strange, Bottom and Top Quarks தான் அவைகள். இந்த அடிப்படையில் புரோட்டானை 2Up quark + 1Down quark என்று சொல்லலாம். நியூட்ரானை 2Down Quark + 1Up Quark என விவரிக்கலாம். அல்லது சுருக்கமாக 2U1D,2D1U என்றும் குறிப்பிடலாம்.




ஒல்லியர்கள் குடும்பத்தில் அதாவது லெப்டான் குடும்பத்தில் எலக்ட்ரான் தான் மூத்தவர் நிலைத்த ஆயுள் பெற்றவர். மற்றவர்கள் எல்லாம் வெட்கப்பட்டு வெளியே தலைகாட்ட மறுப்பவர்கள்.அவர்கள்தான் மியூவான்,(Muon) டாவான்,(Tauon) மற்றும் மூன்று நியூட்ரினோக்கள். (Neutrinos)

மேலும் குளுவான்கள், ஃபோட்டான்கள் , கிராவிட்டான்கள் என்ற துகள்களும் உள்ளன என்கிறார்கள் ஃபோட்டான் ஓ.கே. இந்த கிராவிட்டான் தான் இன்னும் அங்கீகரிக்கப் படவில்லை. ஒளி ஆற்றலையும், காந்த ஆற்றலையும் சுமந்து செல்லும்(Carrier) வீரர் படைதான் ஃபோட்டான். அணுக்கருவிசை வலியதை சுமந்து செல்ல குளுவான்கள். அது போல், ஈர்ப்பு சக்தியை சுமந்து செல்ல எப்படியாவது ஒருத்தன் வேண்டுமல்லவா அவன் கிரவிட்டான் ஆகத்தான் இருக்க முடியும் என்பது யூகம். விழுகின்ற பொருளுக்கும் பூமிக்கும் இடையில் ஏதாவது தட்டுப்படுகிறதா என்று பாருங்கள் அல்லது யோசியுங்கள். அது எப்படி இருக்குமென்று சொல்லிவிட்டால் கண்டிப்பாக நோபல் பரிசுதான்.அணுக்கருவிசை மெலியதை (weak forces)தூக்கிச் செல்ல W+. W-, Z என மூன்று வகை உள்ளன.இப்பொழுது அதிகமாக தெரிந்து கொள்ள எதிர் பார்க்கப்படுவது ஹிக்ஸ்போஸான்(கடவுள் துகள்) மற்றும் கிராவிட்டான் என்ற துகள்கள் பற்றிய உண்மைதான்.

இப்படி ஆற்றலின் வடிவத்திற்கு பெயர் வைக்க ஆரம்பித்தால் துகள்களுக்கு உலகத்திலுள்ளவர்கள் அத்தனை பெயர்களும் பத்தாது. அதுமட்டுமில்லாமல் மூலம் என்று சொன்னால் அது ஒருமையாய் இருக்க வேண்டும்.அதுதான் ஆற்றல்.

இந்தப் ”பொத்தாம் பொதுவா” இருக்கா அல்லது புள்ளியாய் இருக்கா என்ற குழப்பத்திற்கு பின்பும் கூட அணுக்கள் நீல்ஸ் போர் மாடலில் விளக்கப் பட்டது போல்தான் நடந்து கொள்கிறது.ஆகவே அந்த அடிப்படையிலேயே நாம் தொடர்ந்து சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்வோம். பின்னர் சமயம் கிடைக்கும் போது ஸ்ட்ரிங் தியரியையும் அறிமுகப் படுத்திக் கொள்வோம். இந்த கிராவிட்டானுக்கு மட்டும் விளக்கம் சொல்லிவிட்டால் ஸ்ட்ரிங் தியரி தான் எல்லாவற்றிற்கும் ஒத்து வரும் போல் தெரிகிறது

இப்பொழுது அணுவை ஒரு பெரிய அறையுடன் ஒப்பிட்டால் நியுக்ளியஸை (புரோட்டான் + நியூட்ரான்) ஒரு சுண்டைக்காய் அளவு என்று யூகித்துக் கொள்ளுங்கள். எலக்ட்ரானுக்கோ எடையும் கிடையாது. ஆனால் இவை மூன்றுக்கும் உருவம் கிடையாது. எப்படி என்று கேட்டால் அது அலையின் (சக்தி) வடிவம் தான் என்பார்கள். ஆக உருவமற்றவைகள் எல்லாம் நிச்சயமற்ற தன்மையில் ஒன்று சேர்ந்து மிகப் பிரம்மாண்டமான உருவங்களாக மாறுகிறது. . இப்போதைக்கு மேற் கூறியவாறே புரிந்து கொள்ளுவோம். எல்லாம் மாயை.

நாம் பூமியில் எங்கிருந்தாலும் மணிக்கு சுமார் 70,000 மைல் வேகத்தில் இடையறாது பயணம் செய்து கொண்டிருக்கிறோம் அது மட்டுமில்லாமல் பூமியின் தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் வேகமான மணிக்கு 1000 மைல் வேகத்தில் வேறு சுழன்று கொண்டிருக்கிறோம் என்பதை எனது அன்றாட அறிவிற்கு என்னால் சொல்லி விளக்க முடியவில்லை. கடைசியில் அப்படி வைத்துக் கொள், கணக்கின் படி எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, பூமிதான் சூரியனை சுற்றுகிறது சூரியன் சுற்றவில்லை என்பதை எப்படி நம்புகிறாயோ அது போல் இதையும் நம்பு என்று கூறித்தான் சமாதானப் படுத்தியுள்ளேன்.

