சமஸ்கிருதம்   எப்படி உருவானது ?.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

என்கிறார் வள்ளுவர். இக்குறளின் பொருள் மிகவும் வெளிப்படை. "பரிபூர்ண நிலையடைந்த மொழியை உருவாக்கிய, முன்னோரின்  பெருமையானது, அவர்கள் வாழுமிடத்து வழங்கப்படும் மறைமொழி கொண்டு அறியப்படும்" என்கிறார். மறைமொழி என்பதில் குழப்பம் ஏதுமில்லை. அது மறைத்து வைக்கப்பட்ட மொழி அல்லது ஒரு சங்கேத மொழி. மறை என்ற வேர்ச் சொல்லின் அர்த்தம் "ஒளித்து வை" என்பதாகும்.  குறளுக்கு விளக்கம் சொன்ன அனைவரும் மறைமொழி என்பதற்கு மந்திரம் என்கின்றனர். மந்திரம்’ என்ற சொல் தொல்காப்பியத்திலும் பயன்படுத்தப் படுகிறது.
“நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழிதானே மந்திரம் என்ப” (பொரு- 480)
இதன் பொருள் :”நிறைந்த மொழியையுடைய மாந்தர்,
தமதாணையால் சொல்லப்பட்ட மறைந்த சொல் மந்திரமாகும்”.

மந்திரம் என்றாலே, மறைவாகவும், மூடி மறைத்தும் இருப்பது.
அதன் பொருள் வெளிப்படையாகத் தெரியாது. சிலர் மறை என்பதற்கு ஒழுக்கம் பற்றி கூறுவர் ஆனால் ஒழுக்கத்திற்கு அடைமொழியாக "மொழி" வராது மறைநூல் என்று வந்தால் கூட ஒழுக்கம் சம்பந்தப் பட்டதாக ஏற்றுக் கொள்ளலாம்.  "நீத்தார் பெருமை"யில் கூறுவதால் முன்னோர்கள் பற்றியும் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டிய மொழிப் பாதுகாப்பும், மொழியுணர்வும் பற்றி வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவர் தன்னுடைய தமிழ்மொழியைத்தான்  நிறைமொழிக்கு உதாரணமாகக் கொண்டு விளக்கம் சொல்லி இருப்பார். அப்படி என்றால் தமிழ்நிலத்துக்குப் பெருமையாக  ஒரு மறைமொழி இருக்க வேண்டுமல்லவா. அது வேறென்ன  சமஸ்கிருதம் தான்.

சமஸ்கிருதத்தின் சுவடு பாரதத்தை தவிர வேறெங்கும்  காணப்படவில்லை என்பதாலும், (அப்படியே இருந்தாலும் அது பாரதத்தில் இருந்துதான் சென்றிருக்க வேண்டும் என்பதை மரபணு ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.) தமிழின் சமகால மொழியாக இருப்பதாலும், தமிழும் சமஸ்கிருதமும் இரட்டைமொழி போல் இருப்பதாலும் , மேலும் ஒரு தீபகற்பத்தில் இவ்வளவு சிறப்பாக இரண்டு மொழிகள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருப்பதாலும், சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்ட இனமோ குழுவோ இந்தியாவில் அறியப் படவில்லை என்பதாலும், பன்னெடுங்காலத்திற்கு (ஐயாயிரம் ஆண்டுகளுக்கு) முன்பே இரண்டு மொழிகளும் பொதுவான வார்த்தைகளை அதிகம் கொண்டிருப்பதாலும், அதில் தமிழ் மட்டும் இயற்கை மொழியாக இருப்பதாலும், மற்றொன்று செயற்கையாக இருப்பதாலும் அம்மொழி ரகசியத்திற்காகவும், புனிதத்திற்காகவும் தமிழனால் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். இராமாயண காலத்திலேயே தமிழுடன் சமஸ்கிருதம் இருந்தாக அறியப் படுகிறது, தமிழில் மட்டுமே உள்ள மொழி மற்றும் மண் சார்ந்த பழமொழிகள் சமஸ்கிருதத்தில் இருப்பதால் சமஸ்கிருதத்தையும் தமிழையும் படைத்தவன்  ஒரே இனமாகத்தான் இருக்கமுடியும். தமிழில் இருந்து சமைக்கப் பட்ட மொழி என்பதால் சமஸ்கிருதம் எனப்பட்டது.



