Showing posts with label கேள்வியும் பதிலும். Show all posts
Showing posts with label கேள்வியும் பதிலும். Show all posts
எனது ஆத்திகன் vs நாத்திகன் என்ற பதிவிற்கு நன்பர் ரகுநாத் என்ற நறுமனம்-அன்பன் பின்னூட்டமாக பலகேள்விகள் எழுப்பியுள்ளார் அங்கேயே பதிலளிப்பதைவிட அதையே ஒரு பதிவாக பதிவிட்டேன்

கேள்வி: கடவுள் பற்றிய என்னுடைய வரையறை (Definition) ”அவர் வரையறைக்கு உட்படாதவர்”.
நன்றாக எழுதியுள்ளீர், அலசல் என்றும் சொல்லாம் ஆயினும் தங்களின் முடிவு / பதிவின் நோக்கம் நிதர்சனம் போல் பிம்பத்தை தான் உருவாக்குகின்றது.

பதில்: ”நிதர்சனம் போல் பிம்பத்தை ” இதில் முதலாவதாக முரண்படுகிறீர்கள்

கேள்வி: தங்களின் பதிவை ஒரு முறைக்கு இருமுறை படித்தபின்பே இங்கு எனது பதிவை வைக்கின்றேன்.
தாங்கள் பதிவின் இறுதியில் வரையறுத்த தங்களின் நம்பிக்கையில் முரண்படுகின்றீர்,
கடவுள் பற்றிய என்னுடைய வரையறை (Definition) ”அவர் வரையறைக்கு உட்படாதவர்”.
ஆனால் தங்கள் பதிவிலே வரையறுத்து விட்டீர்
கடவுளை நம்பாமல் கோவிலைப் பூட்டி வைப்பவன்.
கோவிலில் சிலையாக இருப்பவன் என்று வரையறுக்கிறீர்.
கதவை பூட்டும் பூசாரி என்று சொல்லாமல் கோவிலை புட்டும் பூசாரி என்று சொல்லும் போதே, தெளிவாக கடவுளை வரையறுக்கிறீர்.

பதில்:கடவுள் பற்றிய என்னுடைய வரையறை (Definition) ”அவர் வரையறைக்கு உட்படாதவர்” என்று முடிவில் சொல்வதால் அதையே முடிவாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று புரியாதா?

கேள்வி: “for what shall i wield a dagger, o lord?
what can i pluck it out of or plunge it into
when you are all the world?”

— 10th century Indian poet and saint, Devara Dasimayya

பதில்: உங்களுடைய ரகத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லையே இதைப் பற்றிய கேள்வி எதற்கு?

கேள்வி: குரங்கிலிருந்து வந்த மனித இனத்தின் பரிணாமம் சுமார் ஒரு மில்லியன் வருடங்களுக்கு மேலானது. குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்பதற்கு நிறையவே ஆதாரங்கள் உள்ளது அதில் சந்தேகம் வேண்டாம்.
நிறைய ஆதரங்கள் உள்ளது சந்தேகம் வேண்டாம் என்கிறீர், இளமை பருவத்தை கடந்த பின் மனிதனை கடவுள் படைத்தான் என்று ஒருவன் நம்புதல் வேண்டும் அல்லவா ?
ஒருவன்
கடவுள் இருக்கு என்பதற்கு ஆதாரத்தை காட்டு
கடவுள் இல்லை என்பதற்க்கு ஆதாரத்தை காட்டு
மற்றொருவன் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதற்கு ஆதரத்தை காட்டு
இங்கு ஆதாரம் எனத் தாங்கள் முன்வைப்பது யாது ?
இதனை ஒரு முறக்கு இருமுறை படித்து நான் கூற விழைவதை புரிந்து விளக்கம் அளிக்கவும்.

பதில்: எழுதியவன் ஒரு முறைக்கு இருமுறை படிக்கவேண்டிய அவசியமில்லை.. நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டு சரியாக கேள்வி கேட்டால் போதும்.

