தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றகுறையினால் ஒரு நாளைக்கு 8 லிருந்து 12 மணி நேரம் மின்வெட்டு அமுல் படுத்தப் பட்டது. இதனால் மக்கள் இதை சமாளிக்க வேறு வழியில்லாமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப் படுகிறார்கள்.


அந்த வகையில் இராமன் ஆண்டால் என்ன இரவணன் ஆண்டால் நமக்கென்ன என்று எதையும் கண்டு கொள்ளாமல் நடுத்தர மக்கள் தங்கள் வீடுகளுக்கு 10,000 லிருந்து 30,000 வரை செலவு செய்து யுபிஎஸ் (இன்வர்ட்டர்கள்) வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். வியாபாரிகளும், வசதி படைத்தவர்களும் லட்சக் கணக்கில் செலவு செய்து ஜென்செட் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். 


இதில் தமிழக மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் ஏற்படும் சங்கடங்களும், பொருளாதார பின்னடைவுகளும் அரசாங்கத்திற்கு தெரிவதில்லை, அதிகாரிகளுக்கும், யுபிஎஸ் பற்றிய மின்சாதன அறிவும், இதில் வீணாகும் தமிழகத்தின் பணத்தைப் பற்றிய அறிவும் , அக்கறையும் இல்லாமல் போய்விட்டது. புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி என்பது போல் அதிகாரிகள் உள்ளனர். மக்களோ வோட்டைப் போட்டு விட்டு, ஆப்பை பிடுங்கிய குரங்காக விழி பிதுங்கி இருக்கினறனர்.

 எனது நன்பர் "என் மாமன் மின்வாரியத்தில் பெரிய இன்சீனியரா இருக்கார் மின் வெட்டு பத்தி சொல்லியிருந்தா நானும் யுபிஎஸ் பிசினஸ் பண்ணி நாலு காசு பார்த்து இருக்கலாம்" என்று புலம்பினார். அது சரி அவராவது யுபிஎஸ் மாட்டியிருக்காரா என்று கேட்டேன். அவருக்கு ஒருவன் மாட்டி, விட்டு சென்று 5 வருடம் ஆகிறது என்றார்.

 மக்கள் அதிக அளவில் யுபிஎஸ் வாங்குவது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பொழுது ஒரு நிறைவை (Saturation) எட்டிவிட்டது. இதனால் பெரிதும் பயன் பெற்றவர்கள் வட மாநிலத்தவரே. இந்த யுபிஎஸ், ஜென்செட் மற்றும் பேட்டரி அணைத்தும் (99 சதவீதம்) வட மாநிலங்களி லிருந்துதான் தமிழகத்திற்கு வருகின்றது. இதனால்தான் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது.

தமிழகத்தில் மட்டும் 2.24 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். அவர்களில் குறைந்தது 2 சதவீதம் என்று வைத்தாலே சுமார் 5,00,000 பேர் யுபிஎஸ்கள் வாங்கியிருக்கலாம். அதன் மூலம் மக்கள் பணம் சுமார் 1000 கோடி ரூபாய் வீணாகி இருக்கிறது. அதிலும் இதில் பேட்டரிக்கு செலவிடும் பணம் என்பது 3 வருட காலத்தில் குப்பையாகி விடும். அதாவது சுமார் 750 கோடி 3 வருடங்களில் குப்பையாகிவிடும். பாக்கி 250 கோடியும் 3 வருடங்களில் குப்பையாகி விடும்.



இதுவே 5 சதவீதமாக இருந்தால் 2500 கோடிரூபாய் மக்கள் பணம் செலவாகி இருக்கும். இதில் ஜென்செட் நிறுவிய வகையில் சுமார் 2500 கோடி செலவாகியிருக்கும். அரசாங்கத்தால் மக்களுக்கு குத்து மதிப்பாக 5,000 கோடி ரூபாய் மின்சாரத்திற்காக அதிகப் படியாக செலவாகி இருக்கலாம்.


சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதற்கிணங்க யுபிஎஸ் ஒன்றும் இலவசமாக வேலை செய்யாது. அந்தக் காலத்தில் நெல் அறுவடை செய்பவர்களுக்கு நெல்தான் கூலியாகக் கொடுக்கப் படும், அது போல் யுபிஎஸ், பேட்டரியை சார்ஜ் செய்யும் பொழுதும் , பேட்டரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும் பொழுதும் 15+15=30 சதவீதத்தை கூலியாக எடுத்துச் சாப்பிட்டு விடும். அது மட்டுமில்லாமல் அதை 24 மணிநேரமும் மின்சாரம் வருகிறதா இல்லையா , வரவில்லை என்றால் மாற்றிக் கொடுக்கும் வாட்ச் மேன் வேலை பார்க்கச் சொல்வதால் அதற்கும் கூலி தரவேண்டும்.

லோகத்தில் (தமிழகத்தைத் தவிர)எதுவும் இலவசமா கிடைக்காது என்பதை கார்னாட் தொடங்கி ஐன்ஸ்டீன் வரை தெளிவா எடுத்துச் சொல்லி யிருக்கிறார்கள் . அது தெரியாம மக்களுக்கு யுபிஎஸ் வாங்கிக் கொடுக்கலாம் என்று ஒரு மந்திரி சொன்னாராம்.

சென்ற வருடம் 1634 கோடி யூனிட்டுகள் மக்களுக்கு வினியோகிக்கப் பட்டுள்ளதாம். இந்த வருடம் 2000கோடி யூனிட்டுகள் செலவாகலாம். இதில் ஒரு 10 சதவீதம் யுபிஎஸ் மூலம் செலவழிப்பதாலும், அந்த பத்து சதவீதத்தில் 30 சதவீதம் என்பது சுமார் 70 கோடி யூனிட்டுகள் வெட்டியாக யுபிஎஸ் சாப்பிட்டு விடும். ஏற்கனவே நிறுவிய வகையில் 5000 கோடி (செலவினம்1), மக்கள் பாக்கெட்டிலிருந்து செலவழிக்கப் பட்டுள்ள நிலையில், யுபிஎஸ்கள் தின்று தீர்த்த வகையில் கணக்கு தொடர்கிறது. அதன் மதிப்போ வருடத்திற்கு 350 கோடி (செலவினம்2) ரூபாயாகும். இதுவும் மக்கள் தலையில்தான் விழுகிறது. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்ற கதையா எதையும் தாங்கும் இதயம் கொண்ட தமிழன் இருக்கவே இருக்கான்.

 இந்த 5,00,000 யுபிஎஸ்கள் நாள் முழுவதும் 24 மணிநேரமும் இயக்கத்தில் (வாட்ச் மேன் வேலையில்) இருந்தால் தான் அவை பயன்படும். அவை ஒவ்வொன்றும் ஒருமணி நேரத்திற்கு சுமார் 30 வாட்ஸ் மின் சக்தியை செலவழிக்கும். இதனால் ஒரு வருடத்திற்கு

(500,000 யுபிஎஸ்கள்X 24மணி X30வாட்ஸ், X 360நாட்கள்)/1000 =11,52,00,000 யூனிட்டுகள்.

11,52,00,000 யூனிட்டுகள் X 5.30ரூபாய்=61,05,60,000

சுமார் 60 கோடி(செலவினம் 3)ரூபாய் வெட்டித் தனமாக செலவு செய்யப் படுகிறது.

 இதனால் மக்களின் பணம் சுமார் 60 கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு வீனாக செலவழிக்கப் படுகிறது. ஆக மொத்தத்தில் 3 வருடத்தில் 6200 கோடி (செலவினம் 1+(செலவினம் 2 +செலவினம் 3)*3 ) ரூபாய் எந்த விதமான உபயோகம் இல்லாமல் அதிகாரிகளின் மெத்தனத்தால் மக்களால் தண்டமாக செலவழிக்கப் படுகிறது. அதாவது ஒவ்வொரு தமிழனிடமும் சுமார் 1000 ரூபாய் பிடுங்கப் பட்டுள்ளது.

இதில் நான் ஏன் அதிகாரிகளை குற்றம் சொல்கிறேன் என்றால் யுபிஎஸ் என்பது மின்சாரத்தை தயாரித்துக் கொடுக்கும் சாதனம் என நினைத்துக் கொண்டார்களோ என்னவோ. யுபிஎஸ்ஸின் பயன்பாட்டால் ஏற்கனவே செலவழித்துக் கொண்டிருக்கும் மின்சாரத்திற்கு அதிகமாக 30 சதவீதம் மின்சாரத்தை தண்டம் கட்டி, மாதம் 500 ரூபாய் யுபிஎஸ், மற்றும் பேட்டரி தேய்மானச் செலவுடன் யுபிஎஸ் மூலம் மின்சாரம் எடுக்கிறார்கள் என்பதை மக்கள் வேண்டு மென்றால் அறியாமல் இருக்கலாம் ஆனால் மின்துறை பொறியாளர்களுக்குத் தெரியவில்லை என்றால் யாரைச் சொல்வது. இதையெல்லாம் அதிகாரிகள் முன்கூட்டியே, அதற்கான சரியான முதலீடு மற்றும் திட்டம் என அறிவுறுத்தி செயல் பட்டிருக்க வேண்டும்.

 மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல். ஆனால் படிக்காமல் பதவிக்கு வருகிற மந்திரிக்கு வரப் போகிற கமிஷன் தானே தெரியும் வேறென்ன தெரியப் போகிறது. படிச்சவங்களே பாட்டைக் கெடுக்கும் போது படிக்காதவர்கள் கெடுப்பதை பற்றி சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. படித்தவன் , ஒழுக்கம் உள்ளவன், நாட்டுப் பற்று உள்ளவன் அரசியல் வாதியாகவும் அதிகாரியாகவும் வர வேண்டும், அப்பொழுதுதான் நாடு வளமிக்கதாகவும், மக்கள் சந்தோஷமாகவும் இருக்க முடியும்.

நன்றி.

நிபா:  எல்லாத் தொடரையும் அரையும் குறையுமா முடித்த மாதிரி இதையும் முடித்துவிட்டீர்களா?

நான்: இதில் என்ன குறை உள்ளது?

நிபா: யுபிஎஸ் யின் அளவு என்ன? யாருக்கு எவ்வளவு தேவை ,அதன் பட்ஜெட் என்ன எப்படி நிறுவுவது.எங்கு வாங்கலாம்? போன்ற விஷயங்கள் இல்லையே

நான்: விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்ற கதையா இருக்கு, அதை ஏன் வாங்கக் கூடாது வாங்கினால் தமிழனுக்கு எவ்வளவு நஷ்டம் என்று விலாவாரியா எழுதிவிட்டு அதை வாங்குவது எப்படி என்று நானே எழுதலாமா? படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவில் என்ற கதையாகிவிடாதா?

நிபா: ஓஹோ நீ எதுக்கு உன் வீட்டிற்கு வாங்கி மாட்டியிருக்கே? ஊருக்குத்தான் உபதேசமா?

நான்: அதனுடைய நிறை குறை பற்றி எழுத வேண்டுமென்றால் வாங்கித்தானே ஆகவேண்டும்.

நிபா: உன்னைப் போல் நிறை குறை ஆராய்ச்சி உள்ளவர்களுக்காவது பயன்படும் விதமாக எழுதலாமில்லையா?

நான் : நிறையப் பேர், நிறைய எழுதிட்டாங்க அதுவுமில்லாமல் மின்வெட்டும் தீர்ந்து விட்ட இந்த நேரத்தில் வாங்கச் சொல்லி தண்டம் இழுத்து வைக்கக் கூடாது.மந்திரி வேறு சொல்லிவிட்டார் இன்னும் இரண்டு மாதத்தில் மின் வெட்டு தீர்ந்துவிடும் என்று.

நிபா: யோவ் ரொம்ப பிகு பண்ணாதே எல்லோரும் எழுதுவதற்கு மேட்டர் இல்லாமல் இருக்கும் பொழுது மாதத்திற்கு ஒரு பதிவு எழுதற உனக்கு ஒரு மேட்டர் சொன்னா எழுது. நீ எப்படி யோசித்து வாங்கினாய் என்ற கதையை  எழுது.

நான்: மேட்டர் இருக்கு, நேரம் இல்லை. கடந்த ஒரு மாதமாக சென்னை மதுரை, பழனி, திண்டுக்கல் என்று சுற்றியதோடு மட்டுமில்லாமல் ஒருவாரத்தில்  காரோட்டப் பழகினது என்று பல விஷயங்களால் நேரமே கிடைக்கவில்லை. இதில் விண்டோஸ் 7 , ரிப்பேரான ஹார்டு டிஸ்க் என்று பல பிரச்னைகள் இதெல்லாம் எழுதுனா என்னவாகும்.சரி பார்ப்போம்., 


 இரா.சந்திர சேகர்,
 பழனி.