ஒரு புரோட்டான், ஒரு எலக்ட்ரான் கொண்ட அமைப்புதான் ஹைட்ரஜன் என்னும் வாயு. இதில் நியூட்ரான் கிடையாது. இதுதான் மூலப்பொருள் அட்டவணையில் முதலாவது உள்ளது. ஆதிமூலமும் அதுதான். இவ்வாறு புரோட்டான், எலக்ட்ரான் ஆகிய இரன்டும் சம எண்ணிக்கையில் ஏறு வரிசையில் அமைந்து 1 முதல் 92 பொருட்கள் உருவாகி யுள்ளன. பின்னர் செயற்கை முறையில் தயாரித்த தனிமங்களோடு சேர்த்து மொத்தம் 103 உள்ளன.அதற்கு மேலும் உள்ளவை நிலையற்றவை. இதில் ஏறு வரிசையில் செல்லச் செல்ல நியூட்ரானின் எண்ணிக்கை எலக்ட்ரானின் எண்ணிக்கையை விட அதிகமாகிக் கொண்டே போகும். நியூட்ரானின் எண்ணிக்கைக்கும் எலக்ட்ரானின் எண்ணிக்கைக்கும் சம்பந்தம் கிடையாது. நியூட்ரான் மட்டும் கூடினால் அணு எடையில் மட்டும் மாற்றம் உள்ள ஐசோடோப்புக்கள் எனப்படும் பொருட்கள் உருவாகும்.

சூரியமண்டலத்தில் ஒன்பது கிரகங்களுக்கு மேல் ஏன் இல்லை என்பதற்கும் தனிமங்களில் ஏன் 92 க்கு மேல் உருவாகவில்லை என்பதற்கு சில ஒற்றுமைகள் உள்ளன. கீழ்க்கண்டவைகள் காரணங்களாக இருக்கலாம்.

1). எலக்ட்ரானின் சுழல் வேகம், மற்றும் ஈர்ப்புத்தன்மை போதாமையும், மையத்திலிருந்து எலக்ட்ரான்கள் உள்ள தூரமும் காரணங்களாக இருக்கலாம்.

2) எலக்ட்ரான், புரோட்டான்கள் எண்ணிக்கை அதிகமாவதால் அணுவின் ஸ்திர தன்மை குறைகிறது. அணுக்கள் உருவத்தில் பெரியதாக இருக்கும் பொழுது அதி வேகம் கொண்ட எல்க்ட்ரான்களை இழுத்து பிடித்து வைக்க அதே எண்ணிக்கையிலுள்ள புரோட்டான்களும், புரோட்டான்களை இழுத்துப் பிடித்து வைக்க அதிக அளவில் நியூட்ரான்களும் தேவைப் படுகிறது..

3) நியூட்ரான்கள் அதிகமாகும் போது அணுக் கருவிசை பலவீனப்படுவதால் உள்ளுக்குள்ளயே 2 எலக்ட்ரான் 2 புரோட்டான் 2 நியூட்ரான் ஆகியவை இணைந்து ஹீலியம் போன்ற உறுதி மிக்க சிறிய அமைப்புகள் தோன்றி சுயாட்சி பெற்று பிரிந்துவிடுகின்றன.

அணு எண் 86 க்கு மேல் உள்ள தனிமங்களில் மையத்தின் கட்டுப்பாடு குறையும் போது சில இயக்கங்கள் சுயாட்சி கோரிக்கையுடன் போராடத் தொடங்குகிறது. அதன் வெளிப்பாடுதான் கதிரியக்கம். குழப்பத்தை ஏற்படுத்தும் துகள்கள் நாடுகடத்தப் படுவதுதான் கதிர்வீச்சு (ரேடியோ ஆக்டிவிட்டி, Radio activity).

இவ்வாறு நியுட்ரானைப் பிரித்தால் எடையுடன் கூடிய புரோட்டான், எடையற்ற எலக்ட்ரான் மற்றும் நியூட்ரினோ எனப் பிரிந்து விடுகிறது. இவ்வாறு சேரும் போதும், பிரியும் போதும் ஏற்படும் எடைக்குறைவு தான் அணுசக்தியாக மாறி விடுகிறது.அதாவது எலக்ட்ரான்கள் பெரிய வட்டபாதையிலிருந்து சிறிய வட்டப்பாதைக்கு மாறும் பொழுதோ, இடம் மாறும் போதோ சக்தி வெளிப்படும் அதுவே அணுசக்தியாகும். யுரேனியத்தின் அணுவை எடுத்துக் கொண்டால் அதில் வெளியில் 92 எலக்ட்ரான்களும் மையத்தில் 92 புரோட்டான்களும் 146 நியூட்ரான்களும் உள்ளன. இதிலிருந்து யுரேனியத்தின் கதிரியக்கத் தன்மைக்கு நியூக்கிளியஸ் தான் காரணம் என்று தெரிகிறது. இதனால் தான் யுரேனியம் அணுவை பிளந்து சக்தி எடுக்கமுடிகிறது. இதில் 143 நியூட்ரான்கள் (143+92=235)உள்ள யுரேனியம் தான் U 235 என்னும் அணு உலையின் எரிபொருள்.

நீங்கள் மட்டும் இந்த நுண்துகள்களை மாற்றி அமைக்கும் கலையில் வித்தகர் ஆகிவிட்டால் மிக எளிதாக கிடைக்ககூடிய காரீயத்திலுள்ள 82 ஜோடி புரோட்டான், எலக்ட்ரான்களில் 3 ஜோடி புரோட்டான், எலக்ட்ரான்களை எடுத்து விட்டீர்கள் என்றால் அது உலக மக்கள் விரும்பும் ஒரு உன்னத உலோகமான தங்கமாக மாறிவிடும்!.அதே போன்று பாதரசத்தில் ஒரு
புரோட்டான், ஒரு எலக்ட்ரானை எடுத்து விட்டீர்கள் என்றால் அதுவும் தங்கம் தான்!. இதானால்தான் இந்த முயற்சியில் ஈடுபடும் பைத்தியங்களை ரசவாதிகள் என் அழைக்கிறோம். இன்றைய அறிவியல் சொல்லித்தான் பாதரசத்தில் தங்கத்தை விட ஒரே ஒரு ஜோடி புரோட்டானும், எலக்ட்ரானும் குறைவாக உள்ள சமாச்சாரம் நமக்கு தெரிய வருகிறது. ஆனால் இந்த தாடிக்கார ரசவாதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே பாதரசத்தைத்தான் தங்கமாக மாற்ற முயற்சித்தனர் அது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது.