கேள்வி: இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருட்களும் தானாகத் தோன்றியது
கடவுளை நம்புவனுக்கு ஒரே ஒரு நம்பிக்கைதான் கடவுள் மட்டும்தான் தானக தோன்றினார்
பதிவின் முடிவில் தாங்கள் ஆத்திகன் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். கடவுள் மட்டும் தானாக தோன்றினார், மற்றவைகள் தானக தோன்றாமல் பிறரால் தோற்றுவிக்கபட்டது, தோற்றுவித்தவர் கடவுள், அவ்வாறு தானே ! குரங்கை கடவுள் தோற்றுவித்து மனிதனை மட்டும் பரிணாமவியல் என்ற நிகழ்வில் விட்டுவிட்டார் கடவுள் !

பதில்: கேள்வியில் தெளிவில்லை. நான் ஆத்திகனுமல்ல நாத்திகனுமல்ல. சமூக அக்கறைக்காக யாரை வேண்டுமானாலும் தட்டிக் கேட்க தயாராக உள்ள மனிதன்.
கேள்வி: தங்களின் பதிவின் "முடிவு" அது தானே, வரையறைக்கு உட்படாதவரை தாங்கள் கடவுள், கடவுள் இவ்வாறு என பல இடங்களில் வரையறுகீற்கள்.

பதில்:பல இடங்களில் கடவுளைப் பற்றிய வரையறை நான் அரை குறையாக சொல்வதாக உங்களுக்கு தோன்றினாலும் முடிவாக சொல்லப்படுவதுதான் முழுமையானது. ஆகவே அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

கேள்வி:அதைச் சார்ந்த தங்களின் ஒரு பின்னுட்டம்
Quote:
//தொடர்ந்து வருகை தாருங்கள் உங்களை விபூதி தட்டுடன் நிப்பாட்டுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்//

பதில்: ஆமாம் அந்த பதில் அவருக்கு.
கேள்வி ஒன்றாயினும் ,கேட்கப் படும் நபரை பொறுத்துதான் பதிலும் அமையும்.காலம் மாறி கேட்கப் படும் கேள்விக்கும் பதில் மாறுபடும் என்பதையும் குழந்தையின் கேள்விக்கான பதிலும் முதியவரின் கேள்விக்கான பதிலும் மாறுபடும் என்பதையும் முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஆகவே அதை இங்கே குறிப்பிடவேண்டாம்.
உங்களுடைய தன்விவரம் கொடுத்தால், பொத்தாம் பொதுவாக பேசாமல் தெளிவாக விவாதிக்கலாம். ஏனெனில் விவாதமும் விவாஹமும் சம அந்தஸ்தில் இருந்தால் தான் முழுமை ஏற்படும். நீங்கள் நாத்திகரா அல்லது ஆத்திகரா? நாத்திகர் என்றால் பெரியார் பாசறையில் இருப்பவரா? கடவுள் மறுப்பு மட்டுமா அல்லது மூடநம்பிக்கை ஒழிப்புமா? எவையெல்லாம் மூட நம்பிக்கை? உங்களுடைய வயதென்ன? நீங்கள் என்ன மதம்? இஷ்டமிருந்தால் சொல்லுங்கள். சொல்லாவிட்டாலும் தொடருங்கள். முதலில் தலைப்பை படியுங்கள் இது ஆத்திகம் vs நாத்திகம் அல்ல ஏனென்றால் அது தீராத பிர்சனை. நாசாவின் கேண்டீனிலும் இந்தப் பிரச்னை உள்ளது. நம்மாலும் தீர்க்க முடியாது. ஆனால் இந்த உளுத்துப்போன நாத்திக வாதத்தால் கால விரயமும், சமூக ஒழுக்கக் கேடும் தான் மிச்சம் என்பது இந்த சமூகத்திற்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.ஆகவே
”ஆத்திகன் vs நாத்திகன்” என்று மனிதனைப் பற்றி விவாதிப்போம் .


கேள்வி: ”//பூசாரியாய் இருப்பவனும் கடவுளை நம்புவதில்லை” என்பதில் என்ன வரையறைக் குழப்பம்?//

கோயிலை பூட்டுவதால் அவர் நாத்திகராவார், ஏன் ? கடவுளை நம்பாமல் கோயிலை பூட்டுகிறார்... கடவுள் என்பதை தங்களால் விளக்க முடியவில்லை explain / define, ஏனெனில் அது நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கிறது, தனி மனிதனின் மனநிலைக்கு ஏற்ப, அவ்வாறு தானே.

