எனது ஆத்திகன் vs நாத்திகன் என்ற பதிவிற்கு நன்பர் ரகுநாத் என்ற நறுமனம்-அன்பன் பின்னூட்டமாக பலகேள்விகள் எழுப்பியுள்ளார் அங்கேயே பதிலளிப்பதைவிட அதையே ஒரு பதிவாக பதிவிட்டேன்

கேள்வி: கடவுள் பற்றிய என்னுடைய வரையறை (Definition) ”அவர் வரையறைக்கு உட்படாதவர்”.
நன்றாக எழுதியுள்ளீர், அலசல் என்றும் சொல்லாம் ஆயினும் தங்களின் முடிவு / பதிவின் நோக்கம் நிதர்சனம் போல் பிம்பத்தை தான் உருவாக்குகின்றது.

பதில்: ”நிதர்சனம் போல் பிம்பத்தை ” இதில் முதலாவதாக முரண்படுகிறீர்கள்

கேள்வி: தங்களின் பதிவை ஒரு முறைக்கு இருமுறை படித்தபின்பே இங்கு எனது பதிவை வைக்கின்றேன்.
தாங்கள் பதிவின் இறுதியில் வரையறுத்த தங்களின் நம்பிக்கையில் முரண்படுகின்றீர்,
கடவுள் பற்றிய என்னுடைய வரையறை (Definition) ”அவர் வரையறைக்கு உட்படாதவர்”.
ஆனால் தங்கள் பதிவிலே வரையறுத்து விட்டீர்
கடவுளை நம்பாமல் கோவிலைப் பூட்டி வைப்பவன்.
கோவிலில் சிலையாக இருப்பவன் என்று வரையறுக்கிறீர்.
கதவை பூட்டும் பூசாரி என்று சொல்லாமல் கோவிலை புட்டும் பூசாரி என்று சொல்லும் போதே, தெளிவாக கடவுளை வரையறுக்கிறீர்.

பதில்:கடவுள் பற்றிய என்னுடைய வரையறை (Definition) ”அவர் வரையறைக்கு உட்படாதவர்” என்று முடிவில் சொல்வதால் அதையே முடிவாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று புரியாதா?

கேள்வி: “for what shall i wield a dagger, o lord?
what can i pluck it out of or plunge it into
when you are all the world?”

— 10th century Indian poet and saint, Devara Dasimayya

பதில்: உங்களுடைய ரகத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லையே இதைப் பற்றிய கேள்வி எதற்கு?

கேள்வி: குரங்கிலிருந்து வந்த மனித இனத்தின் பரிணாமம் சுமார் ஒரு மில்லியன் வருடங்களுக்கு மேலானது. குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்பதற்கு நிறையவே ஆதாரங்கள் உள்ளது அதில் சந்தேகம் வேண்டாம்.
நிறைய ஆதரங்கள் உள்ளது சந்தேகம் வேண்டாம் என்கிறீர், இளமை பருவத்தை கடந்த பின் மனிதனை கடவுள் படைத்தான் என்று ஒருவன் நம்புதல் வேண்டும் அல்லவா ?
ஒருவன்
கடவுள் இருக்கு என்பதற்கு ஆதாரத்தை காட்டு
கடவுள் இல்லை என்பதற்க்கு ஆதாரத்தை காட்டு
மற்றொருவன் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதற்கு ஆதரத்தை காட்டு
இங்கு ஆதாரம் எனத் தாங்கள் முன்வைப்பது யாது ?
இதனை ஒரு முறக்கு இருமுறை படித்து நான் கூற விழைவதை புரிந்து விளக்கம் அளிக்கவும்.

பதில்: எழுதியவன் ஒரு முறைக்கு இருமுறை படிக்கவேண்டிய அவசியமில்லை.. நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டு சரியாக கேள்வி கேட்டால் போதும்.