ஒரு குண்டூசி தலையளவு பொருளில் உள்ள எலக்ட்ரான்களை பிரிக்க 3 மில்லியன் டன் எடையை தூக்கத் தேவைப்படும் சக்தி வேண்டும். அவ்வளவு சக்தியை உள்ளடக்கி வைத்திருக்கிறது என்பது தான் நமக்குத் தேவையான விஷயம். இதற்கான திறவு கோல் எது. இந்த சக்தியை எப்படி வெளிக் கொணருவது என்பது இன்றைய பிரச்சினை. தமிழகத்தில் ஒவ்வொரு வருடத்திலும் வெளிவரும் 60,000 பொறியாளர்கள் மற்றும் 6,000 ஆராய்ச்சியாளர்கள் இதன் மீது ஒரு கண் வைத்தார்கள் என்றால் நிச்சயமாக வழி பிறக்கும்.

மின்சாரம் என்பதெல்லாம் எலக்ட்ரான்களின் பொழுது போக்கு விளையாட்டு. புவி ஈர்ப்பு விசையில் எல்லாமே ஈர்ப்பு தான், விலக்கல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆனால் மின்காந்த விசையில் ஒத்த மின்னூட்டங்கள் எந்த அளவுக்கு ஒன்றை ஒன்று விலக்கின்றனவோ அதே அளவுக்கு மாறுபட்ட மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன என்பதுதான் மின்காந்த விசையின் தனித்தன்மை. ஈர்ப்பு விசையை மின்காந்த விசையோடு ஒப்பிட்டால் அது ஒரு ஜுஜூபி. ஈர்ப்பு விசை என்பது மிகமிகத் தொத்தலான விசையாகும்.

யுரேனியத்தின் அணுவை எடுத்துக்கொண்டால் அதில் 92 எலக்ட்ரான்களும் நடுவில் 92 புரோட்டான்களும் 146 நியூட்ரான்களும் உள்ளன, ஆனால் 92 எலக்ட்ரான்கள் எவ்வாறு ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளாமல் ஒழுங்காக சுற்றிக் கொள்கின்றன?.

இதற்கென ஒரு தனி அமைப்பும் விதிகளும் உள்ளது.
வைரமுத்துவின் பாட்டும் உள்ளது.
..................................தொடரும்
.

முந்தைய பதிவு

மேலும் படிக்க...!

இராகு கேது (பாகம் 4)

நாம் இந்த தொடரின் கடைசிப் பகுதிக்கு வந்து விட்டோம்.



சந்திரனின் ஒரு வருட சுழற்சியில் அதன் பாதை எப்படி இருக்கும் என்று மேற்கண்ட சித்திரத்தில் காட்டப் பட்டுள்ளது. பூமியே கதிரவனின் கைதிகளில் ஒருத்தி. (ஆங்கில வழக்கப் படி மட்டுமல்ல, நாமும் பூமித்தாய் என்றுதான் கூறுகிறோம்) . இந்தக் கைதிக்கும், அதிலும் ஒரு பெண்ணுக்கு அடிமை சிக்கினால் அவன் பாடு எப்படி இருக்கும் என்பதைத்தான் இந்தப் படம் விளக்குகிறது. அல்லக்கைகள் படும் பாட்டைதெளிவாக விளக்குகிறது. இதில் காட்டப் பட்டுள்ளது ஒரு சுமாரான நிலைமைதான், உன்மை நிலை இன்னும் மோசமானது. ஆனால் சோதிடத்தில் அத்தனை விஷயங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டது என்பதுதான் ஆச்சரியமூட்டக் கூடியது.


ராகுவும், கேதுவும் எல்லாக் கிரகங்களுக்கும் எதிர்த் திசையில் பூமியை சுற்றி வருவதையும் அவ்வாறு சுற்றி வருவதற்கு 18.5 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது என்பதையும் விளக்குவதற்கான அனிமேஷன் சித்திரத்தையும் கொடுத்துள்ளேன். இதில் ராகுவும் கேதுவும் சந்திரனின் வட்டப் பாதையில் இருப்பதால் ஒவ்வொரு சுற்றின் போதும் சந்திரன் ராகுவையும்( ஏற்றப் புள்ளி, Ascending node) கேதுவையும் (இறங்குபுள்ளி Descending node) ஒருமுறை சந்தித்து விட்டுத்தான் வருகிறது. இந்த சந்திப்புகள் எல்லாம் ”விழுங்குதல்” கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. ஆனால் எப்பொழுது, சூரியன், பூமி,சந்திரன், ராகு கேது இவை ஐந்தும் நேர்கோட்டில் வருகிறதோ அப்பொழுதுதான் ”விழுங்குதல்” என்ற் கிரகணம் ஏற்படும்.

ராகு கேதுவைப் பற்றி பெரிய பெரிய ஜோதிடர்கள் கூட சரியாகப் புரிந்து கொள்ளாமல் உளறுகிறார்கள் என்பதால்தான் இந்தக் கட்டுரையை விரிவாக எழுதியுள்ளேன். ஆகவே இதன் வலைத் தொடர்பு முகவரியை உங்கள் ஜோதிட நன்பர்களுக்கு அனுப்பி வைத்து பயன் பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.





இந்த பாம்புக் கதை இண்டர்னெட் வந்தடைவதற்கு இயற்றியவன் செய்த ஏற்பாட்டை எண்ணி ஒரு பத்து நிமிடங்கள் அவனது காலச் சூழலுக்குச் சென்று செலவு செய்யுங்கள். பேனா பேப்பர் இல்லாத காலம், எழுதப் படிக்கத் தெரிந்தவன் ஆயிரத்தில் ஒருவன், மனிதனது சராசரி ஆயுளோ 20 க்கும் கீழ், வாய் மொழிதான் வழக்கு, இப்படிப்பட்ட காலத்திலிருந்து தான் பாம்புக்கதை வந்து இண்டர்னெட்டில் அரங்கேறியது. இதற்காக அவன் என்ன செய்தான்?.
சொல்ல வந்த விஷயத்தை கவிதையாய், கதையாய், காமமாய், பக்தியாய், வரலாறாய், தகவலாய், அறிவியலாய், என்று பலதரப்பட்ட பார்மேட்களிலும், மீடியாக்களிலும், ஏற்றி பல தலைமுறைகள் தாண்டி மொழிகள் தாண்டி தப்பாமல் செல்ல வேண்டிய இலக்கு நோக்கி செலுத்திய அவனது திறமையை யோசித்துப் பாருங்கள். நீங்கள் உங்களை மஞ்சள் பத்திரிக்கைக்காரன் என்றோ, கறுப்புச் சட்டைக்காரன் என்றோ, காவிச் சட்டைக்காரன் என்றோ, உங்களை அடையாளப் படுத்துவது உங்களது ஒரே மாதிரியான குறுகிய பார்வைதான். ஆகவே பார்வையின் அகலத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். கோணத்தை மாற்றிப்பாருங்கள். நீங்கள் உலகுக்கு சொல்லவேண்டிய நல்ல தகவல் ஒன்றை உருவாக்குங்கள், அதனை குறைந்தபட்சம் ஒரு தலைமுறை தாண்டி நிற்குமாறு நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