மேலும் படிக்க...!
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.4
அல்லது
இண்டக்சன் ஸ்டவ்

செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் சென்றால், அவனுக்கு தேவைப் படும் ஆக்ஸிசனை, மின்சக்தியினால் தயாரிக்க உருவாக்கப் பட்ட தொழில் நுட்பத்தை நாசா ஓரங்கட்டி விட்டது. அதை நமது நண்பர் ஸ்ரீதர் மாற்றி யோசித்து, ஆக்ஸிஸனை கொடுத்து அதிலிருந்து மின்சக்தியை தயாரிக்க பயன்படுத்தி விட்டார்.  உலகம் போற்றும் உன்னத கண்டு பிடிப்பாகி விட்டது. சந்தேகமில்லாமல் இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டு பிடிப்பு என்றே கூறலாம். இந்த விடியோவில் ஸ்ரீதர் கையில் வைத்திருக்கும் புளூம்பாக்ஸ் ஒரு அமெரிக்க வீடு அல்லது இரண்டு ஐரோப்பிய வீடு அல்லது , நான்கு இந்திய  வீட்டிற்கு மின்சக்தி அளிக்கக் கூடியதாம். ஆயிரக்கணக்கான சோலார் பேனல் வைத்து தயாரிக்க கூடிய மின்சக்தியை ஐந்தே ஐந்து புளூம் பாக்ஸ் மூலம் தயாரிப்பதையும் பாருங்கள். நல்ல விஷயம் நாலு பேரைச் சென்றடைவதற்கு நாற்பது முறை கூறினாலும் தப்பில்லை என்பதால், சென்ற பதிவிலும் இணத்திருந்தேன். அதில் பார்க்காதவர்களுக்காக இங்கும் பதிவிட்டுள்ளேன்.





Breaking News

புதிய மின்தடம் அமைப்பதில், தனியார் மின் நிலையத்திற்கு ஆதரவான ஒழுங்குமுறை ஆணைய உத்தரவை, மின்சார தீர்ப்பாயம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. விவரங்களுக்கு கீழே சுட்டி கொடுத்துள்ளேன் தட்டிப் பார்க்கவும். இது போல் பெட்ரோல் விலை ஏற்றத்திற்கும் ஒரு குட்டு வைத்தால் நன்றாக இருக்கும். அங்கும் இதே பிரச்னைதான்.

 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=473365

Breaking voice

"என்னய்யா இது கதையா இருக்கு, தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம் என்று ஆரம்பித்து மின்வெட்டை முடித்து விட்டு யுபிஎஸ்க்கு வருவீங்கன்னு பார்த்தா மிக்ஸி, ட்யூப் லைட், அடுப்பு, கிரைண்டர் ன்னு போய்க்கிட்டே இருக்கீங்க. விட்டா ஜீரோ வாட்ஸ் பல்புன்னு ஆரம்பிச்சுருவீங்க போல இருக்கு. எப்ப யுபிஎஸ்ஸூக்கு வரப் போறீங்க அதுக்கு முன் மின்வெட்டும் தீர்ந்து யுபிஎஸ்க்கு வேலை இல்லாம போயிரும்."

 ஒன்னுமில்லைங்க இது ஃபோர் கிரவுண்ட் வாய்ஸ்தாங்க. நேருக்கு நேர் பார்த்து நம்ம நிபா .கேட்டுட்டார்.

 நல்ல வேளை ஞாபகப் படுத்தினார், ஜீரோவாட்ஸ் பல்பை பற்றி, அதையும் விடப் போறதில்லை. ஆனா அதுக்குன்னு ஒரு பதிவு தனியா போடறது ரொம்ப டூமச் ஆயிரும். இந்த ஜீரோ வாட் பல்புன்னு வெட்கமில்லாம சொல்லியே விக்கிறார்கள் நாமும் வெட்கமில்லாமல் அந்தப் பெயரைச் சொல்லித்தான் வாங்க வேண்டியதிருக்கு. உண்மையிலே ஜீரோ வாட் பல்பு 15 லிருந்து 20 வாட்ஸ் எடுத்துக் கொள்ளக் கூடியது. அதைத் தவறுதலாக ஜீரோ வாட் என்று உபயோகத்தில் பயன் படுத்துகிறோம்.

கடையில் போய் "கம்ப்யூட்டர் சாம்பிராணி "என்று சொல்லிக் கேட்டு, வாங்க கேவலமாத்தான் இருக்கு என்ன பன்றது, அதை பெயராக்கி விட்டார்கள். ஆனாலும் நான் இப்பொழுதெல்லாம் "சாம்பிராணி வில்லை "என்றுதான் சொல்லுகிறேன்.

நிபா : பொய்,பொய் போனவாரம் வெள்ளிக்கிழமை கூட நீ கடையில் கம்ப்யூட்டர் சாம்பிராணி என்று சொல்லித்தானே வாங்கினாய்?

நான்: யோவ் நான் முதலில் வில்லை என்றுதான் சொன்னேன் கடைக்காரருக்கு  விளங்கவில்லை, அதனால்தான் அப்படி சொல்ல வேண்டியதாயிற்று

மின் வெட்டை பற்றி சொல்லிவிட்டால் மட்டும் போதாது. அதிலுள்ள மின் சிக்கனம், மின் சேமிப்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசும் போது கண்டிப்பாக மின் சாதனங்களைப் பற்றி எழுதித்தான் ஆக வேண்டும். மேட்டரை விட்டு விலகிப் போவது போல் தோன்றினால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.

வினோத் குமாரின் கேள்வி : இண்டக்சன் ஸ்டவூ நல்ல கண்டுபிடிப்பாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில்... அது காந்தத்தை பயன்படுத்துது.. காந்தத்தால் செறிவூட்டப்பட்ட உணவு உடல் நலத்துக்கு கேடுன்னு கேள்விப்பட்டேன்... ?

நான்: அதெல்லாம் கிடையாது. நமது மூளை கூட எலக்ட்ரான் நியூரான் சமாச்சாரம்தான் அதற்காக நம்மை முழுமையாக காந்தத்தால் இயக்க முடியாதல்லாவா?. நாம் சமைக்கும் உணவு ஃபெரோ மெட்டாலிக் (Ferro metallic) கலவை அல்லது சம்பந்தம் இருந்தால் தான் காந்தத்தால் செறிவூட்டமுடியும். அதுமட்டுமில்லாமல் ஃபெரோ மெட்டாலிக் ஆக இருந்தால் சட்டியிலிருக்கும் போதே கருகிவிடும். அது ஒரு மாதிரியான மின்னோட்டம்தான் அதற்கும் காந்த சக்திக்கும் தொடர்பு இல்லை. அதையும் மீறி ஏதாவது இருந்தால் அது கணக்கில் கொள்ளத் தக்கதல்ல (Negligible) என்பது என் அபிப்பிராயம்.


இண்டக்சன் ஸ்டவ்


 என்னைக் கவர்ந்த மின்சாதனங்களில் இண்டக்சன் ஸ்டவ் உம் ஒன்று. மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு.ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய சாதனம். இதனுடைய சிறப்பையும், பெருமையையும் சொல்லி முடியாது. இதை உபயோகித்த பெண்களுக்குத் தான் தெரியும்.

மற்ற நடைமுறையில் உள்ள மின்கம்பிச் சுருள் அடுப்புகளைவிட மின்காந்த அடுப்பு எனப் படும் இண்டக்சன் ஸ்டவ் (85% ) அதிக சக்தி மாற்றம் (The efficiency of energy transfer ) கொண்டது. அதாவது நாம் கொடுக்கும் மின்சக்தியில் 85 சதவீதத்தை நமக்கு முழுமையாக பயன் படுத்தக் கூடிய வெப்ப சக்தியாக மாற்றிக் கொடுக்கக் கூடியது.

ஆனால் மின்கம்பிச் சுருள் அடுப்புகள் 60 லிருந்து அதிகபட்சமாக 70 சதவீதம் சக்தி மாற்றும் திறமை கொண்டவை. எரிவாயு அடுப்புகளோ அதை விட மிகவும் குறைவு, வெறும் 40% சக்தி மாற்றம் தான் கொடுக்கும். இவை இரண்டுமே முதலில் பாத்திரத்திற்கும் அடுப்புக்கும் இடையில் உள்ள காற்றை சூடேற்றி, அந்தக் காற்றின்  வெப்பத்தின் மூலம்  முழுப் பாத்திரத்தையும் சூடேற்ற வேண்டும். பின்னர் பாத்திரத்தின் சூடு உணவை வேகவைக்க வேண்டும். ஆனால் இண்டக்சன் ஸ்டவில் நேரடியாக பாத்திரத்தின் அடிப்பாகம் மட்டும் சூடேற்றப் படுகிறது.  கொடுக்கும் சக்தி அப்படியே உபயோகப் படுத்தப் படுகிறது.

இண்டக்சன் அடுப்பு ரூபாய் 1300லிருந்து 5000 ரூபாய்வரை கிடைக்கிறது. இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது. ஒரே ஒரு காயில் மற்றும் சில எளிய பொருட்கள் உள்ளதால் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் பாகங்களைப் பற்றி அறிந்து கொள்ள கீழே கொடுக்கப் பட்டுள்ள சுட்டியை தட்டிப் பார்க்கலாம் . ஏனென்றால் அடுப்பே 1500 ரூபாய்தான் அது தெரியாமல் சிலர் 2000 ரூபாய் ரிப்பேருக்கு செலவு செய்வார்கள். அட்லீஸ்ட் அதன் பாகங்களை தெரிந்து கொண்டால் கூட போதும்.


மேலும் விவரங்களுக்கு
 http://imajeenyus.com/electronics/20060908_induction_cooker/index.shtml

 http://en.wikipedia.org/wiki/Induction_stove

மேலும் இந்த தொழில்நுட்பத்தால் என்னென்ன விதமான ஹீட்டிங் முறைகள் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.ஒரு கம்பிச் சுருளில் மின்சாரம் பாயும் பொழுது அதன் அருகாமையில் ஒரு வித மின்காந்தத் தூண்டல் (Edddy current) ஏற்படுகிறது. அந்தத் தூண்டலுக்கு அருகாமையில் சிக்கும் இரும்பு சம்பந்தப் பட்ட உலோகங்கள், அதற்கு ஒரு வித பயங்கரமான தடையை ஏற்படுத்துவதால் வெப்பமடைகிறது.

 http://www.ameritherm.com/

காலம் கலிகாலம் ஆகிவிட்டது. எல்லாம் தலைகீழாக நடக்கிறது. இந்த அடுப்பில் ஒரு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. அது என்னவென்றால் " பாத்திரம் அதிக வெப்பமடைந்தால் அதிலிருந்து வெப்பம் அடுப்புக்கு வந்து விடும், ஆகவே அடுப்பு லேசாக சுடலாம்." இப்பொழுது நம்புகிறீர்களா கலி முற்றிற்று என்று. எப்பொழுதும் அடுப்பிலிருந்துதான் வெப்பம் பாத்திரத்துக்குப் போகும் ஆனால் இண்டக்சன் அடுப்பில் மட்டும் பாத்திரத்திலிருந்து  வெப்பம் அடுப்புக்கு செல்லுமாம்.

எச்சரிக்கை
 இண்டெக்சன் அடுப்பு எந்த இடத்திலும் சுடாது.ஆனால் வைக்கும் பொருட்களை சூடேற்றும் திறமை கொண்டது. நெருப்பின் அபாயம் அற்றது. தீச் சுவாலைகள் இல்லாததால் எதிலும் தீப்பற்றாது. மிக விரைவில் சூடேறக் கூடியது. சீரான வெப்பக் கடத்தல் கொண்டது. ஆபத்தில்லாதது. மின் அதிர்ச்சி கொடுக்காது. எளிமையான, அதிநுட்பமான கன்ட்ரோல் கொண்டது.எளிதில் எடுத்துச் செல்லும் அளவிற்கு சிலிம்மானது. எடை குறைவானது. பெண்களூக்கேற்ற அடுப்பு இதுதான். ஸ்டவ் வெடிப்புக்கு இனி வழி இல்லை.

மிகவும் அறிவுள்ளது, சொன்னபடி செய்யக் கூடியது. ஆமாம் பாத்திரத்தை எடுத்து விட்டால் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வைத்து விட்டால் மீண்டும் ஆன் செய்து கொள்ளூம். பாத்திரம் கருக்காது. பாத்திரத்திலிருந்து சிதறி விழும் பொருட்கள் சூடேறாமல் இருப்பதால் அடுப்பை சுத்தம் செய்வது எளிது.குறிப்பிட்ட நேரம் வரை சூடேற்றச் சொல்லி விட்டு மற்ற வேலைகளில் கவனம் செலுத்தலாம்.. நேரம் செட் செய்து விட்டால் தானாகவே அந்த செட் செய்த நேரம் வந்தவுடன் ஆப் ஆகிவிடும்.

மைக்ரோ வேவ் ஒவன் கூட 65 சதவீத சக்தி மாற்றுத் திறன் கொண்டதுதான். அதிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சூடேற்ற முடியாது. ஆகவே திறனை மதிப்பிடும் போதும் இண்டக்சன் ஸ்டவ்தான் சிறந்ததாகவும் சிக்கன மானதாகவும் இருக்கிறது. பொதுவாக 1800 வாட்ஸ் மற்றும் 2000 வாட்ஸ் என இரண்டு விதமான வாட்ஸ்களில் கிடைக்கிறது. இங்கே காட்டப் பட்டுள்ள பட்டர் பிளை (ஸ்டாண்டர்டு) 1800 வாட்ஸ் அடுப்பின் இன்றைய (01-05-20012) விலை ரூபாய் 1700 தான். அதாவது சுமார் ஒரு வாட்ஸ் ஒரு ரூபாய்தான்.