பதில்: கடவுள் என்பதை விளக்கமுடியாது என்பதைத்தான் விளக்கியுள்ளேன். புரிந்து கொள்ளாமலே விவாதம் பன்னுகிறீர்கள். I explained by my definition.

கேள்வி: நான் ஒன்றை பதிவிட்டேன், அதை மீண்டும் பதிவிடுகின்றேன்... தாங்கள் அதில் என்ன புரிந்துக் கொண்டீர் என்பதனை தெளிவாக்கவும்

“for what shall i wield a dagger, o lord?
what can i pluck it out of or plunge it into
when you are all the world?”

— 10th century Indian poet and saint, Devara Dasimayya
இதை விட்டுவிட வேண்டாம், மறவாமல் இது பற்றிய தங்களின் கருத்தை தெரிவிக்கவும்.

பதில்: நீயே யாவுமாகி நின்றபின் ,ஆண்டவனே
எனக்கென்ன வேலை ?
என்கிறான் தேவார தாசிமய்யா

அவ்வாறு தெளிவாக உணர்ந்துவிட்டநிலையில் ,ஆண்டவனே ,கொல்லுவதும் கொல்லப்படுவதும் நீயாகிவிடுவதால் அந்த முதல்பாதி வேலையை நான் செய்கிறேன் என்பான் லொள்ளு பிடித்தவன். அதனால்தான் மனிதனை நல்வழிப்படுத்த ”நீ இயல்பாய் செயலாற்று பலனை நான் ஏற்றுக் கொள்கிறேன் ” என்கிறது பகவத் கீதை.

கேள்வி: இந்த பகுத்தறிவை விட்டுவிடுவோம், அது அரசியல் சார்ந்த பகுத்தறிவு, இயல்பாக அறிவை எடுத்துக் கொள்வோம், 40 வயதுக் மேல் நாத்திகம் பேசினால் அது எவ்வகையில் மூளை குன்றிய நிலை, ஏனெனில் தாங்கள் நாத்திகனாக இருந்து ஆத்திகனாக அந்த நிலையில் தெளிவை உணர்ந்திருக்கிறீகள் என்பது தங்களின் பார்வை, அதனால் தானோ தொடர்ந்து வருகை தாருங்கள் உங்களை விபூதி தட்டுடன் நிப்பாட்டுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன் என்று கூறியுள்ளீர்கள். இங்குள்ள சமூக மன நிலையை மனதில் வைத்துக் கொண்டு மக்கள் அனுகினால் அவ்வாறு தான் தெரியும்... இதைச் சார்ந்து
தங்களுக்கு பதில் கிடைக்காத கேள்விகள் எவை அதாவது நாத்திகனா இருந்தபோது, தற்போது தெளிவான பதில் கிடைத்து ஆத்திகனாக உள்ளீர்கள், கேள்விகள், பதில்கள் இரண்டையும் பகிர்ந்துக் கொள்ளவும்.

பதில்: பதில் கிடைக்காத கேள்விகளை எழுத 4० வருடங்களுக்கு மேலாகும். உதாரணத்துக்கு விருமாண்டி பாணியில், உங்களுக்கு எங்கே எப்பொழுது அரிக்கும் என்று என்னால் ஏன் சொல்ல முடியவில்லை. இதற்கான நேரடியான பதில் கிடைக்கும் வரை நான் நாத்திகனல்ல

கேள்வி: நன்று, ஆதாரம் என்பது என்ன, அதன் அவசியம் பற்றிய தங்களது கருத்து?

பதில்: இந்தக் கேள்வி கேட்கப்பட்டதன் அர்த்தம் விளங்கவில்லை.

கேள்வி://ஆண்டவன் ஆற்றலையும் சில விசைகளையும்,சில விதிகளையும் ஒரு புள்ளியில் இருந்து வெடிக்கச் செய்து எந்தக் கட்டத்திலும் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.//
இது முன்முடிவு... a premise.