ஆகவே காமத்தைப் பார்த்து அசிங்கம் என்று கருதி அழிக்காமல் ஏதேனும் அறிவியல் இருந்தால் ஆராய்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். உத்ராயணம், தெட்சிணாயணம் என்னும் இந்த ஒன்றுமில்லாத விஷயம் ”பகுத்தறிவாளர்” எத்தனை பேருக்கு இன்றைக்கு புரிந்து இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த விஷயம் கடந்த 2000 வருடங்களுக்கும் மேலாக தமிழனிடமும் உள்ளது. சிறிது ஆழமாக ஆராய்ந்திருந்தால் கெப்ளருக்கும், கோப்பர் நிக்கஸூக்கும் கிடைத்த பேரும் புகழும் ஒரு தமிழனுக்கும் கூட கிடைத்திருக்கும். அப்படி கிடைக்காமல் போனதற்கு காரணம் இந்த கடவுள் மறுப்பாளர்களும், அவர்களது புராண, இதிகாசத் தாக்குதலும் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் ”பகுத்தறிவுப் பகலவன்”கள் என்ற பெயரில் அரை வேக்காட்டு ”அறிஞர்கள்” தோன்றி, மாத்தி யோசிக்க கற்றுக் கொடுக்காமல், குருட்டுத்தனமாக யோசிக்க கற்றுக் கொடுத்து அறிவியல் ஆர்வத்தை முடக்கி விடுகிறார்கள். இக்கதைகளை போற்றி பாதுகாப்பவன் தான் புத்திசாலியாகி விடுகிறான் என்பதை காணக் கிடைக்கும் தகவல்களை படித்து ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

முதலில் பாம்பாம், விழுங்குவதாம் என்று கேலி பேசிய விஞ்ஞானிகளும் மௌனமாக ஒத்துக் கொண்டு அதன் இருப்பிடத்தை டிகிரி சுத்தமாக அளந்து சொல்லி தங்களுக்கும் அறிவு இருக்கிறது என்று காட்டிக் கொள்கிறார்கள்.

"சைன்ஸ் டு டே" என்றொரு அறிவியல் மாதாந்திரப் பத்திரிக்கையில், சுமார் 30 வருடங்களுக்கு முன் சோதிடத்தை கிண்டலடித்து ராகு, கேது என்று இல்லாத கிரகங்களுக்கு பெயரிட்டு அதை அறிவியல் என்று முட்டாள்தனமாக உளறுகிறார்கள் என்று ஒரு பேராசிரியரின் கட்டுரையை வெளியிட்டு மகிழ்ந்தது.

அதே பத்திரிக்கை அடுத்த இருபது வருடங்களில் கோள்களின் இன்றைய நிலை என்று போட்டு ராகு, கேதுவின் நிலைகளை வெளியிட்டு ”அன்றைய அறிவியலை”க் காட்டிக் கொண்டு கட்டுரை எழுதிய பேராசிரியரை முட்டாளாக்கி விட்டது.

ஒன்றுக்குள் ஒன்றாக சம்பந்தப்பட்ட இருபுள்ளிகள். இதை சரியான முறையில் உருவகப் படுத்தி ஒரு பாத்திரத்தை உருவாக்கியுள்ள விதம் ஆச்சிரியப் படவைக்கிறது. ஒரு அறிவியல் நிகழ்ச்சியை ஒட்டி இவ்வளவு அற்புதமாக கதை பன்ன முடியுதே அதுதான் விஷயம். நீங்கள் முயற்சி செய்யுங்கள் அப்பொழுதான் இந்தக் கதையை புனைந்தவன், கொண்டுவந்து சேர்த்தவர்களின் அருமை புரியும். இன்றைய காலத்தில் ஊடகங்கள் என்று இண்ட்ர்னெட், டி.வி. ரேடியோ, செய்திதாள், போன் என பலதரப்பட்டவை உள்ளன. அனால் ஒரு 500 வருடங்களுக்கு முன்பெல்லாம் வாய்மொழிப் பாட்டும் கதையும் தான் ஊடகங்கள். ஆக கதை பன்னும் விதமும் கதையிலுள்ள ஈர்ப்பும்தான் அதனுடைய அமரத்துவத்திற்கு உத்திரவாதம்.

கிரகங்களையோ சூரியனையோ வைத்து அவைகளின் நிலையை சோதிடன் கணக்கிடவில்லை.பல ஒளிவருடங்கள் தொலைவிலுள்ள நட்சத்திரங்களை வைத்து, அருகிலுள்ள சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்களை கணக்கிட்டால் எல்லாவகையான சித்தாந்தங்களும் தானாக வந்து மாட்டிக் கொள்ளும் அல்லது காட்டிக் கொள்ளும்.

அவனைப் பொறுத்த வரை அக்காலத்தில் வானியல் என்பது சோதிடத்திற்கான படிக்கட்டுதான். வானியல் அவனுக்கு அத்துப்படி என்பதற்கு ராகு கேதுவின் உருவாக்கமே சான்று. இந்த வானியல் அறிவை பாமரனுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன் படுத்தும் ஆராய்ச்சி தான் சோதிடம். சோதிடம்தான் அவனது இலக்கு. உலகெங்கும் கி.பி 1500 களில் இந்தியாவின் சோதிடம்தான் நவீன அறிவியலுக்கான படிக்கட்டாக மட்டுமல்ல, நுழைவுச் சீட்டாகவும் இருந்தது என்பது நமது உள்ளுர் பகுத்தறிவுப் பகலவன்களது புத்தியில் ஏறவே ஏறாது.