உலகளவில் தமிழ் பரவி இருக்கும் போது சமஸ்கிருதம் ஏன் தமிழோடு பரவில்லை என்பதன் காரணம் தற்பொழுது விளங்கியிருக்கும் என நினைக்கிறேன். தமிழன் உலகம் முழுவதும் பரவும் பொழுது சமஸ்கிருதம் படைக்கப் படவில்லை. அது தமிழகத்தில் நிலைகொண்ட தமிழனால் பிற்காலத்தில் அதாவது முதற்ச் சங்ககாலத்திற்கு பின்  படைக்கப் பட்டதால் அது இந்தியாவை தாண்ட முடியவில்லை இந்திய தீபகற்பத்தில்,  இந்திய தொல்பொருள் துறையினால் கண்டு பிடிக்கப்பட்ட மிகவும்  பழமையான கல்வெட்டுகளில் ஐம்பத்தைந்து சதவீதத்திற்கு மேல் தமிழில்தான் உள்ளது. ஏனெனில் சமஸ்கிருதத்திற்கு எழுத்துரு கிடையாது. மேலும் அது பேச்சு வழக்கிலும் இல்லை. இந்த ஒரு சான்றினால் தமிழ் ஒன்றுதான் இந்தியா முழுமையும் கோலோச்சியது என்பது மட்டுமில்லாமல் மிகவும் பழமையானது என்கிற உண்மையை தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் என்பது இயல்பாக,  இயற்கையாக தோன்றியது.  மொழிகளுக்கெல்லாம் மூலமாகிய ஆதி மொழியாக விளங்கியது என்பதில் ஐயம் ஏதுமில்லை. எதியோப்பியாவில், ஹங்கேரியில், கொரியாவில், ஜப்பானில் தென் அமெரிக்காவில் என்று உலகின் எட்டுதிக்குகளிலும் காணப்படும் தமிழின் கலப்பு, உணர்த்தும் செய்தி என்னவென்றால் உலகமொழிகளின் தாய், தமிழ்தான் என்பதாகும். ஆகவே தமிழன் "சமைத்த" மொழிதான் சமஸ்கிருதமும்.

அதையேதான் விக்கி சொல்கிறது.
The Sanskrit verbal adjective sáṃskṛta- may be translated as "put together, constructed, well or completely formed; refined, adorned, highly elaborated". It is derived from the root saṃ-skar- "to put together, compose, arrange, prepare",[6] where saṃ- "together" (as English same) and (s)kar- "group" (transitive verb). (cf. Norwegian 'sammen skjær', Afrikaans 'saamskaar')


The term in the generic meaning of "made ready, prepared, completed, finished" is found in the Rigveda. Also in Vedic Sanskrit, as nominalised neuter saṃskṛtám, it means "preparation, prepared place" and thus "ritual enclosure, place for a sacrifice".

As a term for "refined or elaborated speech" the adjective appears only in Epic and Classical Sanskrit, in the Manusmriti and in the Mahabharata. The language referred to as saṃskṛta "the cultured language" has by definition always been a "sacred" and "sophisticated" language, used for religious and learned discourse in ancient India, and contrasted with the languages spoken by the people, prākṛta- "natural, artless, normal, ordinary".



 சமஸ்கிருத பேரறிஞர் ஹெச். ஹெச்.இங்கல்ஸ், "சமஸ்கிருதம் ஒரு உருவாக்கப்பட்ட, செயற்கையான மொழிதான்" என்று ஆதாரத்தோடு நிரூபிக்கிறார்.
The eminent sanskritist, Daniel H.H. Ingalls describes some peculiar characteristics of the Sanskrit language. He refers to the enormous vocabulary of Sanskrit, and also of the presence of a larger choice of synonyms in Sanskrit than any other language he knew of.Ingalls  argues  that Sanskrit is not a natural language, but an 'artificial' language. By 'artificial', he explains he means it was learned after some other Indian language had been learned by simple conditioning. Ingalls writes: 'Every Indian, one may suppose, grew up learning in a natural way the language of his mother and his playmates.