பட்டர் பிளை (ஸ்டாண்டர்டு) 1800 வாட்ஸ்
                                           
இதிலுள்ள ஒரே ஒரு பின்னடைவு இதில் இரும்பு சம்பந்தப் பட்ட (எவர்சில்வர்) பாத்திரங்கள்தான் உபயோகிக்க முடியும். அலுமினியம், ஹிந்தாலியம், தாமிரப் பாத்திரங்கள் சூடேறாது. பாத்திரங்களுக்கான தேவை ஏற்படும் போது அவை வியாபாரத்திற்கு வந்துவிடும். உதாரணமாக ஹிந்தாலியம் குக்கரின் அடிப்பாகம் மட்டும், எவர்சில்வர் தகட்டுடன் ஒட்டப் (Sand-witched) பட்டு இப்பொழுது கிடைக்கிறது.

எவர்சில்வர் தகடு ஒட்டப்பட்ட ஹிந்தாலியம் குக்கர்
எவர் சில்வர் பாத்திரம் பயன் படுத்தலாம், அடிப்பாகம் கெட்டியாக இருந்தால் நல்லது. அடுப்பின் செராமிக் பிளேட்டோடு சமமாக  பொருந்தும் வட்டமான பாத்திரம் தான் சரியான தேர்வாக இருக்கும்  (உங்களுக்கு தேவையில்லாத புள்ளிவிவரம்.செராமிக் பிளேட்டில் இருந்து பாத்திரம் 5 எம்எம் வரை கூட விலகி இருக்கலாம்..)

எச்சரிக்கை:
அடுப்பிற்கும் பாத்திரத்திற்கும் இடையில் எந்த விதமான சிறிதோ, பெரிதோ இரும்பு சம்பந்தப் பட்ட எந்தப் பொருளும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதுதான் முதலில் சூடேறும் பின் அதிலிருந்து தான் பாத்திரத்துக்கு சூடு பரவும் அப்போது சக்தி மாற்றுத் திறன் 85 லிருந்து குறைந்து 5 அல்லது 10 சதவீதமாகி விடும். இடையிலுள்ள இரும்பு பழுத்து விடும். ஆகவே அந்த மாதிரி ஆராய்ச்சியில் இறங்காதீர்கள்.

என்னைக் கேட்டால்:
எரிவாயுவை சிலிண்டரில் அடைத்து அதை விநியோகம் செய்வதை விட அந்த எரிவாயுவை குழாய் மூலம் விநியோகித்து மாவட்ட அளவிலான தேவைக்கு, மின்சாரம் தயார் செய்யும் நிலையங்களை நிறுவலாம். இந்த மின்சாரத்தில் இண்டெக்சன் ஸ்டவ்வை உபயோகிக்கலாம். இதனால் வெடிப்பினால் ( Explosion) ஏற்படும் விபத்து மற்றும் பொருட் சேதம் தவிர்க்கப் படலாம், மின் அதிர்ச்சி (Electric shock) கொடுக்கும் மின் அடுப்புகளை தவிர்க்கலாம். தீச்சுவாலையற்றதாக (Flame less) இருப்பதால் விபத்து இல்லை விலை மதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப் படுகிறது. , மின் பகிர்மான இழப்பாகிய (Transmission Loss ) 8,000 கோடி ரூபாய் வருடத்திற்கு மிச்சமாகும், மற்றும் கூடுதலான சக்தி மாற்றும் திறமை (Energy transfer efficiency. 85% ) கிடைக்கிறது. ஆகவே இதைப் பற்றிய பரிசார்த்தமான நடைமுறை அறிக்கை (Feasibility report) தயார் செய்து ஆராயலாம்.

....................தொடரும்.

நிபா: ஆமா பட்டர் பிளைக்கு ஏதும் காசு வாங்கினாயா?  அடுத்து யுபிஎஸ் பற்றித் தானே?
நான்: உனக்குத் தெரியாமலா? படுத்தாதய்யா அடுத்து யுபிஎஸ் தான்.ஆனால்..

தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.1
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.2
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.3

இரா. சந்திரசேகர்.
பழனி.


மேலும் படிக்க...!
மத்திய அரசின் பொய்யும் புரட்டும்.

எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. 2006-07 முதல் 2009-10 வரையிலான 4 நிதியாண்டுகளில் இந்த 3 நிறுவனங்களும் ரூ. 36,653 கோடி லாபம் அடைந்திருக்கின்றன. மத்திய அரசுக்கு ரூ.4,73,000 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. விற்பனை வரி போன்றவை மூலமாக மாநில அரசுகளும் ஆதாயம் அடைகின்றன.

இந்த 4 நிதி ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்காக வழங்கப்பட்ட மொத்த மானியமே ரூ.26,000 கோடிதான். மொத்த வருவாயில் இது 6 சதவீதத்துக்கும் குறைவு. நஷ்டம் ஏற்படுவதாக, அரசும், எண்ணெய் நிறுவனங்களும் ஒப்பாரி வைத்தாலும், அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது என்கிற பூசணிக்காயை  எந்த சோற்றுக்குள்ளும் மறைக்க  முடியாது.

http://rsyf.wordpress.com/2012/05/25/petrol-income-2/

தினமணியில்கடந்த 2011 அக்டோபர் மாதம்  பதிவிடப் பட்டது. அரசின் தந்திரக் கணக்கு  First Published : 20 Oct 2011 02:16:41 AM IST

அரசின் தந்திரக் கணக்கு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2010-11ம் ஆண்டுக்கான அறிக்கையில், அந்த நிறுவனத்துக்கு வரிப்பிடித்தங்கள் போக ரூ.7,445 கோடி லாபம் அடைந்திருப்பதைக் காண முடியும்.

அம்பானி குடும்பம் கஷ்டப்பட கூடாதுன்னு நினைக்கும்  மத்திய அரசு பெட்ரோல் விலையை ஏற்றி விட்டது. நம்ம மத்திய அரசுக்கு மக்கள் கஷ்டப் படுவதை பற்றி கவலை இல்லை. அம்பானி மல்லையா போன்றவர்கள் கஷ்டப் படக் கூடாதுன்னு அவர்களுக்காகவே ஆட்சி நடத்தும் நம்ம  மதிப்புக்குரிய பொருளாதார மேதை மன்மோகன்சிங்கிடமும் அன்னை சோனியாவிடமும் விலையேற்றத்தை தவிர வேறு என்ன எதிர் பார்க்க  முடியும்.

http://kalamarudur.blogspot.in/2012/05/blog-post_25.html

இந்த நிறுவனம் அரசுக்கு லாப ஈவுத் தொகையாக மட்டும் ரூ.39,658 கோடியைக் கொடுத்திருக்கிறது. பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களும் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டியிருக்கின்றன.



தற்பொழுது பெட்ரோல் விலை ஏற்றம் என்பது உலக மகா மொல்லமாரித்தனமாகும். உலகில் பெட்ரோல் விலை தற்பொழுது கடந்த நான்கு மாதங்களில் இருந்ததை விட  மிகவும் குறைவாக உள்ளது. மேலும் குறைந்து கொண்டே இருக்கிறது. கீழே கொடுத்துள்ள சுட்டியில் கச்சா எண்ணெயின் விலையை பலவிதமாக அறிந்து கொள்ளலாம். கடந்த 5 வருடத்திற்கு அல்லது கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது கடந்த மூன்று மாதங்களில் ஏற்பட்ட மாற்றம் என அறிந்து கொள்ளலாம்.

கடந்த ஐந்து வருடங்களுக்கான  விலை விவரம்
கடந்த மூன்று மாதங்களுக்கான விலை விவரம்

http://oil-price.net/dashboard.php?lang=en

இந்த 2008 ஜனவரியில்  உலகச் சந்தையில்  பேரல் 140 டாலர் விற்றபொழுது கூட இவ்வளவு விலை ஏற வில்லை. ஆனால் தற்பொழுது 90 டாலர்தான் விற்கிறது. இந்த நேரத்தில் ஏற்றுவது ஏன் என்று விளக்கத் தெரியாத பொருளாதார மேதை மன்மோகன் சிங் மத்திய அரசு விலையேற்றத்திற்கு பொறுப்பல்ல என்று கூறுவது முழித்திருக்கும் போது முழியை தோண்டும் கதைதான்.

அதிலும் மத்திய மந்திரியும், டிவிச் செய்திகளில் உலகச் சந்தையில் விலையேற்றம் என்று கூசாமல் பொய் பேசுகிறார். இதைக் கேட்பதற்கு ஆள் இல்லை. இந்த மீடியாக்கள் ஜால்ரா அடிச்சுக்கிட்டு உலகச் சந்தையின் விலையை  அறிவிக்காமல் இருப்பது ஏன்?. அவர்களுக்கு தெரியாதா?

இதே நிலைமை நீடித்தால், இந்தியா பொருளாதாரம் சரிவில் சிக்கி, வரலாற்றில் பேசப் படும் அளவிற்கு சீர் கெடப் போகிறது .இன்று கிரீஸூக்கு ஏற்பட்ட நிலை தான் நாளைக்கு நமக்கும்.

நமது முதல்வர் சொல்வது போல்  மக்கள் கலகம் செய்து ஆட்சியை இறக்கவேண்டிய சூழ்நிலை உருவாகப் போகிறது. அதாவது நாட்டில் கலகம் ஏற்படப் போகிறது என்பதை நாசூக்காக சொல்கிறார்.

பெட்ரோல் விலையேற்றம் என்பது ஏதோ ஒரு ரூபாய் அல்லது 2ரூபாய் ஏறுவது இயல்பு ஆனால் தற்பொழுது 7.50 காசு என்பது  இமாலய திருட்டுத்தனம் . மக்கள் என்று உணரப் போகிறார்களோ அன்று அரசியல் வாதிகளுக்கு ஆப்பு அடிக்கப் போகிறார்கள்.ரூபாய் மதிப்பு குறைவினால் பயன் அடைவதும் ஸ்விஸ் வங்கியில் டாலரில் டெபாசிட் செய்திருக்கும் அரசியல் வாதிகள்தான்.

மத்திய அரசின் திருட்டுத்தனத்தை மக்கள்தான் ஒருவருக்கொருவர் சொல்லி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.  மக்களே நாம் புரட்சி என்று தீவட்டியை தூக்கி அலையக் கூடாது ஏனென்றால் முடியாது. குறைந்த பட்சம்  இந்தத் திருட்டுத் தனத்தை நாம் தெரிந்து கொண்டோம் என்ற உண்மையாவது, உணர வைப்போம். நீங்கள் எதை எழுதினாலும், பேசினாலும் இடையில் ஒரு வார்த்தை இந்த ஆதங்கத்தைப் பற்றி முணுமுணுக்காவது செய்யுங்கள். செய்தீ பரவட்டும்.

இரா.சந்திர சேகர்
பழனி.

மேலும் படிக்க...!
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.3


காற்றாலைகளினால் கிடைக்கும் மின்சாரம் 6000 மெகா.வாட் . அதுவும் ஆறுமாதத்திற்குத் தான் முழுவீச்சில் செயல்படும் .அவை அணைத்தும் வணிகமுறையில் தனியாரால் நிறுவப்பட்டது. அதன் விலையும் அதிகமாக வரலாம். தமிழக அரசு அவர்களிடமும் கடன் வாங்கி முறையாகப் பணம் செலுத்தாததால் அவர்களும் நிறுத்தி வைத்துள்ளனர். இன்றைய நிலையில் அவர்களிடம் எற்பட்ட 10,000 கோடி கடன் தொல்லையினால், தமிழக அரசின் வாங்கும் அளவு, 150மெகா வாட் ஆக குறைந்து விட்டது. 

காற்றாலை மின்சாரம்

ஆகவே இன்றைய நிலைமையில் தினமும் 50 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கிக் கொண்டிருக்கிறது. இதுவே வருடத்திற்கு 15,000 கோடி கடனாகி விடும். ஆண்டவன் கூட காப்பாத்த முடியாது.

இந்த லட்சணத்தில் தற்போதைய முதல்வர் மின்விசிறி (60 watts), கிரைண்டர் ( 450 watts), மிக்ஸி (750watts) என்று, அதற்கான மின் ஆதாரம் இல்லாமல் முட்டாள் தனமாக வழங்குகிறார். நன்றாகப் படித்த சமூக அக்கறையுள்ளவன் (என்னைப் போல் ஒருவன்) முதல்வரானால் இந்தத் தவறுகள் நடக்காது. (ஆமாம் கல்யாணம் ஆகி 30 வருஷமாச்சு ஒரு வீட்டக் கட்ட முடியலை ஆட்சியைப் பிடிக்கப் போறாராம், இது பேக்கிரவுண்ட் நாய்ஸ் கண்டுக்காதீங்க)


 கூடங்குளம்.