உங்களுக்கு ஒரு தந்தி வந்தால், அதிலுள்ள தகவல் தான் முக்கியம். தகவலின் தன்மையை ஒட்டி, கொண்டு வந்த போஸ்ட்மேனை அடிக்கிற முட்டாளாகி விடக்கூடாது. மகிழ்ச்சியை மட்டும் அவனுடன் பங்கிடும் ”உயர்ந்த” மனிதனாக இருக்க வேண்டும். ஆகவே இதிகாசங்களும், புராணங்களுமாகிய போஸ்ட் மேனைப் போற்றுங்கள்.

மகாபாரதம் என்ற போஸ்ட்மேன் கொண்டுவந்த ஒரு தகவலைத்தான் எனது ’உயிரும் உயிரின் பிரிவும்” என்ற பதிப்பின் மூலம் ஆராயப் போகிறேன். எவ்வளவு பெரிய அறிவியல் தத்துவத்தை, எளிதாக போற போக்கில் சொல்கிறார்கள் என்பதை படித்து பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...!
பூமியில் பொருட்கள் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆனபோதிலும், இன்னும் ஒன்றுடன் ஒன்று வேதியல் வினைகளில் ஈடுபட்டு புதிய பொருட்கள் தோன்றுவது, நிற்காமல் நடந்து கொண்டிருக்கிறது. பொருட்கள் எந்த வித வேதியல் வினைகளில் ஈடுபட்டாலும் ஒன்றிலிருந்து இன்னொன்றாகத்தான் மாறுகிறது என்றும், எந்த சூழ்நிலையிலும் முற்றிலுமாக அழிவதில்லை என்பதையும் கண்டுபிடித்தனர். ஒரு பொருளை எரித்தால் அது அழிவதில்லை அது காற்றாகவும் திரவமாகவும் மாறி இந்த பூமியில்தான் சுற்றிக் கொண்டிருக்கும். எப்பொருளுக்கும் அழிவில்லை. இதன் மூலம் ”பொருள் அழிவின்மைத் (Conservation of Matter ) தத்துவம்” தோன்றியது.



இந்த படத்திற்கான கவிதை

காற்றால் வந்தது
வீழ்ந்தது எப்படியோ

தீயினால் சுட்டபோது
மண்ணில் இருந்து

எடுத்ததை மண்ணிற்கு
விட்டு விட்டு

காற்றால் வந்தது
காற்றாய் போனது.


மேலும் தனிமங்களை (Elements) ஆராயத் தொடங்கிய அறிவியலார்கள் இந்த 92
தனிமங்களும் (Elements) மிக நுண்ணிய அணுக்களால் ஆகியவை என்றும், அந்த அணுக்களும் இரண்டு நுண்ணிய அடிப்படை துகள்களால் ஆனவை என்று அறிந்தனர். அனைத்துப் பொருட்களும் இந்த இரண்டு துகள்களின் மாறுபட்ட எண்ணிக்கையினாலும் அமைப்பினாலும் உருவானவையே என்று கண்டு பிடிக்கப்பட்டது. ஆக அடிபடையாக தொன்னூற்றி இரண்டு என இருந்தது சுருங்கி இரண்டில் வந்து நின்று விட்டது. இந்த அண்டமும் அனைத்துப் பொருட்களும் பெரும்பாலும் இந்த இரண்டு துகள்களினால் உருவாக்கப் பட்டவை என நிறுவப் பட்டது. அவைகள் எலக்ட்ரான்,புரோட்டான் எனவும் இவை இரண்டும் கலந்துள்ள கலவைக்கு நியூட்ரான் எனவும் பெயரிடப் பட்டது.

இந்த நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் அணுவாக எப்படி அமைந்துள்ளது என நீல்ஸ் போர் என்பவரால் விளக்கப் பட்ட மாடலுக்குப் பெயர் ”நீல்ஸ் போர் மாடல்” எனப் படுவதாகும். அதாவது சூரிய மண்டலம் எப்படி அமைந்துள்ளதோ அது போன்று, மையத்தில் நியூட்ரான் புரோட்டான்கள் அமைதியாக இருக்க எலக்ட்ரான்கள் அதைச்சுற்றிக் கொண்டே இருக்கின்றன.



                                         அண்டத்தில் உள்ளது பிண்டமானது.
 

                                          பிண்டத்தில் உள்ளது அண்டமானது. 


                                         பிண்டத்தில் உள்ளது அண்டமானது. 

                                                                      லிதியம் அணு
 
                 மேலே உள்ளது லிதியம் என்ற தனிமத்தின் அணு அமைப்பு. 



இதுதான் அமெரிக்காவின் அணுசக்தி அமைப்பின் அடையாளமாக வைக்கப் பட்டுள்ளது


ஏதோ ஒரு பிரளய அழிவினால் இன்றுள்ள அனைத்து உயிரினமும்,அறிவியல் அறிவும் அழிந்து போய்விட அடுத்து தோன்றும் உயிரினத்துக்கு, மிகக் குறைந்த வார்த்தைகளில் சொல்லப்படும் அதிகளவில் தகவல்கள் உள்ள அறிவியல் செய்தி என்னவாக இருக்கும் என்று ரிச்சர்டு ஃபெய்மன் என்ற அறிவியலாரிடம் கேட்டதற்கு அவர் கூறிய செய்தி இது தான்,

”அனைத்துப் பொருட்களும், அழுத்தினால் எதிர்க்கும், விலக்கினால் ஈர்க்கும் இடையறா இயக்கம் உள்ள ஒருவகை துகள்களினால் ஆனவையே”


அழிவுக்குப் பின்னும்


கடந்த 200 வருடங்களில் நூற்றுக்கணக்கான அறிஞர்கள், சில சமயங்களில் உயிரைக் கொடுத்து கூட கண்டுபிடித்தவற்றை இதைவிட சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூற முடியாது. இந்த ஒரு கண்டுபிடிப்புதான் எல்லாவற்றிற்கும் திறவுகோல்.