பதில்: அறிவியலின் ஆரம்பம் அனுமானம்


மேலும் படிக்க...!
பாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக்குள்ளயே தனது வயிற்று தசைகளினால் முட்டை ஒட்டை உடைத்து அதிலுள்ள திரவப் பொருட்களை செரித்து விட்டு வெறும் முட்டை யோட்டை மட்டும் திருப்பி கக்கிவிடும். பாம்புக்குத் தெரியும் முட்டையில் பலவிதமான புரோட்டீன்கள் உள்ளன என்று. ஆகவே முட்டையின் மீது அதற்கு ஒரு விதமான ஈர்ப்பு எப்பொழுதும் உண்டு.

பறவைகள் தங்களது செரிமானத்துக்கென்றே சில கடினமான முனைகளை கொண்ட கற்களை தேடி எடுத்து விழுங்குகின்றன. நாளடைவில் அவைகளின் கூர் மழுங்கிய பின்னர் அவைகள் உண்மையிலே நன்றாக பளபளப்பாக இருக்கும்.அவை இனிமேலும் பயன்படப் போவதில்லை என்பதை அறிந்து அவற்றை தங்களது எச்சத்துடன் வெளியேற்றி விடுகின்றன. அவற்றில் கோடியில் ஒன்று மரகதமாகவோ, மாணிக்கமாகவோ, இரத்தினமாகவோ இருக்க வாய்ப்புண்டு. அவ்வாறு வெளியேற்றப்படும் கற்களில் உள்ள எச்சத்தின் வாடையால் முட்டையோ என நினைத்து பாம்புகள் விழுங்கி விடும் வாய்ப்பு உள்ளது. பின்னர் அவற்றை செரிக்க முடியாமல் கக்கி விட்டுச் சென்றுவிடும். பறவைகள் வாழும் இடங்களில் கிடக்கும் கற்களைத்தான் விழுங்குகின்றன.

இவ்வாறு தான் பாம்பு போற போக்கில் முட்டை என நினைத்து முட்டை போல உள்ள பளபளப்பான கற்களையும் விழுங்கிவிடும். ஆனால் அதை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்து சிறிது நேரங்கழித்து அதை கக்கிவிடும். அவ்வாறு கக்கும் முன் அகப்பட்ட பாம்பை போஸ்ட் மார்ட்டம் செய்த காட்டுவாசிகள், ஆஹா நாகமாணிக்கமாக இனிமேல்தான் மாறும் என கதை கட்டி விடுவார்கள்.

ஆனால் கக்குவதற்கு சிறிது சிரமப் படும், நேரமும் எடுத்துக் கொள்ளும். சில சமயங்களில் பாம்பு விழுங்கும் கற்களில் மாணிக்கம் போன்ற மதிப்புள்ள கற்களாக இருந்து விட வாய்ப்புண்டு. ஆனால் அதற்கு அது விலையுர்ந்த கல்லென்று கண்டிப்பாகத் தெரியாது. ஆதலால் அதையும் கக்கிவிடும். இதை தற்செயலாக பார்ப்பவர்கள் பாம்பு நாக மாணிக்கம் வைத்திருப்பதாகவும் அதை வைத்துதான் அதில் இருந்து வரும் ஒளியினால் இரவில் இரை தேடுவதாகவும் கதை கட்டி விடுகிறார்கள்.

எந்தவித உயர்ந்த கற்களுக்கும் சுயமாக ஒளிவீசும் தன்மை கிடையாது என்பதை படித்தவர்களும் மறந்துவிட்டு கற்களை தேடி அலையும் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது. ஒளியின் ஏதாவது ஒரு கீற்றாவது இருந்தால் தான் கற்கள் அதை தனக்குள் சேதாரம் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான முறை பிரதிபலித்து தன்னைக் காட்டிக் கொள்ளுமே தவிர அதிலிருந்து ஒளி கிடைக்கவே கிடைக்காது. இதில் கல்லின் மதிப்பு என்பது அதன் நிறத்தையும் அதன் பிரதிபலிக்கும் தன்மையையும் அது ஏற்படுத்தும் ஒளி விலகலின் கோண(Refractive Index) அளவையும் பொறுத்துத் தான் மதிப்பிடப்படுகிறது.