கூடங்குளம்:
தற்போதுள்ள நிலையில் கூடங்குளத்தின் மொத்தமுள்ள இரண்டு உலைகளிருந்து பெறப்போகும் 2000 மெகவாட் மின்சாரத்தில்,
 தமிழ்நாடு .................925 மெ.வாட்
கர்நாடகம்..............  ..442
கேரளம் ...............       266
பாண்டிச்சேரி ........  ...67
கையிருப்பு...........   ...300

 எனப் பிரித்தளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது .உம்மன்சாண்டி(கேரளா) இதிலயேயும் கட்டையைக் கொடுத்து 500 மெ.வாட் கேட்கிறாராம்.

தமிழகத்தின் எதிர்காலத் திட்டங்கள்


 எண்                  மின் திட்டம்             மதிப்பீடு         மெகா.வாட் 
                                                            கோடியில்
1         வடசென்னை (நிலை 3)          4800                           800
2         உடன்குடி 2 யூனிட்கள்            9083                         1600
3         செய்யூர் (மத்திய அரசு)         18000                          1600 (TN share)
4         உப்பூர்                                             9600                         1600
5         உடன் குடி விரிவாக்கம்          4800                          800
6         எண்ணூர்(மாற்று)                     3600                           650 
7         தூத்துக்குடி (நிலை-4 )              4800                           800
             
                               மொத்தம்                  50683                         7850

கிட்டத்தட்ட 50,000 கோடி செலவில் 8000 மெகாவாட் தயாரிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதிலிருந்து, தெரிவது என்னவென்றால் ஒரு மெகாவாட் தயாரிக்க சுமார் ஆறு கோடி ரூபாய் முதலீடு தேவைப் படும் எனத் தெரிகிறது . தயாரிப்புச் செலவு ,ஒரு யூனிட்டுக்கு இரண்டு ருபாயிலிருந்து மூன்று ரூபாய்தான் .


போர்ட்டபிள் ஜென்செட்
ஆனால் டொமஸ்டிக் போர்ட்டபிள் ஜென்செட் 1 கிலோவாட் திறனுள்ளது, சுமார் இருபதாயிரத்துக்குதான் விற்கப் படுகிறது,ஆனால் ஒரு யூனிட் மின்சாரத்தின் தயாரிப்பு செலவு 30 ருபாயிலிருந்து 60 ரூபாய் . அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கல்லு மூன்று வேண்டும். டிஜி எனப்படும் டீசல் ஜெனரேட்டர்களில் தயாரிப்புச் செலவு வேண்டுமானால் குறைவாக இருக்கும்.

ஆக தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் ஏற்கனவே 72,000 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் அந்த முதலீடு 1,20,000 கோடியாகிவிடும். எல்லாம் திட்டமிட்ட படி நடந்தால் இன்னும் ஆறு மாதங்களில் 2000 மெகாவாட் கிடைக்கலாம். இன்னும் 5 வருடங்களில் தன்னிறைவை எட்டும் என நம்பலாம்.

இதில் கவனிக்கப் பட வேண்டிய மிகவும் முக்கியமான விஷயம் மின் பகிர்மான இழப்பில்,கடந்த ஆண்டு மட்டும் 1,349.8 கோடி யூனிட் மின்சாரம் வீணாகியுள்ளது. கிட்டதட்ட மக்கள் பயன்படுத்தும் (1,634 கோடி யூனிட் மின்சாரம்) அளவிற்கு இணையான மின்சாரம் வீணாகுகிறது. இதனால் சென்ற வருடம் 7,167 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதை, அரசின் அறிக்கை வெளிப் படுத்தியுள்ளது. அதாவது தயாராகும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு விற்கப் படுகிறது, மூன்றில் ஒரு பங்கு பாகம் வீணாகுகிறது, மூன்றில் ஒரு பங்கு இலவசமாக வழங்கப் படுகிறது.

 இதில் சுமார் இருபது லட்சம் விவசாய இணைப்புகள் உள்ளதாக அறிக்கையில் உள்ளது. அத்தனை இணைப்புகளும் 3 ஹெச் பி மோட்டார் (2000 வாட்ஸ்) என்று வைத்துக் கொள்வோம், ஒரு நாளைக்கு 5 மணி நேரம் ஓடுவதாக கணக்கிட்டாலும் வருடம் முழுவதும் ஓடினால் கூட 720 கோடி யூனிட்டுகள் தான் செலவாகும். 

20,00,000 இணைப்புகள் X 5 மணி நேரம் ஒரு நாளைக்கு X 30 நாட்கள் X 12 மாதங்கள் X 2 யூனிட்டுகள் = 720 கோடி யூனிட்டுகள்.

ஆனால் அறிக்கையில் 1220 கோடி யூனிட்டுகள் செலவாகியுள்ளதாக கூறப் படுகிறது.கணக்கு தெரியாதவன் வீட்டில் நித்தம் சண்டை என்ற கதைதான்.ஒரு இணைப்புக்கு ஒரு மீட்டர் என்றில்லாவிட்டாலும் ஒரு ஊருக்கு ஒரு மீட்டராவது வைக்க வேண்டாமா?.

தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் :

 நாம் இதையெல்லாம் இங்கு எடுத்துக் கூறுவதன் காரணம், தமிழக மின்வெட்டால் ஷாக் அடித்தது போல் துவளும் நமது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வரப் பெற்றால் நல்லது நடக்கும் என்ற பேராசை தான்.

இத்தனை (8000 ஆயிரம் கோடி)ஆயிரம் கோடிகள் அனாமத்தாக போகும் போது, மின்வாரியத்திற்கும் மட்டுமான தனியான ஆராய்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஏன் சில கோடிகள் செலவழிக்கக் கூடாது. ஒரு 500 கோடியில் இதற்காக, மின்வாரியத்திற்கு தேவையான உயர் நிலை ஆராய்ச்சி மையத்துடன் கூடிய தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் நிறுவி, திறமைக்கு முதலிடம் என்ற வகையில், அர்ப்பணிப்புடன் கூடிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, திறமையான பொறியாளர்களை உருவாக்கலாமே. வெளியேறும் பொறியாளர்கள் கண்டிப்பாக மூன்று வருடம் ராணுவ சேவை முடித்த பின்பே பணி அமர்த்தப் பட வேண்டும்.

 புளூம்பாக்ஸ் (Bloom Box) போன்றதொரு புதிய கண்டு பிடிப்புக்களுக்கு அடிக்கல் நாட்டலாம். மின் உற்பத்திக்கும் , மின் சேமிப்பிற்கும், மின் சிக்கனத்துக்கும், ஆன புதிய கண்டு பிடிப்புகளை ஊக்குவிக்கலாம்.

 புளூம்பாக்ஸ் (Bloom Box) : http://en.wikipedia.org/wiki/Bloom_Energy_Server




செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் சென்றால், அவனுக்கு  தேவைப் படும்  ஆக்ஸிசனை, மின்சக்தியினால் தயாரிக்க உருவாக்கப் பட்ட  தொழில் நுட்பத்தை நாசா ஓரங்கட்டி விட்டது. அதை நமது நண்பர் ஸ்ரீதர் உல்டாவாக செய்து ஆக்ஸிஸனை கொடுத்து அதிலிருந்து மின்சக்தியை தயாரிக்க பயன்படுத்தி விட்டார். இந்த விடியோவில் ஸ்ரீதர் கையில் வைத்திருக்கும் புளூம் பாக்ஸ் ஒரு அமெரிக்க வீடு அல்லது இரண்டு ஐரோப்பிய வீடு அல்லது , நான்கு ஆசிய வீட்டிற்கு மின்சக்தி அளிக்கக் கூடியதாம். ஆயிரக்கணக்கான  சோலார் பேனல் வைத்து தயாரிக்க கூடிய மின்சக்தியை ஐந்தே ஐந்து புளூம் பாக்ஸ் மூலம் தயாரிப்பதையும் பார்த்திருப்பீர்கள். 

ஒன்றுமில்லைங்க கடற்கரையில் மித மிஞ்சி கிடக்கும் மணலைத்தான் பயன்படுத்தி கண்ணாடித் தகடு மாதிரி ஒரு சின்னத் தகடை வச்சு அதில் ஒருபக்கம் பச்சை மை மறுபக்கம் கறுப்பு மை தடவி ஏதோ மேஜிக் பன்றார். அது ஒரு லைட் எரிக்க தேவையான மின்சக்தியை கொடுக்குதாம். அந்த மாதிரி கிட்டத்தட்ட 64 அடுக்குகளை பயன்படுத்தி ஒரு வீட்டுக்கு தேவையான மின்சக்தியை தயாரிக்கலாமாம்.சொல்வதற்கு எளிதாகத்தான் இருக்கிறது. உள்ளே என்ன ரகசியமோ?.  அவர் கடந்த 2010 பிப்ரவரியில், பத்து வருடமாக பாதுகாத்த ரகசியத்தை முதன் முதலாக மீடியாவில் பகிர்ந்து கொண்டார்,

 ஸ்ரீதருக்கு, ஒரு தனிமனிதர் ( John Doerr) 2000 கோடி ரூபாய் கொடுத்து அவரது கண்டுபிடிப்பை  பிஸினஸாக மாற்றும் போது 1,20,000 கோடி செலவழிக்கும் தமிழ் நாடு ஏன் அவரிடம் டீல் பேசக் கூடாது.

நாம் உருவாக்கும் பல்கலை கழகத்தின் மூலமாக, அமெரிக்காவில் வாழும் ஸ்ரீதருக்கு வாய்த்தது மற்றொருவருக்கு வாய்க்காதா?. அல்லது அதையும் விட சிறந்ததாக கிடைக்காதா?. ஒரு பத்தாண்டுகளில் காற்றாலை மின்சக்தி , மலைகளில் மழை நீரைச் சேமித்து அதனால் நீர் மின்சக்தி, சூரிய சக்தி யிலிருந்து மின்சக்தி, கடலலையில் இருந்து மின்சக்தி, இரசாயன மின்சக்தி, என ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கலாமே.

 உற்பத்தியை விட சேமிப்பு என்பதுதான் மிகவும் முக்கியமானது. மின் திருட்டைக் குறைக்க அடியாத மாடு படியாது என்பதற்கிணங்க தண்டனையை அதிகப் படுத்தலாம்.

அரசியல்வாதிகளும், அரசும் ஆடம்பரங்களில் செலவிடும் மின்சாரத்தை மிச்சப் படுத்தலாம். மக்களுக்கு அதிலும் குறிப்பாக பெண்களூக்கு அடிக்கடி மின் சிக்கனத்தைப் பற்றிய அறிவுரை கொடுக்க வேண்டும். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

 இலவசமாக எதையும் கொடுக்கக் கூடாது. அதையும் மீறிக் கொடுப்பேன் என்று முட்டாள்தனமாக கொடுத்தால், மின்சாதனங்களைக் கொடுக்க கூடாது. அதையும் மீறி படு முட்டாள்தனமாகக் கொடுத்தே தீர்வேன் என்று திமிரோடு கொடுத்தால் மின்காந்த அடுப்பு, சிறுகுழல் விளக்கு, எக்ஸாஸ்ட் ஃபேன் இவற்றைக் கொடுக்கலாம்.

மின்சாதனங்களைப் பற்றிய அறிவை பள்ளிப் பாடங்களிலிருந்து தொடங்கலாம்.

எதைஎதையோ படிக்கிறார்கள் ஆனால் வீட்டு உபயோக சாதனங்களைப் பற்றிய அறிவே இல்லாமல் இருக்கிறார்கள். வீட்டு உபயோக சாதனங்களைப் பற்றி, படிப்பு முடிவடையும் காலத்திலாவது  பாடம் நடத்தலாம். இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

எனது வாடிக்கையாளர் ஒரு மின்வாரிய பொறியாளர். அவரது மனைவியோ அறிவியல் பட்டதாரி, அவர் ஒரு நாள் மிக்ஸி வேலை செய்யவில்லை என கணவரிடம் சரி செய்து கொண்டுவரும்படி எடுத்துக் கொடுத்து விட்டார் அவர் எனது அலுவலகத்துக்கு (ஸ்டுடியோ) அருகில் இருக்கும் மெக்கானிக்கிடம் கொடுக்க வந்தவர் ,மெக்கானிக் இல்லை என்பதால் என்னிடம் கொடுத்து விட்டுச் சென்றார். அடுத்து இரண்டு நாட்கள் எனக்கு வேலை. அதற்கடுத்து இரண்டு நாட்கள் அவர் வரவில்லை .

 ஐந்தாவது நாள் இருவரும் சந்தித்தோம், "சார் வீட்டில் பெரிய கலவரமே நிகழ்ந்து விட்டது. இன்றைக்கு ஒன்று, புது மிக்ஸி வாங்கிப் போக வேண்டும் அல்லது பழைய மிக்ஸியை சரி செய்து கொண்டு செல்லவேண்டும் .மெக்கானிக் வேறு இல்லை என்ன செய்யலாம்" என்றார்.என்ன பிரச்னை என்று நாமே பார்த்து விடலாமா என்றேன் .