 http://en.wikipedia.org/wiki/Sanskrit

The oldest dated Tamil inscription written in the Tamil-Brahmi script has been found in Palani in Southern India, scientifically dated to 540 BCE - the oldest known Brahmi inscriptions on the Indian sub-continent.[29] More than 55% of the epigraphical inscriptions (about 55,000) found by the Archaeological Survey of India are in the Tamil language.[30] Tamil language inscriptions written c. 1st century BC and 2nd century AD have been discovered in Egypt, Sri Lanka and Thailand.[31] The two earliest manuscripts from India,[32][33] to be acknowledged and registered by UNESCO Memory of the World register in 1997 and 2005 were in Tamil.[34] Tamil is used as a sacred language of Ayyavazhi and in Tamil Hindu traditions of Shaivism and Vaishnavism. According to a 2001 survey, there were 1,863 newspapers published in Tamil, of which 353 were dailies.

http://en.wikipedia.org/wiki/Tamil_language



இராமாயணத்தில் அனுமன் சீதையிடம், தான் ராவணனின் மாயை அல்ல உண்மையான ராமனின் தூதுவன் தான் என்பதை வழக்கமான, சீதைக்கும் அனுமனுக்கும் தெரிந்த தேவ பாஷையில் பேசாமல், மனித பாஷையில் அதாவது தமிழில் பேசி உணர வைத்ததாக வால்மீகி கூறுகிறார். ஒரு வேளை ராவணன் சீதையிடம் தமிழில் பேசமாட்டானோ?. ஆகவே தேவபாஷை என்பது முக்கியமானவர்கள் கற்றுத்தேற வேண்டிய மொழி என்பதும் மக்கள் 
வழக்கில் இருந்த மொழி தமிழ் என்பதும் தெரிகிறது.

http://thamizhan-thiravidana.blogspot.in/2011/09/69.html.

அறிவு ஜீவிகள் எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் ரகசிய மொழியின் அவசியம் ஏற்பட்டு விடுகிறது. அது சமூக நன்மைக்காகவும் இருக்கலாம், சுயலாபத்திற்காகவும் இருக்கலாம். இன்றும் கூட நண்பர்களுக்குள் நான்கு பேர் கூடி விட்டால் அதில் இரண்டு பேர் கோஷ்டி சேர்ந்து கொண்டு ரகசியமாகப் பேசி மற்ற இருவரை  குழப்புவார்கள் அல்லது கலாய்ப்பார்கள். புரியாதவர்கள் மொக்கையாய், முட்டாளாய் உணருவார்கள்.  அதுமட்டுமில்லாமல் பெரியவர்கள் கூடி சில விஷயங்களில் முடிவெடுக்கும் போது சிறுவர்கள் மற்றும் தகுதி இல்லாதவர்களின் தலையீடு இல்லாமல் இருக்கவும் ரகசிய பாஷை தேவைப் படுகிறது.


மகாபாரதத்தில் ஒரு கட்டத்தில், அரக்குமாளிகையின்  நோக்கத்தை புரிந்து கொண்ட பீஷ்மர், பாண்டவர்களை காப்பாற்றுவதற்காக விதுரனிடம் அத்தகவலை சொல்லி, தருமனிடம் போய் சொல்லச் சொல்கிறார். விதுரனும் தருமனிடம் வந்து  தனிமையில் சொல்ல நினைக்கும் போது சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அப்பொழுது அவர்கள் இருவர் மட்டும் அறிந்த ரகசிய பாஷையில் தகவலைச் சொல்வதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.  ரகசிய மொழியின்  அவசியம் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே தேவைப் பட்டிருக்கிறது.