ஆக இந்த அண்டத்தில் கானப்படும் பொருட்களுக்கும் இயக்கத்திற்கும் காரணம் சில துகள்களும், சில விசைகளும், சிலவிதிகளும் தான் என்பது முடிவாயிற்று. அதில் சில முக்கியமான விசைகள் என்னவென்று பார்ப்போம்.


விசைகள்

1) ஈர்ப்பு விசை

2) மின் காந்த விசை

3)அணுக் கருவிசை(வலியது)

4)அணுக் கருவிசை(மெலியது)

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

1) ஈர்ப்பு விசை

எடையுள்ள பொருட்களெல்லாம் தங்களது எடைக்குத் தக்கவாறு எடையின் மையத்தை நோக்கி மற்ற பொருட்களை இழுக்கும் ஈர்ப்பு விசை கொண்டுள்ளது. இது பொருட்களின் எடையையும் இடையேயுள்ள தூரத்தையும் மட்டும் பொறுத்துள்ளது. இருப்பதிலே மிகவும் பலமற்ற விசை இதுதான்.ஆனாலும் இதனுடைய பிரமாண்டத்தை புரிந்து கொள்ள ஒரு உதாரணம், சுமார் எட்டு கோடி மைல் தொலைவில் மணிக்கு சுமார் 70,000 மைல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தையும் நிலவையும் இழுத்து பிடித்து தனது வட்டபாதையில் சூரியன் வைத்திருப்பதற்கு காரணம் இந்த பலமற்ற விசைதான். இந்த விசைக்கு தூரம் ஒரு பொருட்டல்ல எடை இருந்தால் போதும்.

2) மின்காந்த விசை

முதலில் காந்த விசை, மின்விசை என தனித்தனியாக வகைப்படுத்தப் பட்டிருந்தது. ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளதால் இரண்டும் ஒன்றாக்கப்பட்டது. காந்தத்தில் வடதுருவம் தென் துருவம் உள்ளது போல் மின்விசை இரு வகைப்படும். அவை முறையே நேர் மின்னோட்டம், எதிர் மின்னோட்டம் ஆகும். இதன் முக்கிய பண்பு ,ஒத்த மின்னோட்டங்கள் ஒன்றை ஒன்று விலக்கி தள்ளும் மாறுபட்ட மின்னோட்டங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்ளும். காந்தத் துண்டுகளிலும் மாறுபட்ட துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கவும் ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கவும் செய்யும், இந்த பண்பை பார்த்திருப்பீர்கள்.இது ஒரு பலமான விசைதான்.

3)அணுக்கருவிசை(வலியது)

இது துகள்களுக்கிடையேயான ஈர்ப்பு விசைதான்.வலுவான விசை என்பது நியூட்ரான், புரோட்டான் இவைகளுக்கிடையேயான ஈர்ப்பு விசையாகும். மிக நெருக்கத்தில் அதாவது அணுவுக்குள் மட்டும் தான் இந்த விசை செயல்படும். இதை மைக்ரோ மில்லிமீட்டரில் செயல்படும் ஈர்ப்பு விசையாக கூட கருதலாம்.ஆனால் ஈர்ப்பு விசையை விட பல பில்லியன் பில்லியன் மடங்கு பலமானது இவ்விசைக்கு பலம் ஒரு பொருட்டல்ல தூரம் தான் பொருட்டு.


4) அணுக்கருவிசை(மெலியது)

இது பொதுவாக கதிர் வீசும் இயல்புடன் சம்பந்தப் பட்டது. கதிரியக்கத்துடன் தொடர்புடையது. பின்னர் பார்க்கலாம்.

துகள்கள்

இப்பொழுது துகள்கள் பற்றி பார்ப்போம். அந்த இரண்டு அடிப்படை துகள்களும் முறையே புரோட்டான், எலக்ட்ரான் ஆகும். புரோட்டான் ஓர் அலகு எடையும் ஓர் அலகு நேர் மின்னோட்டமும் கொண்டது. எலக்ட்ரான் எடையற்றது, ஆனால் ஓர் அலகு எதிர் மின்னோட்டம் மட்டும் கொண்டது. புரிதலின் எளிமை கருதி ஒரு உருவகத்திற்காக புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் இவற்றை முறையே சிவன்(ஆண்), சக்தி (பெண்), அர்த்த நாரீஸ்வரராக (ஆண்+பெண்) குறிப்பிடுகிறேன். அப்பொழுதான் சிவசக்தியை பார்க்கும் போது ஒரு ஹைட்ரஜனும் , அர்த்தநாரீஸ்வரரை பார்க்கும் போது நியூட்ரானும் ஞாபகத்திற்கு வரும்.

ஒரு அணுவுக்குள் புரோட்டானும், எலக்ட்ரானும் எப்பொழுதும் சம எண்ணிக்கையில்தான் இருக்கும். புரோட்டான் மையத்தில் இருக்கும்.ஆகவே எலக்ட்ரானின் எண்ணிக்கையும் இருப்பிடமும் தான் பொருட்களின் தன்மையை தீர்மானிக்கின்றது.
 

புரோட்டானும் (நேர் மின் துகள்) எலக்ட்ரானும் (எதிர் மின் துகள்) அருகருகே இருந்தால் ஒன்றை ஒன்று ஈர்த்து சிவன், சக்தியாக இருந்தவர்கள் சக்தியாக மாறி மறைந்து விடுவதைப் போல் சக்தி வெளிப்பாட்டுடன் மறைந்துவிடும். ஆனால் எலக்ட்ரான் சுற்றிக் கொண்டு இருப்பதால் ஒன்றை ஒன்று நெருங்குவது தடுக்கப்படுகிறது.

                                                          சிவசக்தி (ஹைட்ரஜன்)

                                                அர்த்தநாரீஸ்வரார் (நியூட்ரான்)

நியூட்ரானைத் தனிமைப்படுத்தினால் அது நிலையற்றது. (ஏதோ பக்தர்கள் விரும்பினால் மட்டும் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்து மறைவது போல்) சில நிமிடங்களில் சிதைவுற்று எலக்ட்ரான். புரோட்டான் நியூட்ரினோ என மூன்று துகள்களாக மாறிவிடும். நியூட்ரினோ ஒரு அடிப்படை துகள் இல்லையா எனக் கேட்கலாம், இந்தக் கேள்வி நியாயமானது. ஆனால் தற்பொழுது அது நிலையற்றது என கருத்தில் கொள்ளுங்கள் பின்னர் விரிவாகப் பார்ப்போம்.
 