 இரும்பு பிடிச்ச கையும் சிரங்கு வந்த கையும் சும்மா இருக்காது என்பார்கள், அது போல் வீட்டில் ஏதாவது ரிப்பேர் என்றால் எனக்கு கழட்டிப் பார்த்து, காரணத்தை அறிந்து கொண்டு, மூட்டை கட்டி ஓரமாக வைக்கா விட்டால் எனக்கு தூக்கம் வராது. அதிலும் வெறும் வாயை மெல்லுகிறவனுக்கு அவல் கிடைச்ச மாதிரி மிக்ஸி கிடைத்தால் விடுவேனா?.



                                    


மிக்ஸியை எடுத்து மின் இணைப்பை கொடுத்தேன். ஆகா டெட் ஃபால்ட்!!!.. உடனே மிக்ஸியை திருப்பி அடியில் பார்த்தேன். பார்த்தவுடன் புரிந்தது,. ஓவர்லோட் பட்டனை ரீசெட் செய்துவிட்டு மீண்டும் இணப்புக் கொடுத்து ஆன் செய்த உடன் வேலை செய்தது. என்ன சார் உங்கள் கை பட்டவுடன் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்றார் அசடு வழிய!!!


1.ஓவர் லோட்  புரடக்சன்  ஸ்விட்ச் அல்லது  ரீசெட் ஸ்விட்ச் 2.சாதாரண நிலை,3.ஒவர் லோட் நிலைமை

 மிக்ஸி, ஒரு அதிக கரண்ட் இழுக்கும் குறுகிய கால பயன்பாட்டிற்கு உண்டான சாதனம். அது அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்கு மேல் ஓட்டக்கூடாது. ஆகவே மிக்ஸியின் அடியில் ஓவர்லோட் புரடக்சன் ஸ்விட்ச் ஒன்று இருக்கும். மிக்ஸியின் லோடு அதிகமாகி அதன் காயில் அதிக மின்சாரத்தை இழுத்தால் காயில் வெப்பமாகி கருகி விடாமல் தடுக்க ஒரு ஸ்விட்சு உள்ளது. இதை எத்தனை பேர் அறிந்திருப்பார்கள், அறிந்து ஞாபகத்தில் வைத்து உபயோகித்து இருப்பார்கள் என்பது ஒரு கேள்விக்குறி. அதை அறியாமல் காயில் போச்சு என்று மிக்ஸியை மாற்றிய படிப்பாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

ட்யூப் லைட்:


ட்யூப் லைட்
"நண்பன்" பாணியில் எனக்கு தெரிந்த சில பழைய, புதிய பொறியியல் பட்டதாரிகளை ட்யுப் லைட் எவ்வாறு வேலை செய்கிறது என்று கலாய்த்த போது மேலோட்டமாகச் சொல்லி சொதப்பினார்கள். அதற்கான வயரிங் எப்படி என்றவுடன் பலர் காணாமல் போய்விட்டார்கள்.


கலாய்க்கிறது யார்?
உண்மையில் ட்யுப் லைட் பல உன்னதமான டெக்னாலஜிகளின் கலவை என்றுதான் கூறவேண்டும். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் கண்டு பிடிக்கப் பட்டது இன்றும் நீக்கமற எல்லா வீடுகளிலும் பயன் பட்டுக் கொண்டிருப்பது, விரைவில் விடுதலை பெறப் போகிறது. அதைப் பற்றியும் அறிந்து கொள்வோம். ஏனென்றால் தமிழ்நாட்டில் நிறையப் பேர் அதைத்தான் சாப்பிடுறானுகளாம். ஏதோ சுருக்கமாக எனக்குத் தெரிந்த வகையில் சொல்லுகிறேன். நீங்கள் டெவலப் பண்ணிக் கொள்ளுங்கள்.


 படம் 1

இதை ஆன் செய்த உடன் சோக் (1) வழியாக மின்சாரம் சென்று பின் முதல் டங்க்ஸ்டன் சுருள் (2) வழியே சென்று, ஸ்டார்ட்ர் (3) வழியாகச் சென்று இரண்டாவது டங்க்ஸ்டன் சுருள் (4) வழியே சென்று, மின் சுற்று பூர்த்தியாகிறது. இதிலுள்ள ஸ்டார்டரும் சாதாரணமானதல்ல அதுவும் ஒரு சிறந்த கண்டு பிடிப்புதான்.  இதன் விலையோ பத்து ரூபாய்தான், இதுக்குள்ளேயும் பெரிய டெக்னாலஜி இருக்குது, அதற்கே ஒருதனி பதிவு போடனும். ஆதலால் காலம் கருதி, ஆரம்பித்த மேட்டரை  சுருக்கமாக சொல்லி விடுகிறேன். மின் சுற்று பூர்த்தி அடையும் போது ஸ்டார்டர் தன்னுடைய இயல்பில் ஒரு செகண்டுக்கு சிலமுறை தொடர்பை துண்டிக்கிறது.


படம்2
  இந்த மின் தொடர்பு துண்டிப்பபானது (Pulses), சோக்கில் (ஆட்டோ ட்ரான்ஸ்பார்மர்) தூண்டப்பட்டு ஒரு அதிக மின் அழுத்த ஓல்ட்டை உருவாக்குகிறது. அதிக மின்அழுத்தம் ஏற்பட்டு விட்டதால், ட்யூபில் உள்ள குறைந்த அழுத்தமுள்ள வாயு, மின்னூட்டம் பெற்று ஒரு கடத்தியாக செயல்படுகிறது. அந்தக் கடத்தியின் மூலம் வெப்பமடைந்த முதல் டங்க்ஸ்டன் சுருள் (2) லிருந்து  வெப்பமடைந்த இரண்டாவது டங்க்ஸ்டன் சுருளு( 4)க்கு நேரடியாக குறுக்கு வழியில் மின்சாரம் தாவி, ஸ்டார்டரை மின்சுற்றிலிருந்து ஓரங்கட்டி, ஏற்றிவிட்ட ஏணியை மறந்த கதையாக விலக்கி விடுகிறது.

மின்னூட்டம் பெற்ற வாயுவின் மூலம் மின்சக்தியின் ஏற்றம், மற்றும் இறக்கம் நடைபெறும் போது வெளியிடப் படும் புற ஊதாக் கதிர்கள், ட்யூபின் உட்புறத்தில் தடவப் பட்ட இரசாயண பூச்சின் மூலம் கண்ணுக்கு புலப்படும் கதிர் வீச்சாக மாற்றி ஒளிரவைக்கிறது.

ட்யுப் லைட். என்னவோ 40வாட்ஸ் என குறிப்பிட பட்டிருக்கும். ஆனால் அதனுடைய சோக் எப்படியும் 10 லிருந்து 20 வாட்ஸ் எடுத்துக் கொள்ளும் எனவே ட்யுப் லைட்டை மொத்தமாக 60 வாட்ஸ் எனக் கணக்கிட்டு உபயோகியுங்கள்.

எலக்ட்ரானிக் சோக்:


சோக், ஸ்டார்டர்
இதிலுள்ள சோக், ஸ்டார்டர் இவைகளை இணைத்து அவைகளின் வேலையை ஒரு எளிய எலக்ட்ரானிக் முறையில் செய்யவைத்து எலக்ட்ரானிக் சோக் என்று விற்கிறார்கள்.


எலக்ட்ரானிக் சோக்

 இதன் உபயோகத்தால் சிறிய அளவிலான, குறைந்த மின்செலவில் நிறைய ஒளிதரக் கூடிய CFL ட்யூப்கள்  10 வாட்டிலிருந்து கிடைக்கிறது.


CFL ட்யூப்கள்

ஒரு ட்யுப் லைட் மாட்டுவதற்கு 40,000 ரூபாயாம்!!

 இதென்ன கொடுமை முருகேசா? (சரவணனுக்கு ஈக்குவலண்ட்). வீட்டில் எது ரிப்பேர் ஆனாலும் தானே பார்த்துக் கொள்வது என்ற மெண்டாலிட்டி சிலருக்கு இருக்கும். நானெல்லாம் இப்ப திருந்திட்டேங்க. இதைப் போய் "நண்பன்" பாணி என்று சொல்லி நக்கலடிச்சீங்க ,பிச்சுப் புடுவேன். இப்படித்தான் ஒருத்தர் ட்யூப் லைட்டை தானே மாற்றுகிறேன் பேர் வழி என்று ஸ்டூலுக்கு கல்லு அண்டைக் கொடுத்து ஏறி மாட்டி விட்டு திரும்பும் போது தடுமாறி கீழே விழுந்து ஆஸ்பத்திரிக்கு போய் காலை 40,000 ரூபாய் கொடுத்து சரி பண்ணிட்டு வந்தாராம்.

மின்காந்த அடுப்பு: Indution Stove, Indution cooktop

என்னைக் கவர்ந்த மின்சாதனங்களில் இதுவும் ஒன்று. மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு.ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய சாதனம்.

இதனுடைய சிறப்பையும், பெருமையையும் எழுத தனியாக ஒரு பதிவிட வேண்டும். அப்படியா? . அப்ப அடுத்த பதிவு இன்டெக்சன் ஸ்டவ் தான். 




மேலும் படிக்க...!

இலவச மின்சாரம்தான் பெரிய பிரச்னையா? அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன் என்பதற்கிணங்க அரசாங்கம் அளந்து கொடுத்திருந்தா இந்த வம்பு வந்திருக்காது .1994-95 இல் தமிழக மின்வாரியம் ஈட்டிய உபரி (லாபம்) ரூ. 347 கோடி. 

 2007-08 ஆம் ஆண்டில் இது 3512 கோடி ரூபாய் பற்றாக்குறையாக மாறியது எப்படி.. 1994 இலும் சரி, 2008 இலும் சரி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுத்தான் வருகிறது. நட்டத்திற்கு காரணம் மின்சார ஒழுங்கு முறை ஆணையமும், தீர்ப்பாயமும் தான். நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியார் மயமாக்கும் நோக்கத்திற்காகவே உலக வங்கியின் ஆணைக்கேற்ப உருவாக்கப் பட்ட ஒரு அமைப்பு. கட்டண நிர்ணய அதிகாரம், உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியவை மாநில அரசிடமிருந்து பிடுங்கி சுய அதிகாரம் பெற்ற அமைப்பான இதனிடம் வழங்கப் பட்டு விட்டன. இதற்கான சட்டம் 1998 இலேயே இயற்றப் பட்டு விட்டது. இதனால் மாநில அரசின் நிலை கொதிக்கும் சட்டியிலிருந்து எரியும் கொள்ளிக்குள் விழுந்த கதையாகி விட்டது. 

தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்யும் நீர்மின் சக்தியின் விலை யூனிட்டுக்கு 21 காசுகள். அனல் மின்சக்தியின் அதிகபட்ச விலை ரூ.2.14 காசுகள் என்பதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழக மின் வாரியத்தின் 56,000 கோடி ரூபாய் கடனும், அதனைக் கட்டுவதற்கு நாம் தரப்போகும் கூடுதல் கட்டணமும் அரசுக்குப் போகவில்லை. நேரே முதலாளிகளின் பணப் பெட்டிக்குத் தான் போய்ச் சேர்கிறது. நல்லவாயன் சம்பாரிக்க நாற வாயன் திண்ண கதையா போச்சு. 

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ‘ஸ்மார்ட் மீட்டர்’ என்ற மின்சார மீட்டரை அறிமுகப் படுத்த விருக்கிறதாம். காலை, மதியம், மாலை, இரவு என ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில், ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை என்ன என்பதை இந்த மீட்டரைப் பார்த்து வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியுமாம். அதாவது, வரவிருக்கும் காலத்தில் மின் கட்டணம் என்பது ஒரு மாதத்திற்கோ, ஒரு நாளுக்கோ கூட நிரந்தரமாக இருக்காது. நித்திய கண்டம் பூரண ஆயுசு.

 மின்சாரச் சந்தையின் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஏறி (இறங்கிக்?) கொண்டிருக்கும். மின்சாரத்தின் விலை அதிகமாக இருக்கும் நேரத்தில் மின்சாரப் பயன்பாட்டை தவிர்த்துக் கொண்டு, விலை குறைவாக இருக்கும் நேரத்தில் மின்சாரத்தைப் பயன் படுத்துவதன் மூலம் மின் கட்டண செலவைக் கட்டுப்படுத்த முடியுமாம் . அலை எப்ப ஓயரது தலையை எப்ப முழுகிறது. 

மேலும் தகவலுக்கு 


ஸ்மார்ட் மீட்டர்: 
இருக்கிற வாடிக்கையாளர்களுக்கு மாட்டுவதற்கே சாதாரண மீட்டர் இல்லையாம். கிட்டதட்ட 25% வாடிக்கையாளருக்கு மீட்டர் மாட்ட வில்லை . இதுல ஸ்மார்ட் மீட்டராம். கூரை ஏறி கோழி பிடிக்க மாட்டாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம். பல வீடு, கடைகளில் மீட்டர் இல்லாமல் சராசரிக் கட்டணம் வசூல் செய்யப் படுவதால் மின்சாரம் அளவில்லாமல் தாறுமாறாக உபயோகிக்கப் படுகிறது. 

