இப்பொழுதெல்லாம் மக்கள் என்ன செய்கிறோம் என்று யோசிக்காமலே காரியம் செய்கின்றனர். உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன். அன்று வியாழக்கிழமை தெட்சினாமூர்த்தி சன்னதியில் கூட்டம் அதிகமாக இருந்தது.

அங்கு எனது நன்பர் ஒருவரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவரிடம் கேட்டேன் ”வியாழனை பார்த்தீர்களா” என்று. அதற்கு அவர் அவன் சன்னதியில் இருந்து கொண்டே இந்தக் கேள்வியை கேட்கலாமா? என்று பதில் கேள்வியை போட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் நிற்பதோ தெட்சினாமூர்த்தி சன்னதியில் இவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் முழித்துவிட்டு என்ன சொல்கிறீர்கள் என்றேன். குரு பகவான் சன்னதியில் நின்றுகொண்டு ” குருவை பார்த்தீர்களா” என்று கேட்டால் என்ன சொல்வது என்றார்.
அப்பொழுதுதான் எனக்கும் புரிந்தது, தெட்சினாமூர்த்தியைத்தான் தவறாக குருபகவான் என்று சொல்கிறார் என்று.

பின்னர் அவரிடம் விளக்கம் கூறினேன். குருபகவானின் இஷ்ட தெய்வம் தெட்சினாமூர்த்தியாக இருப்பதாலும் குருபகவானுக்கு என்று தனியாக சன்னதி இல்லாததாலும் அவருடைய இஷ்ட தெய்வமான சிவபெருமானாகிய தெட்சினாமூர்த்தியை வணங்கினால் நம்மை ஒரே சாமி கும்பிடுகிற பங்காளியாக கருதி நமக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் ஏற்பட்டதுதான் தெட்சினாமூர்த்தியை, அவரது கிழமையில் வணங்கும் முறை என்று சொன்னேன். உன்மையில் நாம் வணங்குவது ஆதிமூலமான ஆலமர்ச்செல்வனாகிய, சிவபெருமானைத்தான் என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்லி புரிய வைத்தேன்.



இப்பொழுது மீண்டும் கேட்டேன் வியாழனைப் பார்த்தீர்களா? என்று. அவர் ஒரு மாதிரியாகப் பார்த்தார். சரி அவரை மேலும் குழப்ப வேண்டாமென்று நானே சொன்னேன். கடந்த ஒருமாதமாக வானில் தெரியும் வியாழனைப் பார்த்தீர்களா? ஏனென்றால் சுமார் 75 வருடங்களுக்கு ஒரு முறைதான் அது பூமிக்கு மிக அருகில் வருகிறது. அந் நிகழ்வு தற்பொழுது நடக்கிறது. போனமாதம் செப்டம்பர் 20 தேதி பூமிக்கு மிக அருகில் வந்த விஷயத்தையும் தற்பொழுது நிலவுக்கு அருகில் மிகவும் பளிச்சென்று இருப்பதையும் வானில் காட்டினேன். நீங்கள் தினமும் உங்கள் வீட்டு மாடியில் நின்றவாறே இன்னும் பலவாரங்களுக்கு வணங்கலாம் என்று கூறி அவரை குழப்பி அனுப்பிவிட்டேன்.

அவர் வீட்டிலிருந்து வணங்குவாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் தினமும் அந்த காட்சியை கான வானத்தைப் பார்க்கிறேன். நிலவுடன் தோன்றி நிலவுடன் சென்று மறைகிறது. ஆனாலும் இந்த பருவ நிலை காரணமாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் காணக் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் வானத்தைப் பார்த்து மகிழுங்கள்

2 comments:

Nilavan said...

முற்றிலும் புதிய தகவல் அளித்ததற்கு நன்றி...

இத்தகவல் தொடர்பான ஒரு சுட்டியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

http://capernightsky.blogspot.com/2010/09/jupiter-shines-extra-bright.html

அன்புடன்,
நிலவன்

Chandru said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

top