ஒரு புரோட்டானும்,  ஒரு எலக்ட்ரானும் உள்ள, பொருட்களுக்கெல்லாம் ஆதிமூலமாக கருதப்படும் ஹைட்ரஜனுக்கு  சரியான உதாரணமாக சிவசக்தியைத் தான் குறிப்பிட வேண்டும். மேலும் நமக்கு இப்போதைக்கு, நமது சிற்றறிவுக்கு குழப்பத்தை விளைவிக்க கூடிய, முழுமையாக அறியப் படாத ஏறத்தாழ 30(முப்பது) துகள்கள் (அவைகளை சிவ கணங்களோ என நீங்கள் கருதிக் கொண்டால் அது உங்களது விருப்பம்), மற்றும் அவற்றுடன் தொடர்புள்ள கதிர்கள் பற்றிய கருத்துக்கள் உள்ளன. அவற்றைப் பற்றி விஞ்ஞானிகள் என்ன மாதிரி சரடு (String) தி(ய)ரிக்கிறார்கள் என்று பின்னர் பார்ப்போம். இப்பொழுது ”முதலில் வந்தது முதலில்” என்ற ரீதியில் பார்ப்போம்.

விதிகள்

இயற்பியல், வேதியல்,தாவரவியல்,விலங்கியல் ஆகிய எல்லாவற்றிற்கும் விதிகளும், மாறிலிகளும் ஏராளம் உள்ளன. இயற்பியலில் நமக்கு தேவையான விதிகளை மட்டும் பார்ப்போம்.

1)” இயங்கும் இயங்காப்பொருட்கள் அனைத்தும் வேறெரு விசை தாக்காத வரை அதே திசையில் தனது நிலையிலேயே தொடர்ந்து இருக்கும்.” இந்த விதியை மட்டும் நீங்கள் சரியாக புரிந்து கொண்டால் பிற்காலத்தில் நீங்கள் ஒரு ஐன்ஸ்டீன்தான். இயற்பியலின் மூலாதாரம் இதுதான். எல்லா இயற்பியல் கண்டுபிடிப்புகளுக்கும் ஆதாரம் இதுதான்

2) ஒவ்வொரு விசைக்கும் எதிர் விசை உண்டு.

3) ஈர்ப்பு விசை எடைக்கு நேர் விகிதத்தில் கூடுகிறது, தூரத்தின் அடுக்கிற்கு எதிர் விகிதத்தில் குறைகிறது என சுமாராக அறிந்து கொள்ளலாம்.

4) ஒத்த மின்னோட்டங்கள் ஒன்றை ஒன்று விலக்கி தள்ளும் மாறுபட்ட மின்னோட்டங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்ளும்.

ஒரு பொருளின் வேகத்தை எது வரைக்கும் அதிகப் படுத்தலாம்?.வேகத்தை கூட்ட கூட்ட கூடிக் கொண்டேதான் இருக்கும். ஆனால் வேகம் கூட ஆரம்பித்தவுடன், அது காலத்தோடு போட்டுக் கொண்ட உடன்பாட்டை கையில் எடுத்துக் கொண்டு காலத்தை கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ளும். வேகம், எனக்கு ஒரு வரம்பு உள்ளது அதற்கு மேல் கூடமாட்டேன் ஆகவே நீ உன்னை குறைத்துக் கொள் என்று காலத்திடம் கூறிவிடும்.(Time dilation)

அது என்ன உடன்படிக்கை?

எப்பொருளாயிருந்தாலும் அதன் வேகத்தின் எல்லை, ஒளியின் வேகத்திற்கும் குறைவுதான், ஃபோட்டான் போன்ற துகளால் மட்டும்தான் அந்த வேகத்தை அடைய முடியும். அதற்கு மிஞ்சிய வேகம் கிடையாது. எந்த பொருளாவது ஒளியின் வேகத்தை அடையும் போது (அடைய முடியாது என்பதுதான் உன்மை, நெருங்கும் போது) அந்த இடத்தில் காலம் தன்னை மிகவும் அதீதமாக சுருக்கிக் கொள்ளும். எடையோ எல்லையில்லாத அளவுக்கு கூடிவிடும், பொருளின் நீளமும் எல்லையில்லாத அளவுக்கு குறைந்துவிடும்,ஒரே தொகுப்பில் எதிரெதிர் திசையில் சென்றாலும் ஒன்றை ஒன்று சார்ந்து எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் ஒளியின் வேகத்தை மீற முடியாது.(லாரன்ஸ் டிரான்ஸ்பார்மேஷன்கள்)(Lorentz Transformations)

வேகம், காலம், எடை, வெளி ஆகிய நான்கும் பெரு வெடிப்புக் காலத்தில் பிறக்கும் போது போட்டுக் கொண்ட ஒப்பந்தம் அது. நான்கும் ஒரு தொகுப்பை (Frame of reference) பொறுத்தவரை ஒன்றை ஒன்று சார்ந்திருக்க வேண்டும் என்பதுதான் அது. அதனால்தான் அதற்கு சார்பியல் தத்துவம் எனப் பெயரிடப் பட்டுள்ளது.

எடுத்துக் கொள்ளப்பட்ட குறிப்பிட்ட தொகுப்பில் (frame of reference) ஒன்று மீறும் போது ஒளியைத் தவிர மற்ற மூன்றும் தங்களை மாற்றிக் கொண்டு ஏதோ ஒருவகையில் ஈடுகட்டிக் கொள்கிறது.

