Previous

உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 16) அல்லது

”சந்துருவின் பால் விதி” (Chandru's rule of Gender determination)

விந்தணுவின் X,Y கலவையில் ஆணும் பெண்ணும் இருக்கிறது. ஆக பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஆண்தான் தீர்மானிக்கிறான். சூட்சுமம் ஆணிடம்தான் உள்ளது என்று கூறியிருந்தேன். குரோமோசம்களைப் பொறுத்த வரையிலும் நூற்றுக்கு நூறு இதுதான் உண்மைதான்.ஆனாலும் இதிலும் பெண்களின் பங்கும் சிறிதும் இருக்கிறது.பரிணாமத்தில் இது பின்னாளில் ஏற்பட்ட முன்னேற்றமாக இருக்கலாம்..

அதாவது, கலவியின் போது பெண்ணின் உறுப்பில் (Vagina) சுரக்கும் சிலவகை ஹார்மோன்கள் பெண்களின் மனநிலையைப் (அவற்றுள் ஒன்று காமத்தின் உச்சநிலை (Orgasm)) பொறுத்து கார, அமிலத்தன்மை கொண்டதாக இருக்கிறது என்றும் அவை X,Y குரோமோசம்களின் வேகம், அடர்த்தி, ஆயுள் ஆகிய குணங்களை வெவ்வேறு விதமாகப் பாதிக்கும் காரணிகளாக உள்ளது என்றும் கூறுகின்றனர். இதுவும் ஒரு வகையில் பிறக்கும் குழந்தையின் பாலினம் மாறுவதற்கான காரணி என்று தெரிகிறது.

அது மட்டுமில்லாமல் அந்த ஆராய்ச்சியின் தொடர்ச்சி, மனைவியிடத்தில் ஆணுறை உபயோகிக்காதீர்கள் என்ற அறிவுரையும் கூறுகிறது. பெண்ணின் உறுப்பில் படும் விந்து, கணவனுக்கும் மனைவிக்கும் சாதகமான சில மனோவியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை உறுதி செய்துள்ளனர். மார்பக புற்று நோய், மனவழுத்தம் (Depression) ஆகியவற்றைக் கூட குணப்படுத்துவதாகவும் கூறுகிறார்கள். மேலும் நிறையச் சொல்கிறார்கள் கீழே கொடுக்கப்பட்ட தளங்களில் நீங்களே படித்து அறிந்து கொள்ளுங்கள்.

http://www.news-medical.net/health/Semen-Health-Effects.aspx
http://en.wikipedia.org/wiki/Semen 

ஆனால் ஆணிடம் உள்ள விந்து, சரியான வெளிப்பாடு இல்லாத பட்சத்தில் ஆணுக்கே பலவிதமான மனோவியல் பிரச்னைகளை உருவாக்கி, சில சமயங்களில் எமனாக கூட மாறிவிடுகிறது. விந்து, அதிகமாக பைகளில் இருந்தால் சமூக அக்கறை குறைவாக உள்ளவர்களிடமும், பிரம்மச்சாரியத்தை முறையாகக் கையாளத் தெரியாதவர்களிடமும் மிருக புத்தியையும், முரட்டுத் தைரியத்தையும் கொடுக்கிறது. சிலசமயங்களில் வேலைக்காரிகள், கிழவிகள் அழகாகத் தெரிவதும், பஸ்ஸில் பெண்களிடம் சில்மிஷம் செய்து அடி உதை வாங்குவதும் இதானால்தான்..

”மனைவிமார்களே! உங்களது கணவனின் விந்துப் பைகளை காலியாக வைத்திருங்கள்” என்ற பழங்காலத்தைய அறிவுரை எவ்வளவு உண்மையானது..

இதில் குறிப்பிட்டுள்ள ஆணின் X,Y குரோமோசம்களின் வேகம், அடர்த்தி, ஆயுள், இவற்றை தீர்மானிக்கும் காரணிகள் எது அல்லது எவை என்பதுதான் அறிவியலின் மில்லியன் டாலர் கேள்வி.அது பற்றி இன்னும் தெளிவாகச் சொல்லவில்லை.. மேலும் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதில் ஆண்மைக்கு காரணமான Y குரோமோச ஜீன்களை கட்டுப் படுத்தும் SRY, SOX9, and DAX1 ஆகிய ஜீன்கள் பற்றிய ஆராய்ச்சியும் முற்றுப் பெறவில்லை.

அறிவியல் ஒரு நிலையில் வந்து நின்றுவிட்டதோ?. நாம் கொஞ்சம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வோம். அவர்கள் ஆராய்ச்சியை ஜீன் பற்றி மைக்ரோ லெவலில் செய்யும் போது நாம் கலவியில் ஈடுபடும் ஆண், பெண் பற்றிய புறத்தன்மைகளை ஆராய்வோம். முருகன் மயில் மேல் ஏறி உலகைச் சுற்றி வரும் முன் விநாயகர் ”அம்மை, அப்பனை” சுற்றி வந்து மாங்கனி வாங்கியது போல் நாம் குறுக்கு வழியில் செல்வோம்.மாத்தி யோசித்து, நாம் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்போம்.

