மத்திய அரசின் பொய்யும் புரட்டும்.

எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. 2006-07 முதல் 2009-10 வரையிலான 4 நிதியாண்டுகளில் இந்த 3 நிறுவனங்களும் ரூ. 36,653 கோடி லாபம் அடைந்திருக்கின்றன. மத்திய அரசுக்கு ரூ.4,73,000 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. விற்பனை வரி போன்றவை மூலமாக மாநில அரசுகளும் ஆதாயம் அடைகின்றன.

இந்த 4 நிதி ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்காக வழங்கப்பட்ட மொத்த மானியமே ரூ.26,000 கோடிதான். மொத்த வருவாயில் இது 6 சதவீதத்துக்கும் குறைவு. நஷ்டம் ஏற்படுவதாக, அரசும், எண்ணெய் நிறுவனங்களும் ஒப்பாரி வைத்தாலும், அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது என்கிற பூசணிக்காயை  எந்த சோற்றுக்குள்ளும் மறைக்க  முடியாது.

http://rsyf.wordpress.com/2012/05/25/petrol-income-2/

தினமணியில்கடந்த 2011 அக்டோபர் மாதம்  பதிவிடப் பட்டது. அரசின் தந்திரக் கணக்கு  First Published : 20 Oct 2011 02:16:41 AM IST

அரசின் தந்திரக் கணக்கு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2010-11ம் ஆண்டுக்கான அறிக்கையில், அந்த நிறுவனத்துக்கு வரிப்பிடித்தங்கள் போக ரூ.7,445 கோடி லாபம் அடைந்திருப்பதைக் காண முடியும்.

அம்பானி குடும்பம் கஷ்டப்பட கூடாதுன்னு நினைக்கும்  மத்திய அரசு பெட்ரோல் விலையை ஏற்றி விட்டது. நம்ம மத்திய அரசுக்கு மக்கள் கஷ்டப் படுவதை பற்றி கவலை இல்லை. அம்பானி மல்லையா போன்றவர்கள் கஷ்டப் படக் கூடாதுன்னு அவர்களுக்காகவே ஆட்சி நடத்தும் நம்ம  மதிப்புக்குரிய பொருளாதார மேதை மன்மோகன்சிங்கிடமும் அன்னை சோனியாவிடமும் விலையேற்றத்தை தவிர வேறு என்ன எதிர் பார்க்க  முடியும்.

http://kalamarudur.blogspot.in/2012/05/blog-post_25.html

இந்த நிறுவனம் அரசுக்கு லாப ஈவுத் தொகையாக மட்டும் ரூ.39,658 கோடியைக் கொடுத்திருக்கிறது. பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களும் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டியிருக்கின்றன.



தற்பொழுது பெட்ரோல் விலை ஏற்றம் என்பது உலக மகா மொல்லமாரித்தனமாகும். உலகில் பெட்ரோல் விலை தற்பொழுது கடந்த நான்கு மாதங்களில் இருந்ததை விட  மிகவும் குறைவாக உள்ளது. மேலும் குறைந்து கொண்டே இருக்கிறது. கீழே கொடுத்துள்ள சுட்டியில் கச்சா எண்ணெயின் விலையை பலவிதமாக அறிந்து கொள்ளலாம். கடந்த 5 வருடத்திற்கு அல்லது கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது கடந்த மூன்று மாதங்களில் ஏற்பட்ட மாற்றம் என அறிந்து கொள்ளலாம்.

கடந்த ஐந்து வருடங்களுக்கான  விலை விவரம்
கடந்த மூன்று மாதங்களுக்கான விலை விவரம்

http://oil-price.net/dashboard.php?lang=en

இந்த 2008 ஜனவரியில்  உலகச் சந்தையில்  பேரல் 140 டாலர் விற்றபொழுது கூட இவ்வளவு விலை ஏற வில்லை. ஆனால் தற்பொழுது 90 டாலர்தான் விற்கிறது. இந்த நேரத்தில் ஏற்றுவது ஏன் என்று விளக்கத் தெரியாத பொருளாதார மேதை மன்மோகன் சிங் மத்திய அரசு விலையேற்றத்திற்கு பொறுப்பல்ல என்று கூறுவது முழித்திருக்கும் போது முழியை தோண்டும் கதைதான்.

அதிலும் மத்திய மந்திரியும், டிவிச் செய்திகளில் உலகச் சந்தையில் விலையேற்றம் என்று கூசாமல் பொய் பேசுகிறார். இதைக் கேட்பதற்கு ஆள் இல்லை. இந்த மீடியாக்கள் ஜால்ரா அடிச்சுக்கிட்டு உலகச் சந்தையின் விலையை  அறிவிக்காமல் இருப்பது ஏன்?. அவர்களுக்கு தெரியாதா?

இதே நிலைமை நீடித்தால், இந்தியா பொருளாதாரம் சரிவில் சிக்கி, வரலாற்றில் பேசப் படும் அளவிற்கு சீர் கெடப் போகிறது .இன்று கிரீஸூக்கு ஏற்பட்ட நிலை தான் நாளைக்கு நமக்கும்.

நமது முதல்வர் சொல்வது போல்  மக்கள் கலகம் செய்து ஆட்சியை இறக்கவேண்டிய சூழ்நிலை உருவாகப் போகிறது. அதாவது நாட்டில் கலகம் ஏற்படப் போகிறது என்பதை நாசூக்காக சொல்கிறார்.

பெட்ரோல் விலையேற்றம் என்பது ஏதோ ஒரு ரூபாய் அல்லது 2ரூபாய் ஏறுவது இயல்பு ஆனால் தற்பொழுது 7.50 காசு என்பது  இமாலய திருட்டுத்தனம் . மக்கள் என்று உணரப் போகிறார்களோ அன்று அரசியல் வாதிகளுக்கு ஆப்பு அடிக்கப் போகிறார்கள்.ரூபாய் மதிப்பு குறைவினால் பயன் அடைவதும் ஸ்விஸ் வங்கியில் டாலரில் டெபாசிட் செய்திருக்கும் அரசியல் வாதிகள்தான்.

மத்திய அரசின் திருட்டுத்தனத்தை மக்கள்தான் ஒருவருக்கொருவர் சொல்லி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.  மக்களே நாம் புரட்சி என்று தீவட்டியை தூக்கி அலையக் கூடாது ஏனென்றால் முடியாது. குறைந்த பட்சம்  இந்தத் திருட்டுத் தனத்தை நாம் தெரிந்து கொண்டோம் என்ற உண்மையாவது, உணர வைப்போம். நீங்கள் எதை எழுதினாலும், பேசினாலும் இடையில் ஒரு வார்த்தை இந்த ஆதங்கத்தைப் பற்றி முணுமுணுக்காவது செய்யுங்கள். செய்தீ பரவட்டும்.

இரா.சந்திர சேகர்
பழனி.

1 comments:

Unknown said...

thank you....

top