ஒரு கல்லின் மதிப்பு அதற்கு பட்டை தீட்டப் படும் தரத்தின் தன்மையைப் பொறுத்தும் பட்டைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும்தான் உயருகிறது. வைரத்திற்கும் சொந்தமாக ஓளி கிடையாது. வைரம்தான் உலகத்திலேயே மிகவும் கடினமான பொருள் என்பதால் அதன் பட்டை பரப்பு எளிதில் சேதமாகாததால் நீண்ட காலத்திற்கு அதன் ஒளி பிரதிபலிக்கும் தன்மை மாறாமல் இருக்கிறது.

மேலும் வைரத்திற்குத்தான் ஒளிவிலகலின் கோண அளவும் அதிகம். அதாவது அதனூடே ஒளி செல்லும் வேகம் குறைவாக இருக்கிறது.
கோழிக்கல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மேலும் படிக்க...!
சாப்பிட்டவுடன் ஏன் தூங்க வேண்டும் அல்லது ஓய்வு எடுக்க வேண்டும்?

சாப்பிட்டவுடன் சிறிது நேரம் தூங்க வேண்டும் அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். 40 வய்துக்கு மேலானவர்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும். ஏனென்றால் சாப்பிட்டவுடன் இரைப்பை மற்றும் குடல் முழுவீச்சில் செயல் படுகிறது. அது அவ்வாறு வேலை செய்வதற்கு இதயமும் முழுவீச்சில் செயல் படவேண்டும். இவ்வாறு இதயம்100% இரைப்பைக்காக வேலை செய்வதால் அதற்கு எந்த அதிகப்படியான வேலை எதுவும் கொடுக்கக்கூடாது என்பதால் மூளை தூக்கத்தை வரவழைக்கிறது.

அதையும் மீறி சிலர் அதிக உடல் உழைப்பு செய்வார்கள் எனில் சிலசமயங்களில் மாரடைப்பு ஏற்படும். சாப்பிடுவது, குளிப்பது ஆகியவை இருதயத்திற்கு அதிகப் படியான வேலை கொடுக்க கூடிய விஷயங்கள்.குளிர்ந்த நீரில் குளிக்கும் போது நமது உடம்பின் மேற்பரப்பு முழுவதும் வெப்பநிலையை சரி செய்ய அதிக இரத்த ஓட்டம் தேவைப் படுகிறது.ஆகவே இருதயம் அதிக வேலை செய்கிறது. அதனால்தான் சாப்பிட்டவுடன் குளிக்ககூடாது என்பார்கள். குளித்தவுடன் சாப்பிடலாம் ஆனால் சாப்பிட்டு விட்டு குளிக்ககூடாது இருதயம் பலவீனமானவர்களுக்கு மரணத்தை கூட ஏற்படுத்தி விடும்.

ஆகவே சாப்பாட்டுக்குபின் 2 மணிநேரம் ஓய்வு தேவை.


மேலும் படிக்க...!
கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலர்

எனக்கு ஒருவர் கேள்வி எழுப்பினார். உங்கள் வலைப் பதிவுகள் ஏன் கறுப்புக்கலரில் இருக்கிறது. கறுப்புதான் உங்களுக்கு பிடித்த கலரா? என்று. கறுப்பை ஒரு கலர் என்றே கருதமாட்டேன் ஆனாலும் ஒரு காரணமாகத்தான் வைத்துள்ளேன்.
உங்களது மானிட்டரில் முழுத்திரையும் வெண்மையாக இருந்தால் மானிட்டர் அதன் 100% மின் சக்தி செலவில் வேலை செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். திரையில் முழுவதும் கறுப்பு வண்ணம் இருந்தால் 30% மின்சாரம்தான் செலவாகும். உங்கள் திரையில் வெண்மை வந்தால் உங்கள் பைசா அதிகமாகச் செலவாகும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்த எளிய முறையை பின் பற்றி ஆப்ரேட்டிங் சிஸ்டம், மற்றும் மென்பொருள் தயாரிப்பாளர்கள் அதிலும் குறிப்பாக மைக்ரோசஃப்ட், தங்களது தயாரிப்பு பயன் படுத்தப் படும் பொழுது உதாரணமாக MS Office,MS Word,எக்ஸ்புளோரர், பிரவுசர், கூகுள் சர்ச்,ஒர்குட், ஃப்பேஸ்புக், டிவிட்டர்,G-mail,hotmail,Yahoo, மற்றும் பிரபல் வெப்சைட்டுகளின் ஹோம்பேஜ், ஸ்டாண்ட் பை மோட் ஆகியவற்றிற்கு அதிகமாக கறுப்புத்திரை அமையுமாறு பார்த்துக் கொண்டால் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான வாட்ஸ் மின்சாரம் மிச்சமாகும்.மேலும் மானிட்டரின் ஆயுளும் கூடும். கண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