இதற்காகவே சிலர் மீட்டரை சேதப் படுத்திவிட்டு ( அதற்கென்று சில டெக்னிக் உள்ளது. போலும்! ஐயோ எனக்குத் தெரியாதுங்க) வேண்டிய மட்டும் உபயோகித்து விட்டு சராசரிக் கட்டணம் கட்டி விடுகிறார்கள். மீட்டர் ரீடிங்க் எடுக்க வரும் (சில தகுதியற்ற ) ஆட்கள் மீட்டர் ஒழுங்காக செயல் படுகிறதா என்பதை தீர்மானிக்க முடியாத திறமை யற்றவர்களாக  இருப்பதால்  ரீடிங்கை மட்டும் குறித்துவிட்டு பல்லாக்கு தூக்குவது மட்டும்தான் என்வேலை, எனும் மனப்பாங்குடன் செல்கிறார்கள்.  இதனால் மீட்டர் ஓட வில்லை என்பதை நிர்வாகம் தெரிந்து கொள்ள எட்டு மாதங்கள் ஆகிவிடுகிறது. புதிய மீட்டர் கையிருப்பு இல்லாததால் அது வந்து மாட்டுவதற்குள் ஒன்றரை வருடம் ஆகி விடுகிறது.

ஸ்மார்ட் மீட்டரின் விலை தற்பொழுது 1500 முதல் 5000 வரை உள்ளது. அதற்கான மோடம், நெட் ஒர்க் , மற்றும் சாப்ட்வேர் என்று அதற்கான முதலீடு அதிகமாகிவிடும். ஸ்மார்ட் மீட்டர் சிக்கனமானது சிறப்பானது என்கிறார்கள் இப்படி சொல்லித்தான் ஏமாற்றுகிறார்கள். இதே போல்தான் பெட்ரோல் விலை நிர்ணயம் தனி ஆணையத்திடம் விடப்பட்டதால் விலையேற்றத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல இது சர்வதேச அன்றாட நிர்ணய விலை என்று கூறி விட்டார்கள். கொலைக்கே அஞ்சாதவன் பழி பாவத்துக்கா அஞ்சுவான்?. 

இதில் விலை குறைவதற்கான வாய்ப்பே இல்லை. ஆகவே மின்சாரத்திற்கு அன்றாட விலை உயர்வு மட்டும் உறுதிதான். நாளடைவில் மக்களிடம் முன் அனுமதி பெறாமல் அவர்களது பணத்தை பிடுங்கும் முறையான (ப்ரீபெய்ட்) முழித்து இருக்கும் போது முழியைப் பிடுங்குவதில் இதுவும் ஒன்றாகிவிடும்.

ஏற்கனவே செல்போன், டிவி சேனல் காரர்கள் மக்களிடம் பணத்தை கறப்பது போல் இதுவும் தனியார் கம்பெனிகளின் சுரண்டலுக்காக வகுக்கப் பட்ட திட்டம். ஸ்மார்ட் மீட்டருக்கான செலவு கிட்டதட்ட 5000 கோடியாகும். இதுவும் மக்கள் பணம்தான். தனக்குத்தானே செலவு செய்து சூனியம் வச்சு கிட்ட கதைதான். இஞ்சி இலாபம் மஞ்சளில். 

இதை மக்களின் பணத்தில் நிறுவிவிட்டு  பணம் வசூலிப்பதை தனியாரிடம் ஒப்படைத்து, அரசு ஊழியர்களின் வேலைப் பளுவை குறைத்துவிட்டு, தனது கல்லாவை நிரப்பி விடுவார்கள் அரசியல்வாதிகள். ஏதாவது பிரச்னை என்றால், விவரம் கேட்க முடியாது. டோல்ஃப்ரீ நம்பரில் கேட்டால் கம்ப்யூட்டர் பேசும். அதுக்கு ஒன்றை அமுக்கவும்  இதுக்கு இரண்டை அமுக்கவும் என்று கடுப்பை ஏற்றுவார்கள். மக்கள் படாத பாடு பட்டு சேர்க்கும் காசை உட்கார்ந்த இடத்திலிருந்ததோ அல்லது சொகுசாக உலகைச் சுற்றிக் கொண்டோ சுரண்டுவார்கள். உழைக்கிறவனுக்கு ஒரு காசு நாட்டாமை பண்றவனுக்கு நாலு காசு. 

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்லது அரசு. 

என்று வள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே அரசின் இலக்கணத்தை வகுத்துள்ளார். சரியாகத் திட்டமிட்டு அதற்காக வரியாகப் பெறப் பட்ட பணத்தைக் காத்து அதை சிக்கனமாக சிறப்பாக மக்களுக்கு செலவழிப்பது தான் அரசாள்பவனின் கடமை. 

ஆனால் இன்று நடப்பதோ வேறு, எல்லாவற்றையும் ஒப்பந்த முறையில் தனியாரிடம் விட்டுவிட்டு வரியையும் அவனே வசூலிக்க வகை செய்து விட்டார்கள். பின் எதற்கு அரசும், அரசு ஊழியர்களும். தனக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தம் பேசி கமிஷன் வாங்கி தனது ஸ்விஸ் வங்கிக் கணக்கில் போடுவதற்குத்தான் அரசு (அரசியல் வாதிகளும் அரசு ஊழியர்களும்)  என்ற நிலையை நோக்கிச் செல்கிறது இன்றைய அரசு இயல்.

இலவச டிவியின் விளைவுகள்: 

கருணாநிதியின் குடும்பநல கேபிள் திட்டத்திற்காக, ஒரு டிவி சுமார் 2265 ரூபாய் மதிப்பில் 1.5 கோடி டிவிக்கள் சுமார் 3687 கோடி அரசுப் பணத்தில் மக்களுக்கு வழங்கப் பட்டது . இதனால் கருணாநிதியின் குடுபத்திற்கு கேபிள் டிவி மூலம் 4000 கோடி ரூபாய் 3 வருடங்களுக்கு உறுதிப் படுத்தப் பட்ட வருமானம் ஆகிவிட்டது. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்து புண்ணியம் தேடிக் கொண்டார். 

இதில் பாதி டிவிக்கள் உபயோகத்தில் இருப்பதாக கருதப் பட்டாலும்
 80,00,000 X 50 = 400,000,000 வாட்ஸ் (நினைவில் கொள்க வழங்கப் பட்ட பாதி டிவிக்குத்தான்). தேவைப் படுகிறது. அதாவது 400 மெ.வாட்ஸ் மின்சாரம் அதிகமாகத் தேவைப் படுகிறது. 

இதைத் தயாரிக்க 2400 கோடி ரூபாய் வேண்டும். ஆக கருணாநிதி அரசுப் பணத்தை 3687 +2400 = 6087 கோடி செலவு செய்து தனது குடும்பத்திற்கு  வருடத்திற்கு 4000 கோடி நிலையான வருமானத்தைத் தேடிக் கொண்டார். 

ஊரை அடிச்சு உலையில் போட்ட கதையாக இருக்கிறது. ஆனால் கேணைத்தமிழன் இன்னும் நம்புகிறான் இவர் நல்லவர், வல்லவர் என்று. ஆடு வெட்டுகிறவனைத் தானே நம்பும். 


இரா. சந்திரசேகர்.
 பழனி.

மேலும் படிக்க...!
முதலில் மின்வெட்டு பற்றிய சில தகவல்களை அறிவோம். பின்னர் யுபிஎஸ்(UPS) பற்றி ஆராய்வோம்.

தமிழக மின் வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் தற்போதைய தேவை 11500 மெ.வாட், ஆனால் உற்பத்தியோ 7500 மெ.வாட் ஆகவே 4,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. 


அடுத்த ஐந்தாண்டுகளில், தற்போதுள்ள, 11,500 மெகாவாட்டிலிருந்து, 18 ,311 மெகாவாட் வரை மின்சாரத் தேவை உயரும். ஐந்தாண்டுகளில், தமிழகத்தில் மின்சார உற்பத்தியின் அளவு, 20,152 மெ.வாட் ஆக உயரும் என, தமிழக மின்வாரியம் கணக்கிட்டுள்ளதாம். என்னைக்கு அத்தைக்கு மீசை முளைச்சு சித்தப்பான்னு கூப்பிடறது.   இது வரை 53,000 கோடி கடன் ஏற்பட்டுள்ள நிலைமையிலும் கூட தமிழகத்தில் வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு சமமாக, இலவச மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும், 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச மின்சாரம் வழங்கப் பட்டுள்ளதாக, தமிழக மின்துறை தெரிவித்துள்ளது. (விளங்குமா தமிழ்நாடு)

தமிழகத்தில் 2.24 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதில், 19.72 லட்சம் விவசாய இணைப்புகளும், 14.45 லட்சம் குடிசை இணைப்புகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆண்டுக்கு, விவசாய இணைப்பு ஒன்றிற்கு, 250 ரூபாயும், குடிசை இணைப்பிற்கு, 120 ரூபாயும், தமிழக அரசின் மானியமாகக் கிடைக்கிறது. இந்த இணைப்புகளுக்கு, மீட்டரும் கிடையாது; மின் கட்டணமும் கிடையாது.  அடப் பரதேசிகளா, ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டாமா?

மின் பகிர்மான இழப்பில், 1,349.8 கோடி யூனிட் மின்சாரம் வீணாகியுள்ளது, இதனால் 7,167 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதை, அரசின் மனு வெளிப்படுத்தியுள்ளது. ( அடக்கண்றாவி! கழுதை பெறது கால்பணம் சுமைகூலி முக்காப் பணமா)

மின் கட்டணம் செலுத்தும் வீடுகளுக்கு, 1,634 கோடி யூனிட் மின்சாரம் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த ஆண்டில் வீடுகளுக்கு, 8,678 கோடி ரூபாய்க்கு வினியோகிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளது. யூனிட்டுக்கு, 5.31 ரூபாய் செலவழிப்பதாக, தமிழக மின்துறை நிதி நிலை அறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டில்,6,478 கோடி ரூபாய்க்கு 1,220 கோடி யூனிட் மின்சாரம் விவசாயத்திற்கு,  இலவசமாக தரப்பட்டுள்ளது. அதாவது, பணம் கட்டும் நுகர்வோருக்கு வழங்கும் மின்சாரத்திற்கு இணையாக, இலவச மின்சாரம் தரப்படுகிறது. இதற்கு, அரசின் சார்பில், 219 கோடி ரூபாய் மட்டுமே மானியத் தொகையாகக் கிடைத்துள்ளதால், இலவச விவசாய மின்சாரம் மூலம், தமிழக மின் வாரியத்திற்கு, 6,259 கோடி ரூபாய் செலவு.

 மேலும் தகவல்களுக்கு http://www.dinamalar.com/News_Detail.asp?Id=346355

குடிசைகள் பயன்படுத்தும் மின்சாரம் எவ்வளவு என்பது, மின் வாரியத்திற்கே இன்னும் தெரியாது. அங்கு மீட்டர்கள் இல்லாததால், கணக்கிட முடிய வில்லை. எண்ணிச் செய்கிறவன் கெட்டி எண்ணாம செய்கிறவன் மட்டின்ன கதையா இவ்வளவு இன்சீனியர்களும் மட்டியா?. எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்.  விவசாய மின்சாரம் மட்டும் உயரழுத்த டிரான்ஸ்பார்மர்கள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது என, மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக, 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் மின் வாரியம், இவ்வளவு தொகைக்கு இலவச மின்சாரம் வழங்கினால், வரும் காலங்களில் இலவச மின்சார நஷ்டத்தை சரி செய்ய முடியாத நிலை ஏற்படும். மின் வாரியத்தில் பணம் கட்டி மின்சாரம் பெறும் நுகர்வோர் மீது, கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.என்னத்த சொல்லி என்ன பண்றது.உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா? போடு வரியை. ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணிக்குன்ன கதையா இருக்கவே இருக்கானுக கேணைத் தமிழகமக்கள்.

 தனியாரின் கொள்ளை:

இந்த 53,000 கோடியில், தனியார் கொள்ளை 15,000 கோடியாவது தேறும்.

6500  கோடிஇலவச மின்சாரம் X 6வருடம்= 39000 கோடி + தனியார் கொள்ளை 15000 கோடி =54000 கோடி கடன்.

 எடுத்துக் காட்டாக நாகை மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள பிள்ளைப் பெருமாள் நல்லூரில் ஆந்திராவின் டாக்டர் சி.பிரதாப்ரெட்டி குழுமத்திற்கு மின் உற்பத்தி நிலையம் அமைத்துக் கொள்ள இசைவு வழங்கப்பட்டது. பிள்ளைப் பெருமாள் நல்லூர் மின் உற்பத்திக் குழுமம் என்ற பெயராலேயே பிரதாப் ரெட்டி குழுமத்தினர் அந்நிலையத்தை நிறுவினர். ரெட்டி லேப்ஸ், அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றின் முதலாளிதான் இந்த பிரதாப்ரெட்டி.

