நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் நீலநிறம் காரணம் ஏன் கண்ணா? என்று கண்ணதாசனும் இந்த கேள்வியை கேட்டார் ஆனால் பதில் சொல்லாமல் விட்டு விட்டார்.அதற்கான பதிலைத்தான் சர் சி.வி.இராமன் கண்டு பிடித்தார்.

ஒளியானது சக்திச் செலவின்றி எவ்வளவு தூரமும் செல்லும் என்றும் எத்தனை முறையும் பிரதிபலிக்கும் என்றும் நிலை நாட்டப்பட்ட சித்தாந்த்தத்தை முதன் முதலில் தவிடு பொடியாக்கினார் சர்.சி.வி.இராமன்.

ஒவ்வொரு பிரதிபலிப்பிலும் ஒளி அத்தளத்தின் மீது மோதுவதால் ஒளிக்கு சக்தி இழப்பு ஏற்படுகிறது.இந்த சக்தி இழப்பு அலை நீளத்தில் சரிக்கட்டப் படுகிறது. அதனால் ஒளியின் அலைநீளம் ஒரு நுண்ணிய அளவில் குறைந்து நிறமாற்றம் பெறுகிறது. அதாவது நீல நிறத்தை நோக்கிய மாற்றம் ஏற்படுகிறது.கடைசியில் பிரதிபலிப்புகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு நீலமாக மாறுகிறது.இதுதான் இராமனின் விளைவு.

இதனால்தான் வானம் ,கடல் ஆகியவை நீலமாகத் தெரிகிறது.

இந்த கண்டுபிடிப்பினால் எந்த பொருளையும் எளிதாக அடியாளம் கண்டுபிடிக்கவும் வகைப்படுத்தவும் முடிகிறது. பிரதிபலிப்பின் போது பிரதிபலிக்குமுன் பிரதிபலிப்புக்குபின் வெளியேறும் அலைகளின் நீளத்தில் உள்ள வித்தியாசத்தை வைத்து பிரதிபலித்த பொருள் என்ன வகையானது என கண்டுபிடிக்கப் பயன்படுகிறது.

0 comments:

top