நீங்கள் என்னுடைய வலைப்பதிவை படித்துக் கொண்டிருக்கிறீர்கள், அப்பொழுது மின் தடை ஏற்படுகிறது. இப்பொழுது உங்கள் கணினி, யுபிஎஸ்சில் உள்ள மின்சாரத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறது. யு பி எஸ் புதிதாக இருந்தால் 15 நிமிடமும், பழசாகி விட்டால் 5 நிமிடமும் வேலை செய்யும். என்னுடைய வலைப்பதிவை படித்துக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு 30% மினசாரம் மிச்சப் படுகிறது. 15 நிமிடம் வேலை செய்யும் யுபிஎஸ் என்னுடைய பதிவை படிக்கும் போது கூடுதலாக 5 நிமிடங்கள் படிக்கும் வரை வேலை செய்யும்.

என்னுடைய வலைப்பதிவிற்கு நீங்கள் வருவதால் உங்களுக்கு என்னால் ஆன சிறு உதவி, எப்பொழுதும் உங்களது மின் செலவில் 30% மிச்சம் ஆகும். ஆகவே தவறாது அடிக்கடி வாருங்கள்

மேலும் படிக்க...!
நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் நீலநிறம் காரணம் ஏன் கண்ணா? என்று கண்ணதாசனும் இந்த கேள்வியை கேட்டார் ஆனால் பதில் சொல்லாமல் விட்டு விட்டார்.அதற்கான பதிலைத்தான் சர் சி.வி.இராமன் கண்டு பிடித்தார்.

ஒளியானது சக்திச் செலவின்றி எவ்வளவு தூரமும் செல்லும் என்றும் எத்தனை முறையும் பிரதிபலிக்கும் என்றும் நிலை நாட்டப்பட்ட சித்தாந்த்தத்தை முதன் முதலில் தவிடு பொடியாக்கினார் சர்.சி.வி.இராமன்.

ஒவ்வொரு பிரதிபலிப்பிலும் ஒளி அத்தளத்தின் மீது மோதுவதால் ஒளிக்கு சக்தி இழப்பு ஏற்படுகிறது.இந்த சக்தி இழப்பு அலை நீளத்தில் சரிக்கட்டப் படுகிறது. அதனால் ஒளியின் அலைநீளம் ஒரு நுண்ணிய அளவில் குறைந்து நிறமாற்றம் பெறுகிறது. அதாவது நீல நிறத்தை நோக்கிய மாற்றம் ஏற்படுகிறது.கடைசியில் பிரதிபலிப்புகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு நீலமாக மாறுகிறது.இதுதான் இராமனின் விளைவு.

இதனால்தான் வானம் ,கடல் ஆகியவை நீலமாகத் தெரிகிறது.

இந்த கண்டுபிடிப்பினால் எந்த பொருளையும் எளிதாக அடியாளம் கண்டுபிடிக்கவும் வகைப்படுத்தவும் முடிகிறது. பிரதிபலிப்பின் போது பிரதிபலிக்குமுன் பிரதிபலிப்புக்குபின் வெளியேறும் அலைகளின் நீளத்தில் உள்ள வித்தியாசத்தை வைத்து பிரதிபலித்த பொருள் என்ன வகையானது என கண்டுபிடிக்கப் பயன்படுகிறது.

மேலும் படிக்க...!
top