இந்த பிபிஎன் நிறுவனத் திடமிருந்து ஒரு யூனிட் 17 ரூபாய் 80 காசுக்கு மின்சாரம் வாங்குகிறது தமிழக அரசு. மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி நிலையங்களில் 1 யூனிட் உற்பத்தி விலை 2 ரூபாய் 15 காசு என்பதை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் கொள்ளையின் அளவு புரியும். கடந்த ஆண்டு முழுவதும் இந்நிறுவனம் மின்சார வாரியத் திற்கு விற்றது 24.4 கோடி யூனிட் மின்சாரம். ஒப்பந்தபடி இந்த மின்சாரம் 35 நாள்கள் உற்பத்திக்குச் சமமானது. எஞ்சிய 330 நாள்களுக்கு இந்த நிலையம் உற்பத்தியே செய்ய வில்லை என்றாகிறது. ஆயினும் சும்மா இருந்த நாள்களுக்கு நிலைக் கட்டணமாக 330.04 கோடி ரூபாயைத் தட்டிச் சென்றது. இது போல் ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 1006 கோடி ரூபாயை உற்பத்தி இல்லாத காலங்களுக்கு நிலைக் கட்டணமாக மின்சார வாரியம் வழங்கி யுள்ளது. (எரியிற வீட்டில் பிடுங்கிறது ஆதாயமாம்).

 அடுத்த ஐந்தாண்டுகளின் பற்றாக்குறையை சமாளிக்க, தினமும் 4000 மெகாவாட் மின்சாரம், தனியாரிடம் கொள்முதல் செய்ய, டெண்டர் விடப்பட்டுள்ளதாம். (இன்னைக்கு இலை அறுக்கிறவன் நாளைக்கு குலை அறுக்கத்தான் செய்வான். கிழிந்தது தமிழகத்தின் பொருளாதாரம்).

 ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும், முடைக் காலத்தில் வெவ்வேறு மின் உற்பத்தி நிலையங்களிடம் அவ்வப்போது வாங்கிக் கொண் டதற்கும் மட்டும் கடந்த ஆண்டு 8884.4 கோடி ரூபாய் மின்வாரியம் வழங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாய் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டது. மேற்கண்ட ஐந்து நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை கட்டுப் படுத்தியிருந்தாலே இந்த இழப்பில் ஏறத்தாழ 8 ஆயிரம் கோடி ரூபாயைக் குறைத்திருக்க முடியும்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் , மின்சார தீர்ப்பாயமும் எவ்வாறு தனியார் நிறுவனங்களின் கொள்ளைக்குத் துணைபோய் மின்வாரியத்தை கடன் சேற்றில் சிக்க வைக்கின்றன என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டைப் பார்க்கலாம். (அவன்தம்பி அங்கதனுக்கு பங்கில்லாமலா போயிரும்) . கள்ளனும், தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம் அல்லவா.

 மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2010 ஆம் ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்திய போது பன்னாட்டு, வடநாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறு வனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1.80 முதல் ரூ.2.50 வரை கட்டணச் சலுகை வழங்கி அறிவித்தது. பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு ,அதை பிடுங்கித் திண்ணுச்சாம் அநுமாருன்னு கதையா கார்ப்பரேட் நிறுவனங்கள் இச்சலுகைகளால் கொழிக்கிறது.

இவ்வாறு கட்டணச்சலுகை வழங்குமாறு தமிழக அரசும் கோரவில்லை; அந்த நிறுவனங்களும் கோரவில்லை. மக்கள் கருத்தும் கோரப்படவில்லை. ஆற்றின் போக்கே அரசன் போக்கு என தானடித்த மூப்பாக தகவல் தொழில் நுட்பக் குழுமங்களுக்கு இக் கட்டணச் சலுகையை வாரி வழங்கியது ஆணையம். (தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்தான்). 

ஒழுங்குமுறை ஆணையம் தான் இவ்வாறு என்றால் மின்சாரக் கட்டணம் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரிக்கும் உச்ச அமைப்பான மின்சாரத் தீர்ப்பாயமும் அதற்கு மேல் இருக்கிறது. பிரதாப் ரெட்டியின் பிபிஎன் நிறுவனம் தனக்கு மின்சார வாரியத்திலிருந்து 189 கோடி ரூபாய் பணம் நிலுவையுள்ளது என வழக்குத் தொடர்ந்தது.அவ் வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், பிபிஎன் குழுமம் கேட்டதை விடப் பல மடங்கு அதிகமாக இழப்பீட்டை கணக்கிட்டு ரூ 1050 கோடி வழங்குமாறு மின்சார வாரியத்திற்கு ஆணையிட்டது. (ஆறு போவதே போக்கு, அரசன் சொல்வதே தீர்ப்பு.) குதிரை தள்ளி விட்டதுமில்லாமல் குழியும் பறிச்சுச்சாம்.

இது என்ன கொடுமை இதுக்கு மேல இருக்கு. வீடியோகான் நிறுவனத்துடன் தமிழக மின்சார வாரியம் ஒரு ஒப்பந்தம் போட்டு, ஏதோ காரணத்தால் ரத்து செய்து விட்டது. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுவுற மாதிரி அழு.து கேஸ்ஸ போடுன்னு பேசிக்கிட்டாய்ங்க போல. அவனும் இங்கேயெல்லாம் கேஸ்ஸப் போடாம சிங்கப்பூரில் சர்வதேச நீதி மன்றத்தில் நம்ம சிதம்பரம் மூலம் கேஸ்ஸப் போட்டு 3000 கோடி நஷ்ட ஈடு கேட்டானுக. அதுதான் அவனுக செய்த தப்பு பேசாம நம்ம ரெட்டி மாதிரி தீர்ப்பாயத்தில் போட்டிருந்தா ஒரு 6000 கோடியாவது கிடைச்சிருக்கும் .அங்க வெறும் 125 கோடிதான் கொடுக்கச் சொன்னாங்களாம். அதனால ரெட்டிவழியைப் பின் பற்றி வீடியோகானும் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கே வந்துட்டானுக. இவனுக தீர்ப்பாயத்திற்கு போனா 6000 கோடி கிடைக்கும் ஆனா ஏன் போகலைன்னு தெரியலை. எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்போ போங்க.

சிதம்பரம் ஒரு தமிழனாம். அன்னம் இட்ட வீட்டிலே கண்ணம் இடுறவனுக, உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணுறவனுக வம்சம் விளங்குமா? இவனைத் தலையில் வைத்து ஆடுறானுக தமிழனுக.(இருக்கிறவன் ஒழுங்கா இருந்தா தானே சிரைக்கிறவன் செம்மையா சிரைப்பான்.)

இப்போதும் பிபிஎன் உள் ளிட்ட நான்கு தனியார் நிறு வனங்கள் மின்சாரம் வழங்கு வதை நிறுத்தி வைத்திருப்பதால் மின்வெட்டு இன்னும் கூடுதல் ஆகிறது. இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிஞ்ச கதையாவில்ல இருக்கு.

 மேலும் தகவல்களுக்கு

தொடரும்.....................
இரா. சந்திரசேகர்.
 பழனி. 

மேலும் படிக்க...!
பாகம் 8

வினோத்குமாரின் கேள்வி:
 சூரியனுடன் இனைந்து இயங்கினாலும்,சனி புதன் சேர்ந்து சாதகரின் 7ம் வீட்டில் இருந்தா சாதகருக்கு அலி தன்மையை கொடுக்கும்னு படிச்சு இருக்கேன், இயல்பில் புதன் அலி கிரகம் தானே. அப்படி பார்த்தால் அலி தன்மை திருமண பொருத்தத்தில் தவிர்க்க முடியாத இடம் பெறும் அல்லவா?.

 பதில்:
உண்மையில் சனிக்கிரகமும் அலிக் கிரகம்தான். இதில் புதன் உப்புக்கு சப்பாணிதான். இதில் ஒரு விஷயம் ஏற்கனவே கூறியுள்ளேன் புதன் எந்த கிரகத்தோடு சேருகிறதோ அதன் குணங்களைதான் இதுவும் கொடுக்கும். ஒரு வேளை ஆதலால்தான் இந்த டபுள் இம்பாக்ட் ஆக இருக்கலாம். ஆனாலும் அலித்தன்மையை இந்த ஒரு கட்டத்தின் நிலைமைக் கொண்டு மட்டும் தீர்மானிக்கமுடியாது


வினோத்குமாரின் கேள்வி:
ஆட்டத்தில் மிக முக்கியமான காய்கள் சிப்பாய்கள் .. நான் சிப்பாய்கள் தான் சனியா என கேட்டதற்கு காரணம், மெதுவாக ஆனால் வலுவாக நகரும்.எட்டாம் வீட்டை அடைந்தால் மிக வலுவான மந்திரியாக உருவெடுத்து , எதிராளிக்கு மரணம் தரும் . என்றெல்லம் இருப்பதால்தான். நீங்கள் சனியை யானையாக உருவகப படுத்தியது தவறுதானே?.

 பதில்:
 ஜோதிடத்தைப் பொறுத்த வரை கோச்சாரத்திலும், இலக்கினத்திலும் முக்கிய பங்காற்றுவது சனிதான். கோச்சாரத்தில் ஏழரைச்சனி என்று பெயர் பெற்றவனை, ஆயுளுக்கு காரணமானவனை, சனியன் என்று அன்றாட வாழ்வில் பெயர் எடுத்தவனை, சதுரங்கத்தில் முக்கியமான ஆளாகக் கருதிச் சேர்க்கவில்லை என்றால் சதுரங்கம் முழுமை அடையாது. ஆகவேதான் சனி சிப்பாய் அல்ல என்றேன். நீங்கள் கூறுவது போல் செஸ்ஸில் சிப்பாய்க்கு அவ்வளவு மதிப்பு கிடையாது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் பொதுவாக சிப்பாய்கள்தான் எளிதாகப் பலி கொடுக்கப் படுகிறார்கள்.

அதுமில்லாமல் சிப்பாய்க்கு எண்மதிப்பு ஒன்றுதான். ஆனால் யானைக்கோ மதிப்பு ஐந்து. தளபதிக்கு(9) அடுத்த மதிப்பு யானைக்குத்தான்(5). ஆகவேதான் ஆயுள்காரகனாகிய சனீஸ்வரனுக்கு யானையின் சிறப்பிடம் வழங்கப் பட்டுள்ளது.. சிப்பாய்க்கு தகுந்த ஆட்கள் இருக்கிறார்கள் பின்னர் விளக்கம் தருகிறேன்.


வினோத்குமாரின் கேள்வி: 
சூரியன் ஆண்டுக்கு ஒரு சுற்று என்பதால் ராஜா ஒரு முவ் என்றால் . ராஜா, சிப்பாய், குதிரை தவிர மற்றதெல்லாம் அளவில்லாத முவ் தானே இது எப்படி ?.
பதில்:
சனியின் சுழற்சி காலம் 30 வருடங்கள். இவையெல்லாம் எட்டு கட்டங்களுக்கும் அதிகமாக இருப்பதால் எல்லை வரை செல்கின்றன. செவ்வாய் 4 வருடங்கள் என்பதால் அதன் இயக்கம் நான்கு கட்டங்களுக்குள் அமைந்து விடுகிறது. சுக்கிரனின் சுழற்சிக்காலம் ஒரு வருடமாக இருந்தாலும் அதனுடைய இயக்கம் பிற்காலத்தில் மாற்றப் பட்டிருக்கும்.

கேள்வி: 
உங்கள் கூற்றுப் படி ஜோதிடத்தில் திருமணத்திற்கு காரகன் எது? அது சதுரங்கத்தில் எவ்வாறு பயன்படுத்தப் பட்டுள்ளது.?.

பதில்:
 திருமண பொறுப்பாளன் அல்லது களஸ்திர காரகனான சுக்கிரனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எப்படி திருமணப் பொருத்தம் பார்க்க முடியும். பையன்கள் யாராவது அழகான பெண்களுடன் பழகுவதைப் பார்த்துவிட்டால் போதும், உனக்கென்னடா சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறான் என்பார்கள். பெண்கள் சம்பந்தப் பட்ட விஷயம் என்றால் சுக்கிரனுக்குப் பங்குண்டு. சுக்கிரன் தனது ஆட்சி வீடுகளில் ராஜாவுக்கும், மந்திரிக்கும் இடத்திலும், வலத்திலும் (ரிஷபமும், துலாமும்) மதகுருவாக உட்கார்ந்து சண்டையில் உதவியாக இருக்கிறார். சூரிய சந்திரர்களுக்கு அடுத்த இடம் கொடுக்கப் பட்டதில் இருந்து அவரின் முக்கியத்துவம் தெரிந்து கொள்ளலாம். (புராணங்களில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடைபெறும் யுத்தத்தில் சுக்கிராச்சாரியார் என்பவர் அசுர குருவாக இருந்து அசுரர்களுக்கு துணையாக இருப்பார்..)