கேள்வி: இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருட்களும் தானாகத் தோன்றியது
கடவுளை நம்புவனுக்கு ஒரே ஒரு நம்பிக்கைதான் கடவுள் மட்டும்தான் தானக தோன்றினார்
பதிவின் முடிவில் தாங்கள் ஆத்திகன் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். கடவுள் மட்டும் தானாக தோன்றினார், மற்றவைகள் தானக தோன்றாமல் பிறரால் தோற்றுவிக்கபட்டது, தோற்றுவித்தவர் கடவுள், அவ்வாறு தானே ! குரங்கை கடவுள் தோற்றுவித்து மனிதனை மட்டும் பரிணாமவியல் என்ற நிகழ்வில் விட்டுவிட்டார் கடவுள் !

பதில்: கேள்வியில் தெளிவில்லை. நான் ஆத்திகனுமல்ல நாத்திகனுமல்ல. சமூக அக்கறைக்காக யாரை வேண்டுமானாலும் தட்டிக் கேட்க தயாராக உள்ள மனிதன்.
கேள்வி: தங்களின் பதிவின் "முடிவு" அது தானே, வரையறைக்கு உட்படாதவரை தாங்கள் கடவுள், கடவுள் இவ்வாறு என பல இடங்களில் வரையறுகீற்கள்.

பதில்:பல இடங்களில் கடவுளைப் பற்றிய வரையறை நான் அரை குறையாக சொல்வதாக உங்களுக்கு தோன்றினாலும் முடிவாக சொல்லப்படுவதுதான் முழுமையானது. ஆகவே அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

கேள்வி:அதைச் சார்ந்த தங்களின் ஒரு பின்னுட்டம்
Quote:
//தொடர்ந்து வருகை தாருங்கள் உங்களை விபூதி தட்டுடன் நிப்பாட்டுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்//

பதில்: ஆமாம் அந்த பதில் அவருக்கு.
கேள்வி ஒன்றாயினும் ,கேட்கப் படும் நபரை பொறுத்துதான் பதிலும் அமையும்.காலம் மாறி கேட்கப் படும் கேள்விக்கும் பதில் மாறுபடும் என்பதையும் குழந்தையின் கேள்விக்கான பதிலும் முதியவரின் கேள்விக்கான பதிலும் மாறுபடும் என்பதையும் முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஆகவே அதை இங்கே குறிப்பிடவேண்டாம்.
உங்களுடைய தன்விவரம் கொடுத்தால், பொத்தாம் பொதுவாக பேசாமல் தெளிவாக விவாதிக்கலாம். ஏனெனில் விவாதமும் விவாஹமும் சம அந்தஸ்தில் இருந்தால் தான் முழுமை ஏற்படும். நீங்கள் நாத்திகரா அல்லது ஆத்திகரா? நாத்திகர் என்றால் பெரியார் பாசறையில் இருப்பவரா? கடவுள் மறுப்பு மட்டுமா அல்லது மூடநம்பிக்கை ஒழிப்புமா? எவையெல்லாம் மூட நம்பிக்கை? உங்களுடைய வயதென்ன? நீங்கள் என்ன மதம்? இஷ்டமிருந்தால் சொல்லுங்கள். சொல்லாவிட்டாலும் தொடருங்கள். முதலில் தலைப்பை படியுங்கள் இது ஆத்திகம் vs நாத்திகம் அல்ல ஏனென்றால் அது தீராத பிர்சனை. நாசாவின் கேண்டீனிலும் இந்தப் பிரச்னை உள்ளது. நம்மாலும் தீர்க்க முடியாது. ஆனால் இந்த உளுத்துப்போன நாத்திக வாதத்தால் கால விரயமும், சமூக ஒழுக்கக் கேடும் தான் மிச்சம் என்பது இந்த சமூகத்திற்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.ஆகவே
”ஆத்திகன் vs நாத்திகன்” என்று மனிதனைப் பற்றி விவாதிப்போம் .


கேள்வி: ”//பூசாரியாய் இருப்பவனும் கடவுளை நம்புவதில்லை” என்பதில் என்ன வரையறைக் குழப்பம்?//

கோயிலை பூட்டுவதால் அவர் நாத்திகராவார், ஏன் ? கடவுளை நம்பாமல் கோயிலை பூட்டுகிறார்... கடவுள் என்பதை தங்களால் விளக்க முடியவில்லை explain / define, ஏனெனில் அது நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கிறது, தனி மனிதனின் மனநிலைக்கு ஏற்ப, அவ்வாறு தானே.