இத்தொடரின் 11 வது பதிவில் ”ஆகவே இடர்ப்பாடுகளை சந்தித்து மீண்டு, உயிர் வாழ்ந்தால்தான் அதைப் பற்றிய பதிவும், பாதுகாப்பு பற்றிய தேவையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும். வண்ணத்துப் பூச்சி தான் கண்டு பயந்த பறவைகளின் கண்களை பற்றிய தகவல் சொல்ல உயிருடன் தப்பித்து பின் கலவியில் ஈடுபட்டு, கண்களை பற்றிய தகவலை கருவில் ஏற்றியிருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டு உதாரணங்களைக் காட்டி இருந்தேன்.

இவ்வாறு தன்னிச்சையான X,Y குரோமோசக்கலவையில், என்றாவாது ஒரு நாள் எல்லாமே பெண்களாகவோ ஆண்களாகவோ வரும் வாய்ப்பு, (Probability) முட்டைகளையும், குரோமோசம்களின் எண்ணிக்கையும் வைத்துப் பார்க்கும் போது அபூர்வம்தான். மிருக நிலையில் இருந்து மனித நிலைக்கு வளர்ந்து ஒரு ஆணுக்கு ஒரு பெண்னென்று வளர்ந்துவிட்ட இனத்தில் பெண்ணின் சுதந்திர உணர்வு தலைத்தோங்குவதால் அப்படி ஒரு வாய்ப்புக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறது மனித இனம், அதனால்தான் அதற்கு ஒருகூடுதல் கட்டுப்பாட்டை கையில் வைத்துக் கொண்டது.

ஆணும் பெண்னுமாகப் பிரிவதில் அவை எந்த வழிமுறைகளை பின்பற்றி ஒரு சமத்துவத்தை எட்டுகிறது என்பதுதான் என்னுடைய இந்த கட்டுரையின் முக்கியமான நோக்கம். நாம் மனித இனத்தை எடுத்துக் கொள்வோம். மனிதர்கள் குழுக்களாகப் பிரிந்து வாழும் முறை ஏற்பட்டதால், இந்த சூழ்நிலைக்கான தேவைகளும் திறன்களும் கட்டளைகளாகப் மரபணுவில் பதியப் படுகிறது. இதை விளக்குவதுதான். ”சந்துருவின் பால் விதி”


”சந்துருவின் பால் விதி”
”ஒரு குடும்பத்தில் ஆண்மைக்கும் பெண்மைக்கும் எப்பொழுதும் சமநிலையை நிலை நிறுத்தும் முறையில் தான் புதிய குழந்தையின் பாலினம் தீர்மானிக்கப் படுகிறது.”

உதாரணமாக ஒரு குழுவின் ஆண்,பெண் எண்ணிக்கைதான் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை தீர்மாணிக்கிறது. இது அவன் சார்ந்த குழுவின் தீர்மானம். அது தனி மனிதன் மீது அவனை அறியாமலே அவனது அறிவால் திணிக்கப்படுகிறது
மொத்த குழுவின் ஆண்,பெண் எண்ணிக்கை முதலில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தன்னை நெருங்கிச் (closer level) சுற்றியுள்ள குடும்பத்தின் ஆண்,பெண் எண்ணிக்கைக்கு அடுத்த இடமும், தன்னைச்சுற்றியுள்ள ஆண்,பெண் ஆளுமைக்கு மூண்றாமிடமும் கொடுத்து, அதற்கடுத்து தனது மனைவியின் ஆளுமை குணம் ஆகியவற்றிற்கு நான்காம் இடமும் கொடுத்து தேவையைக் கருதி பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் ஆண்களாலும், பெண்களாலும் தீர்மானிக்கப் படுகிறது.

இன்னும் விவரமாக அடுத்து பார்ப் போம்.
தொடரும்……………………………………….


முந்தைய பதிவு

3 comments:

மதியின் வலையில் said...

ஆவலோடு அடுத்து என்ன என்று படிக்க தயாராகும் போது

தொடரும்……………………………………….

என்று போட்டுட்டிங்களே :(

Chandru said...

மதியின் வலையில், வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. விரைவில் அடுத்த பாகத்துடன் சந்திப்போம்

நாட்டாமை said...

”சந்துருவின் பால் விதி”
”சுருக்கமாகச் சொன்னால் ஒரு குடும்பத்தில் ஆண்மைக்கும் பெண்மைக்கும் எப்பொழுதும் சமநிலையை நிலை நிறுத்தும் முறையில் தான் புதிய குழந்தை பிறக்கிறது. ”

அருமை அணுவுக்குள் ஏற்படும் ஆற்றல் சமநிலையினால் பொருட்கள் உருவாகும் விதத்தையும், குடும்பத்துக்குள் நிலவும் ஆண்,பெண் சமநிலையினால் மனித இனம் உருவாகும்விதத்தையும் சரியாக விளக்கியுள்ளீர்கள். அருமை.
இரட்டைக் குழந்தையின் பாலினம் பற்றி எதுவும் காரணம் உள்ளதா?

top