கேள்வி: 
அது சரி மற்ற காய்களுக்கும் கிரகங்களுக்கும் எப்படி ஒப்பிடுவீர்கள்?.
பதில்:
புதன் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. ஏனெனில் அது சூரியனுக்கு அருகில் இருப்பதாலும், அதனுடைய சுழற்சிக் காலமாகிய 88 நாட்களும், அதனுடைய உருவ அமைப்பும் காரணமாகும் அடிக்கடி அஸ்தங்கத்தில் மாட்டிக் கொள்வதாலும், வக்கிரத்தில் சஞ்சரிப்பதாலும், சமயத்தில் மறைவிடத்தில் (12ஆம் இடம்) வருவதாலும் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது புதன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை. இனி யுத்தத்திற்கு தேவையானவர்கள் எல்லாம் சண்டைக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும். அதிலும் ஈவு இரக்கமற்ற கொடியவர்கள்தான் சண்டையில் ஜெயிக்க முடியும். ஜாதகத்தில் அந்த மாதிரி பாபர்கள் லிஸ்ட்டில் உள்ளவர்கள் தான் செவ்வாயும், சனியும்.

செவ்வாய்: 
திருமணப் பொருத்தத்தில் செவ்வாய்தான் மிக முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. பெண் ஜாதகத்தில் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படும். அதுமட்டுமில்லாமல் பெண் ஜாதகத்தில் சூரியனோடு செவ்வாய் ,சனி ஆகியவை எந்தக் கட்டத்திலும் சேர்ந்து இருந்தால், அதற்கு தகுந்த கணவனை தேட வேண்டுமாம். அதாவது அந்த செஸ் போர்டில் ராஜா, குதிரை, யானை இருந்தால் விளையாடும் போது கவனம் தேவை, இல்லாவிட்டால் எளிதில் தோற்று விடுவீர்கள். செவ்வாயின் நிறம் சிவப்பு அதனால் குதிரையாக கற்பிதம் செய்தது நூற்றுக்கு நூறு சரி. அதிலும் அதன் தோஷ இடங்கள் ஆகிய 2,4,7,8,12 என்னும் ஐந்து இடங்கள் குதிரையின் இயக்கத்திற்கு ஒத்து வருகிறது. ஆகவே செவ்வாய் அதன் ஆட்சி வீடுகளில் (மேஷ, விருச்சிக) ராஜா, மந்திரி, குரு ஆகியோருக்கு இடமும் வலமும் நின்று யுத்தத்தில் கலந்து கொள்கிறது. அதன் சுழற்சி வருடங்கள் நான்கு, அது போல் அது செல்லும் கட்டங்களும் நான்கு.

வியாழன்: 
வியாழன் திருமண பொருத்தங்களில் அவ்வளவாக கணக்கில் கொள்ளப் படுவதில்லை. ஏனெனில் அவர் ஒருவகையில் சகலத்துக்கும் பொறுப்பானவராகுகிறார். ஆதலால் திருமணத்தில் அவரது பார்வை மட்டுமே கணக்கிடப் படுகிறது. அதைத்தான் ”வியாழ நோக்கம்” என்கிறார்கள். மேலும் திருமணத்திற்கு பின் ஏற்படும் குழந்தை பாக்கியத்திற்கு அவர் காரகனாக இருக்கலாம் ஆனால் திருமணம் ஆகிய பொருத்தத்தில் (யுத்தத்தில்) அவருக்கு வேலை இல்லை. அதிலும் இவர் ”ரொம்ப நல்லவர்” ஆதலால் இவர் ”அதுக்கு சரிப்பட மாட்டார்” ஆதலால் மீனமும், தணுசும் கணக்கில் வரவில்லை. பார்வையோடு சரி.


சனி: 
திருமண பொருத்தம் பார்ப்பதெல்லாம் அப்புறம், முதலில் ஜாதகத்தை கையில் எடுத்தவுடன் பார்க்க வேண்டிய விஷயம் ஆயுள்.
ஜோதிடர்களே! முதலில் ஜாதகத்தை எடுத்தவுடன் ஆயுள் ஸ்தானத்தையும், ஆயுள் காரகன் (சனி), ஆயுள் ஸ்தானாதிபதி, லக்னாதிபதி ஆகியோரைப் பார்த்து அதன் பலம் பலவீனத்தை கணித்து மனதில் வைத்து அதன்படி சொல்லுங்கள். அதைப் பார்க்காமல் தான் சிலபேர், ஒரு திரைப்படத்தில் சார்லி பலன் சொல்லி அடி வாங்கியதைப் போல் வாங்குகிறார்கள்.

ஆயுளுக்கு காரகன் (பொறுப்பேற்பவன்) சனிதான். சுபாவத்தில் கெட்டவன். சண்டைக்கு உகந்தவன், பாபி. இவருக்கு மந்தன், காரி, ஈஸ்வரன் என்றெல்லாம் பேருண்டு. வான வெளியில் பெரிய கிரகமாகவும் கடைசி கிரகமாகவும் உள்ளவர். (செஸ் போர்டிலும் கடைசியாக உள்ளது) கரிய நிறத்தவன், உருவத்தில் பெரியவன். இந்த இரண்டு குணாதிசயங்கள் உள்ள ஒரே ஒரு மிருகம் யானைதான். அதனால்தான் சனிக்கு யானையை உருவகப் படுத்தி ஆட்டத்தில் நிற்க வைத்து விட்டனர். இதை யாராலும் மறுக்க முடியாது. இவர் சூரிய சந்திரர்களுக்கு இடமும் வலமும் கடைசியில், தனது ஆட்சி (கும்பம், மகரம்) வீடுகளில் அமர்ந்து யுத்தத்தில் கலந்து கொள்கிறார்ர்ர். (அவன், இவன் என்று சொல்லி அனாவசியமாக கோபத்தை கிளறக் கூடாது பாருங்கள்). அதனுடைய இயக்கமும் யானையைப் போல் மெதுவாக, ஸ்டெடியாக இருக்கிறது. இரு ஜோதிடக் கட்டங்களை  கும்பம், மகரம் ஆகிய இரு ராசிகளுக்கும் இடையில் பிரித்து ஒரு நேர் கோட்டில் அமைத்து அப்படியே எதிரெதிர்த் திசையில் நேராக அடுக்கினால் செஸ் போர்டுதான்.


                         


கேள்வி: 
 சூரிய,சந்திரர்களையும் கிரகங்களையும் அதன் ஆட்சி வீடுகளையும் செஸ்ஸில் ராஜா, மந்திரி(க்யூன்), குரு(பிஷப்) நைட்(குதிரை), ரூக் (யானை) ஆகியோருக்கும் அவரது இருப்பிடங்களுக்கும் ஏறத்தாழ சரியாக ஒப்பிட்டு சொல்லிவிட்டீர்கள். இந்த சிப்பாய்களுக்கு எங்கிருந்து, யாரை அழைத்து வந்து ஒப்பிடப் போகிறீர்கள்?.

 பதில்:
அவர்களும் ஜோதிடத்தில் தான் உள்ளார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் உபகிரகம் (பான்) என்கிற அமைப்பு உண்டு. அதனுடைய உண்மையான அர்த்தம் என்ன வென்று தெரியவில்லை. ஒரு வேளை வால் நட்சத்திரங்களாக இருக்கலாம். ”உபகிரகம்” என்கிற வெறும் வார்த்தை பிரயோகத்தை வைத்துக் கொண்டு விவாதத்திற்கு வராதீர்கள், ஏனென்றால் "உபகிரகம்" என்பது இவர்கள் வசதிக்கு ஏற்படுத்திய வார்த்தை.

சூரியனுக்கு காலன்,
 சந்திரனுக்கு பரிவேடன்,
புதனுக்கு அர்த்தப்பிரகரணன்
சுக்கிரனுக்கு இந்திரதணுசு,
செவ்வாய்க்கு தூமன்,
குருவுக்கு எமகண்டன்
சனிக்கு குளிகன்

ஆகியோர்தான் சிப்பாய்கள். அவர்களுக்கு அதிக வலிமை இல்லைதான், ஆனால் அவர்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு எட்டாம் இடத்திற்கு சென்றால்தான் வில்லங்கம். மரணத்தையோ மரணத்திற்கு ஒப்பான கண்டத்தையோ கொடுப்பார்கள் என்பது ஜோதிடத்தின் பாலபாடம். இந்த சிப்பாய்கள் எதிரியின் கோட்டைக்குள் நுழைந்துவிட்டால் அதாவது (எட்டாம் இடத்திற்கு வந்துவிட்டால்) அவர்களுக்கு பதவி உயர்வு (Promotion) உண்டு. அது போல் செஸ்ஸில் பான் எட்டாம் இடத்திற்கு சென்றுவிட்டால் மந்திரியின் அதிகாரம் தரப்படும். ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் மாந்தி எனப்படும் குளிகன் அமர்ந்தால் அதுவும் தோஷமாக கருதப்படும்.ஆகவே சிப்பாய்களின் இருப்பிடம் நியாயப் படுத்தப் பட்டது.

கேள்வி: 
விளையாட்டின் முடிவிற்கும், திருமணப் பொருத்தத்திற்கும் எப்படி முடிச்சுப் போடுவீர்கள்?.

பதில்:
வெள்ளைக்காய் ஆணாகவும், கறுப்புக்காய் பெண்ணாகவும் உருவகப் படுத்திக் கொண்டு விளையாடும் போது, முதல் நகர்த்தலில் வெள்ளைக்காய்க்கு முன்னுரிமை கொடுத்து விளையாட்டு டிராவில் முடிந்தாலும், வெள்ளைக்காய் ஜெயித்தாலும் இரு ஜாதங்களும் சேரும் என்பதுதான் முடிவு. வெள்ளைக்காய் தோற்றால் அது பொருந்தாது. அதாவது மனை என்னும் குடும்பத்தில் பெண்ணின் கை ஓங்கியிருந்தால் அது சரியான குடும்ப அமைப்பாக இருக்காது என்பது ஜாதகம் கண்டு பிடித்த காலத்தில் ஏற்பட்ட மரபு. அந்தக் கால சமூக சூழ்நிலையை கருத்தில் கொண்டால் இதில் ஆணாதிக்கமோ என்ற கேள்விக்கே இடமில்லை.

கேள்வி: 
சதுரங்கத்தில் உள்ள கேஸ்லிங்க் (castling) என்பதற்கு ஜோதிட விளக்கம் என்ன?
பதில்:
தர்ம கர்மாதி யோகம் என்பதைப் பற்றி 1665 இல் இயற்றப் பட்ட "ஜாதக அலங்காரம்" கூறுவதைப் பார்ப்போம்.

மாதேகே டன்மயோக வகைகன்ம மன்னனோடு
தாதையுங்கூடி எந்தத் தலத்தினிருந்த போதும்
ஓதிய ஒருவர் வீட்டில் ஒருவர் மாறாயிருந்த
போது மாறாத செல்வம் பொருந்திடும் ராஜயோகம்.

அதாவது 9ஆம் 10 ஆம் அதிபதிகள் இணைந்து எங்கிருந்தாலும் அல்லது ஒருவர் வீட்டில் ஒருவர் மாறியிருந்தாலும், அச்சாதகன் குறைவிலாத நல்லவழியில் ஈட்டிய செல்வத்தைப் பெற்று இராஜ யோகத்தோடு வாழ்வான். இதைத்தான் பரிவர்த்தனை யோகம் எனவும் சொல்வர். பரிவர்த்தனை என்றால் (இடத்தை) கொடுத்து வாங்குதல் எனப்படும்.

மேலும்  இரு கிரகங்கள் தங்கள் வீடுகளை மாற்றிக் கொள்வதை பரிவர்த்தனை யோகம் என்பார்கள்.அதாவது 1,2,9,10,11 க்குடையவர்கள் தங்கள் இராசி வீடுகளை பரிவர்த்தனை செய்து கொள்வதாகும். உதாரணமாக சூரியனின் ஆட்சி வீட்டில் சனியும், சனியினது ஆட்சி வீட்டில் சூரியனும் இருந்தால் அது பரிவர்த்தனை யோகம் எனப் படும். இதனால் அதிகப் பலம் பெறுவார்கள். யோக ஜாதகம் என்பர். செஸ்ஸில் யோகம் என்பது வெற்றிக்கான வாய்ப்புகளென்றுதான் அர்த்தம். அந்த வகையிலான ஒரு நகர்த்தலாக இருக்கும்.

மேற்க் கூறிய விளக்கங்களால் இந்தியாவின் சதுரங்கம்தான் இன்று உலகெங்கும் விளையாடப் படுகிறது என்பது தெளிவாக விளங்குகிறது. மேலும் சதுரங்கத்தின் தோற்றுவாய் ஜோதிடம்தான் என்பதும், அந்த ஜோதிடத்தை உலகிற்கே அளித்தது இந்தியாதான் என்பதும் உறுதி செய்யப் படுகிறது.

தொடர் முற்றும்.

நன்றி.

இரா. சந்திரசேகர்,
பழனி.

மேலும் படிக்க...!
top