மாயாஜாலம்

ஜீபூம்பா” என்று மந்திரம் சொல்லி கோடிக்கணக்கில் பணம் வரவழைக்க முடியுமா? முடியும்,முடியும்.. நானும் இது நாள் வரையில் மந்திர தந்திரங்களில் நம்பிக்கை இல்லாதவன்தான். ஆனால் காலம் கலிகாலம் ஆகிவிட்டதால் நம்பித்தான் ஆகவேண்டும்.

இந்தக் காலத்து வியாபாரம் எனக்கு அந்த நம்பிக்கையை தோற்றுவித்தது. அந்த மந்திர வார்த்தை என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். நானும் சில வார்த்தைகளை கண்டுபிடித்து மந்திர உச்சாடனம் செய்து கொண்டுதான் இருக்கிறேன்।। ஏனென்றால் எனக்கு முன்னே பல பேர் மில்லியன்,பில்லியன், டிரில்லியன் டாலர் கணக்கில் சம்பாரித்தனர், சம்பாரித்து கொண்டிருக்கின்றனர்.

இந்த வியாபாரத்தில் பண்டங்கள் கைமாறுவதில்லை, தொழிற்சாலை இல்லை, தயாரிப்பு இல்லை,நேரடியான பேச்சுவார்த்தை இல்லை, மூலப் பொருள் இல்லை,காலமும் மூளை தான் முக்கியத்தேவை। மந்திர உச்சாடனத்திற்காக குறைபட்ச ஆங்கில அறிவும், மந்திர பிரயோகத்திற்காக ஒரு கம்ப்யூட்டருடன் கூடிய அகன்ற வரிசை வலைத்தொடர்பும் தேவை। ஒரு கிரெடிட் கார்டு கணக்கும் தேவை।ஆமாம் இந்த மந்திரவேலை கம்ப்யூட்டரின் உதவியுடன் தான் செய்யமுடியும்.

1 comments:

Unknown said...

please give any online job sites

top