சாப்பிட்டவுடன் ஏன் தூங்க வேண்டும் அல்லது ஓய்வு எடுக்க வேண்டும்?

சாப்பிட்டவுடன் சிறிது நேரம் தூங்க வேண்டும் அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். 40 வய்துக்கு மேலானவர்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும். ஏனென்றால் சாப்பிட்டவுடன் இரைப்பை மற்றும் குடல் முழுவீச்சில் செயல் படுகிறது. அது அவ்வாறு வேலை செய்வதற்கு இதயமும் முழுவீச்சில் செயல் படவேண்டும். இவ்வாறு இதயம்100% இரைப்பைக்காக வேலை செய்வதால் அதற்கு எந்த அதிகப்படியான வேலை எதுவும் கொடுக்கக்கூடாது என்பதால் மூளை தூக்கத்தை வரவழைக்கிறது.

அதையும் மீறி சிலர் அதிக உடல் உழைப்பு செய்வார்கள் எனில் சிலசமயங்களில் மாரடைப்பு ஏற்படும். சாப்பிடுவது, குளிப்பது ஆகியவை இருதயத்திற்கு அதிகப் படியான வேலை கொடுக்க கூடிய விஷயங்கள்.குளிர்ந்த நீரில் குளிக்கும் போது நமது உடம்பின் மேற்பரப்பு முழுவதும் வெப்பநிலையை சரி செய்ய அதிக இரத்த ஓட்டம் தேவைப் படுகிறது.ஆகவே இருதயம் அதிக வேலை செய்கிறது. அதனால்தான் சாப்பிட்டவுடன் குளிக்ககூடாது என்பார்கள். குளித்தவுடன் சாப்பிடலாம் ஆனால் சாப்பிட்டு விட்டு குளிக்ககூடாது இருதயம் பலவீனமானவர்களுக்கு மரணத்தை கூட ஏற்படுத்தி விடும்.

ஆகவே சாப்பாட்டுக்குபின் 2 மணிநேரம் ஓய்வு தேவை.


மேலும் படிக்க...!
top