இப்பொழுதும் தமிழ் நாட்டில் ஐம்பது வயதிற்கு மேற்ப் பட்டவர்களுக்கு "கதகமிகழ்" பாஷை கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனால் இந்தமாதிரி பாஷைகளுக்கு எழுத்துருவம் தேவையில்லை என்பதுதான் முக்கியமான ஒற்றுமை. இவ்வளவு ஏன்? எங்கள் வீட்டில் கூட ஒரு ரகசிய பாஷை உள்ளது. எங்கள் குடும்பத்தினர் மட்டும் பேசிக் கொள்வோம். எனது மகளும் மகனும் பேசினால் சமயத்தில் எங்களுக்கே புரியாது. (டிகோடிங் லேட்டாகும்)



நானும் எனது நண்பனும் (வனராஜ்)  அப்பொழுதான் "ஹாம்" லைசென்ஸ் (1972)வாங்கியிருந்தோம். ஏற்கனவே ஹாம்களுக்கென்று சில குறியீடுகள் இருக்கும். அதனால் அதை ஒட்டி ஒரு பாஷையை உருவாக்கிக் கொண்டோம். நானும் நண்பனும் (சந்தேகமில்லாமல் அறிவு ஜீவிகள்தான்) அக்காலத்தில் அதாவது எழுபதுகளில், எங்களிருவருக்கான  பாஷையில் பெண்களைப் பற்றிய கமெண்ட்களை மிக சகஜமாக பஸ்ஸின் நெருக்கத்தில் கூட அவர்கள் அறியாதவாறு பேசிக் கொள்வோம்.    அதில் சில முக்கியமான வார்த்தைகளைக் கூறுகிறேன் பின் பற்ற முடிகிறதா என்று பாருங்கள். டிஎக்ஸ், ஒய்யெல், பிஎஸ், கேங்க், புஷ்புல், பைடேங்க், ஆரெஸ்டி புரிகிறதா?. இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு எழுத்துருவையும் உருவாக்கி கடிதமெல்லாம் எழுதிக் கொண்டோம். அது பழைய கதை. தற்கால சினிமாவிலும் அந்த நுட்பம் பயன்படுத்தப் பட்டிருப்பதை காணலாம்.  ஃப்ரெண்ட்ஸ் படத்தில் விஜய் "ழ்மித ஷைபா" பேசுவார். "ல்தகா யய்செ  யாசைஆ  குக்ருஇ" என்பார்.

நண்பர்கள் குழுமியிருக்கும் போது ஒரு நண்பர் இன்னொருவருக்கு திடீரென்று "குட்மானிங்" சொல்வார்கள் அதற்கு அர்த்தம் "ஜிப்பை மூடுடா இடியட் " என்று அர்த்தம். இது போன்ற சில ரகசிய குறியீடுகள் ஒவ்வொரு நட்பு வட்டத்திலும் இருக்கும். மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் மாட்டின் விலையை தங்கள் விரல்களால் பேசிக் கொள்வார்கள். இதனால் விற்பவனுக்கும் வாங்குபவனுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தும்  "விலை வைக்கும் " போக்கு தவிர்க்கப் படுகிறது. வியாபாரிகளும் ஒரு வித குறியீடுகளை தங்களது வியாபாரத்தில் பின் பற்றுகின்றனர். ஒரு பொருளின் அசல்விலையை குறியீடுகளால் குறித்திருப்பார்கள். வாடிக்கையாளரைப் பொறுத்து குறியீட்டைப் பார்த்து  லாபத்தை வைத்துக் கொள்வார்கள். இப்பொழுதெல்லாம் நிலையான லாபம் போதும் என்பதால் பார்கோட், மற்றும் க்யூ கோட்  போன்ற மெஷின்கள் மட்டும் பேசிக் கொள்ளும் மொழி முறைகளும் கையாளப் படுகின்றது.

ஆக அறிவாளிகளுக்கு, நடைமுறையில் உள்ள ஒரு மொழி தவிர்த்து தன்னைப் போன்றவர்கள் வட்டத்தில் மற்றவர்களுக்கு புரியாமல் புதிராகப் பேசி மகிழ, சன்டையிட, ரகசியங்களை பரிமாறிக் கொள்ள, தொழிலை பாதுகாக்க ஒரு மொழி மிகமிக அவசியமாகத் தேவைப் படுகிறது. தமிழ்ப் புலவர்கள் சாமானியனுக்கு புரியாமல் தங்களுக்குள் அடிக்கடி பாடியே சன்டையிட்டுக் கொண்டவர்கள் அல்லவா?  இன்றும் தமிழில் உள்ள பாடலுக்கு  பொருளுரை இல்லாமல் அர்த்தம் கொள்வது இயலாத காரியமாகத்தானே இருக்கிறது. 





மேலும் படிக்க...!
top