குறைந்த பட்ச வெப்பநிலை என்பது -273 பாகை செல்சியஸ் என்றும் அதற்கு கீழ் கிடையாது என்பதுவும் விதி. ஏனென்றால் பொருளில் அணுக்களின் இயக்கம்தான் வெப்பமாக உணரப் படுகிறது.அணுக்களின் (துகள்கள் அல்ல) இயக்கம் நின்றுவிட்டால் வெப்பம் சூன்யம் எனப்படும். அந்த சூன்ய வெப்ப நிலைதான் 0 டிகிரி கெல்வின்(-273 டிகிரி செல்ஸியஸ்). உலகில் வெப்பம் என்பது மட்டும்தான் உள்ளது குளிர் என்று ஒன்று அறிவியலைப் பொறுத்தவரை இல்லை. அந்த மைனஸ் என்பதெல்லாம் ”பனிக்கட்டியைப் பொறுத்து” என்கிற மனிதக் கற்பிதக் கணக்கு. (இங்கேயும் ஃப்ரேம் ஆப் ரெபரன்ஸ் தான்). மனிதன் எப்படி காலத்தை கி.மு, கி.பி என்று பிரித்து குழப்பியடிக்கிறானோ அது போன்றதுதான். (இந்த கி.மு, கி.பி பற்றி இன்னும் சில பட்டதாரிகளுக்கே சரியாகப் புரிய வில்லை என்பதுதான் யதார்த்த நிலை).

ஆகவே தற்பொழுது கூறப்பட்டுள்ள அமைப்பில், அணுவுக்குள் இருக்கும் புரோட்டான், எலக்ட்ரான் நிலைமை பற்றி சில கேள்விகள் எழுகிறது. உங்களுக்கு எழுகிறதா?

1) அணுவுக்குள் புரோட்டனும் எலக்ட்ரானும் ஒன்றை ஒன்று ஈர்த்து (நியூட்ரலாக) ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து சமன் செய்து சூன்யமாக மாறி விடாமல் எவ்வாறு தனித்தனியே இருக்கின்றது?




பதில் : சூரிய மண்டல மாதிரியான அமைப்பில்தான், ஈர்க்கும் பொருட்களாகி சூரியன், பூமி ஒன்றை ஒன்று ஈர்த்தாலும் ஒன்றுக்குள் ஒன்று முழ்கிவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் சுற்று வட்டப்பாதையில் பூமியின் வேகம் சூரியனின் ஈர்ப்பை சமன் செய்து விடுகிறது. ஆகவே அது போன்ற அமைப்பில் தான் நியூட்ரான், புரோட்டான் அடங்கிய நியூக்கிளியஸை மையமாக கொண்டு எலக்ட்ரான்கள் வட்டப்பாதையில் மையத்திலிருந்து இருக்கும் தூரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுற்றுவதாக கூறலாம். இங்கு எலக்ட்ரானின் சுற்றும் வேகம்தான் ஈர்ப்பை வென்று பிரித்தே வைக்கிறது. ஆகவே அணுவுக்குள் இடையறாத இயக்கம் நடந்து கொண்டே இருக்கிறது.


2) ஒன்றை ஒன்று விலக்கி தள்ளும் ஒத்த தன்மையுள்ள புரோட்டான்கள் எவ்வாறு மையத்தில் ஒற்றுமையாக சேர்ந்து இருக்க முடியும்?



பதில் : ஹைட்ரஜனை தவிர மற்ற எல்லா தனிமங்களிலும் புரோட்டான்களின் எண்ணிக்கைக்கு சமமாகவோ அல்லது கூடுதலாகவோ நியூட்ரான்கள் உள்ளன. நியூட்ரான்களின் அணுக்கருவிசை புரோட்டான்களின் தள்ளுவிசையை மிஞ்சி புரோட்டான்களை ஈர்த்து வைத்துள்ளது. ஆகவே நியூக்கிளியசில் அமைதி நிலவுகிற்து.

இங்கே காட்டப் பட்டுள்ள லிதியம் அணுவில் 3புரோட்டான்கள், 4 நியூட்ரான்கள், 3 எலக்ட்ரான்கள் உள்ளது. இதிலுள்ள அதிகப்படியான நியூட்ரான்கள், புரோட்டான்களை இழுத்துப் பிடித்து வைத்துள்ளது.

ஹைட்ரஜனில் ஒரே ஒரு புரோட்டான் இருப்பதால் தள்ளுமுல்லுக்கு இடமில்லை. ஆகவே நியூட்ரானின் தயவு தேவை இல்லை.ஆகவே நியூட்ரானும் இல்லை.

3) நியூட்ரானையும் ஏன் தனி ஒரு துகளாகக் குறிப்பிடவில்லை?

புரோட்டனும் எலக்ட்ரானும் சேர்ந்த கலவைதான் நியூட்ரான்,ஆகவே அடிப்படைத்துகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

சிவனையும் சக்தியையும் கணக்கில் கொண்டதால் அர்த்தநாரீஸ்வரரை தனியாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை அல்லவா அது போன்றதுதான்.

துகள்கள் பருப்பொருளா (குறிப்பிட்ட உருவம் கொண்டதா) ?

சூரிய மண்டல ஈர்ப்பு விசையும் அணுவுக்குள் இருக்கும் மின்விசையும் வெவ்வேறு விதமாக செயல்படும். சாதாரணமாக உபயோகத்தில் உள்ள மின் இயக்கவியல் விதிகள் எதுவும் அணுவுக்குள் உள்ள துகள்களுக்கு ஒத்து வரவில்லை. ஏனென்றால் அது துகளா அல்லது அலையா என பிரித்தறிய முடியவில்லை.அதாவது குறிப்பிட்ட உருவம் கொண்டதா அல்லது உருமில்லா ஆற்றலா எனக் கூறமுடியாத இரண்டும் கெட்டான் நிலை. காந்தத் துண்டுகளை சுற்றிலும் ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி இருப்பதை தெரிந்து கொள்ளலாம். அதைத் தான் காந்த புலம் என்கிறோம். இது காந்த அலைகளால் ஏற்பட்டதானாலும் அதுவும் ஒருவகைத் துகள் சம்பந்தப்பட்டது தான். அதனால்தான் மின்காந்த அலைகள் என்கிறோம். மின்துகள்கள் தான் காந்தஅலைக்கு காரணம்.

தொடர்வோம்..................................................... 


முந்தையபதிவு

மேலும் படிக்க...!
top