பதில்: கடவுள் என்பதை விளக்கமுடியாது என்பதைத்தான் விளக்கியுள்ளேன். புரிந்து கொள்ளாமலே விவாதம் பன்னுகிறீர்கள். I explained by my definition.

கேள்வி: நான் ஒன்றை பதிவிட்டேன், அதை மீண்டும் பதிவிடுகின்றேன்... தாங்கள் அதில் என்ன புரிந்துக் கொண்டீர் என்பதனை தெளிவாக்கவும்

“for what shall i wield a dagger, o lord?
what can i pluck it out of or plunge it into
when you are all the world?”

— 10th century Indian poet and saint, Devara Dasimayya
இதை விட்டுவிட வேண்டாம், மறவாமல் இது பற்றிய தங்களின் கருத்தை தெரிவிக்கவும்.

பதில்: நீயே யாவுமாகி நின்றபின் ,ஆண்டவனே
எனக்கென்ன வேலை ?
என்கிறான் தேவார தாசிமய்யா

அவ்வாறு தெளிவாக உணர்ந்துவிட்டநிலையில் ,ஆண்டவனே ,கொல்லுவதும் கொல்லப்படுவதும் நீயாகிவிடுவதால் அந்த முதல்பாதி வேலையை நான் செய்கிறேன் என்பான் லொள்ளு பிடித்தவன். அதனால்தான் மனிதனை நல்வழிப்படுத்த ”நீ இயல்பாய் செயலாற்று பலனை நான் ஏற்றுக் கொள்கிறேன் ” என்கிறது பகவத் கீதை.

கேள்வி: இந்த பகுத்தறிவை விட்டுவிடுவோம், அது அரசியல் சார்ந்த பகுத்தறிவு, இயல்பாக அறிவை எடுத்துக் கொள்வோம், 40 வயதுக் மேல் நாத்திகம் பேசினால் அது எவ்வகையில் மூளை குன்றிய நிலை, ஏனெனில் தாங்கள் நாத்திகனாக இருந்து ஆத்திகனாக அந்த நிலையில் தெளிவை உணர்ந்திருக்கிறீகள் என்பது தங்களின் பார்வை, அதனால் தானோ தொடர்ந்து வருகை தாருங்கள் உங்களை விபூதி தட்டுடன் நிப்பாட்டுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன் என்று கூறியுள்ளீர்கள். இங்குள்ள சமூக மன நிலையை மனதில் வைத்துக் கொண்டு மக்கள் அனுகினால் அவ்வாறு தான் தெரியும்... இதைச் சார்ந்து
தங்களுக்கு பதில் கிடைக்காத கேள்விகள் எவை அதாவது நாத்திகனா இருந்தபோது, தற்போது தெளிவான பதில் கிடைத்து ஆத்திகனாக உள்ளீர்கள், கேள்விகள், பதில்கள் இரண்டையும் பகிர்ந்துக் கொள்ளவும்.

பதில்: பதில் கிடைக்காத கேள்விகளை எழுத 4० வருடங்களுக்கு மேலாகும். உதாரணத்துக்கு விருமாண்டி பாணியில், உங்களுக்கு எங்கே எப்பொழுது அரிக்கும் என்று என்னால் ஏன் சொல்ல முடியவில்லை. இதற்கான நேரடியான பதில் கிடைக்கும் வரை நான் நாத்திகனல்ல

கேள்வி: நன்று, ஆதாரம் என்பது என்ன, அதன் அவசியம் பற்றிய தங்களது கருத்து?

பதில்: இந்தக் கேள்வி கேட்கப்பட்டதன் அர்த்தம் விளங்கவில்லை.

கேள்வி://ஆண்டவன் ஆற்றலையும் சில விசைகளையும்,சில விதிகளையும் ஒரு புள்ளியில் இருந்து வெடிக்கச் செய்து எந்தக் கட்டத்திலும் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.//
இது முன்முடிவு... a premise.

பதில்: அறிவியலின் ஆரம்பம் அனுமானம்


மேலும் படிக்க...!
top