பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என அறிய உதவும் அறிவியல் தொடர்.
.


என்னுடைய ”உயிரும் உயிரின் பிரிவும்” தொடரின் வரிசையான பதிவுகளின் சுட்டிகளை இங்கே கொடுத்துள்ளேன்.

உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 1)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 2)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 3)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 4)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 5)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 6)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 7)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 8)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 9)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம்10)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 11)



சென்ற பதிவின் தொடர்ச்சி............

ஆகவே வாழ்க்கையில் சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் ”அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி” என்ற வசனம் சத்தியமாக குலம் தழைக்க உதவாது என்பது இதன் மூலம் தெரிகிறது.(அதுமட்டுமில்லாமல் அது வில்லனின் வசனம்) ஏன அடைய முடியவில்லை என்பதை வாரிசுகளுக்கு சொன்னால்தானே மாற்று வழி பிறக்கும். ஆகவே திருமணத்திற்கு முன் சவால்களை சந்தித்து தெளிவடைந்து கொள்ளுங்கள். சவால்களை சந்திக்காவிட்டாலும் பரவாயில்லை உலகத்தை சுற்றிப் பாருங்கள் அல்லது படியுங்கள். நீங்கள் சந்திக்கும் தீர்க்க முடியாத, நிலைத்து வாழ்வதற்கான சவால்களுக்கு தீர்வு உங்கள் வாரிசுகளிடம் ஏற்றப்படும்.

இதனால்தான் விவசாயிகளிடம் பூச்சி மருந்து அடிக்கும் போது பூச்சிகளையோ, எலிகளையோ தப்பிக்க விடாதீர்கள் என அறிவுறுத்தப் படுகிறது.( Some time over dose is recommented). ஏனென்றால் தப்பித்துவிட்டால், வாரிசுகளுக்கு அந்த மருந்து எப்படிப் பட்டது? அதற்கு மாற்று என்ன? என்று கண்டுபிடிக்கும் வழிமுறையை ஏற்றிவிடும்.

இதற்காகத்தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூட, உங்கள் கணினி இடர்ப்பாட்டில் இருந்து மீண்டவுடன் Send error report என்று கேட்கிறார்கள். ஏனென்றால் அப்பொழுதுதான் அடுத்து வெளியி்டப்படும் OS ல் அதற்கான தீர்வை அறிமுகப் படுத்தமுடியும். இடர்ப்பாட்டில்தான் பாடம் படிக்கமுடியும்.

உங்களுக்கு காய்ச்சல் வந்தால், வந்தவுடன் டாக்டரிடம் செல்லவேண்டாம். உடம்பு மூளைக்கு Error report அனுப்பும் வரையாவது பொறுத்துக் கொள்ளுங்கள்.அதற்கும் கூட தீர்வு உங்களிடமே கிடைக்கலாம்.

இனப்பெருக்கம் என்றால், பிளவுபடுதலில்தான் தேவை நிறைவேற்றப்படுகிறதே பின் ஏன் முட்டையின் தேவை? ஆண், பெண் என்ற பிரிவு ஏன்? தாவரஙகளில் ஆண் பெண் என்ற பிரிவு இல்லையே அவைகளும் இன்றளவும் பூமியை ஆள்கின்றனவே?

ஒற்றைச்செல்லாக இருக்கும் பொழுதே கலவி இனப்பெருக்கத்தின் அருமையை உணர்ந்து கொண்டதால்தான் முட்டையின் தேவை நிலை பெற்றுவிட்டது. தாவரங்களில் முதலில் ஆண், பெண் இல்லாமல் இருந்திருக்கலாம். அவைகள் தன்மகரந்த சேர்க்கையினால் இனப்பெருக்கம் செய்தாலும் அவைகளும் நாளடைவில் தாங்குதிறன், மற்றும் நிலைத்துவாழும் (Survival) பண்புகளுக்காக, வண்டுகளுக்கு தேனை லஞ்சமாகக் கொடுத்தும் அயல் மகரந்த சேர்க்கையை பின்பற்ற ஆரம்பித்தன. மரமாக, செடியாக நின்றாலும் ஏதோ ஒருவித கண் கொண்டு சூழ்நிலையை கவணிக்கின்றன என்பது புலப்படுகிறது.

முன்னேறிய விலங்கினங்கள் எல்லாம் ஆண் பெண் பிரிவுகளாகப் பிரிந்து பின் கலப்பு முறையில் சேர்ந்து இனத்தை பெருக்குகின்றன. இதில் பல சூழ்நிலையில் வாழ்ந்த இனங்கள் கலப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் அவைகளின் அனுபவங்கள் திறன்கள் ஆகியவை மரபணுக்கள் மூலமாக கலந்துவிடும். ஆனால் இரண்டு படுதலில் இந்த வசதி கிடையாது.

ஆணும் பெண்ணும் வெவ்வேறு கண்டங்களில், வெவ்வேறு சூழலில் பிறந்து, கலந்து திறமையான வாரிசை உருவாக்கமுடியும் என்பதற்கான இந்த ஏற்பாட்டிற்காகத்தான் உயிரும் அதனுள் உயிரின் பிரிவுமாகிய ஆண், பெண் ஏற்பட்டது. (அப்பாடா தலைப்பை எப்படியோ சொருகியாச்சு, நல்லவேளை தலைப்பை மறந்து விடவில்லை) அந்தப் பிரிவுகள்தான் ஆண்,பெண் ஆகிற்று.

இவ்விதமான பரவலான கலப்புக்கு வழி இல்லாததால்தான் அமெரிக்காவின் பழங்குடி மக்கள் 20 கோடி பேர் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்த ஐரோப்பியரின் தாங்குதிறனுக்கு எதிராக (அவர்கள் கொண்டு வந்த நோய்க்கும்தான்) தாக்குப் பிடிக்க முடியாமல் கிட்டதட்ட பெரும்பாண்மையினர் (99.8%)அழிந்தே போய்விட்டனர்.

அதே ஐரோப்பியர் இந்தியாவை விட்டு சுத்தமாக வெளியேறியதும் இந்தியரின் (பலசாதிக் கலப்பினால் ஏற்பட்ட) அதீத தாங்குதிறன்தான் காரணம்.

இதனால்தான் ஒரே உறவு முறையிலும் திருமணம் (consanguineous marriage) செய்வதால் பிறக்கும் வாரிசுகள் நிலைத்து வாழும் பண்பில் குறையுள்ளவர்கள் என அறிவியல் கூறுகிறது.

இருபாலினங்களையும் தன்னகத்தே கொண்ட, அதாவது ஆணாகவோ பெண்ணாகவோ வசதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தன்னையே மாற்றிக் கொள்ளும் உயிரினங்களும் சில உண்டு. ஆனால் அவைகளினால் மேம்பட்ட சந்ததிகளை உருவாக்க முடியவில்லை என்பதால், அவைகள் பரவலாகக் காணப் படவில்லை.

ஒரே தலைமுறையிலும் கூட கடைசியாக (Latest ) பிறந்த பிறவிகள் ஆளுமை,மற்றும் நிலைத்து வாழும் பண்பு ஆகியவற்றில் சிறந்து இருப்பதைக் காணலாம்। இதையெல்லாம் தமிழ்மக்கள் கண்டறிந்து உள்ளனர் என்பதற்கு பழமொழிகள் சான்றுகளாக உள்ளன। ”மூத்தது மோழை, இளையது காளை” என்ற பழமொழியை ஆராய்ந்தால் டார்வினின் கூற்றில் உள்ள உண்மை புரியும். ஒரு குடும்பத்தில் பிறந்த சகோதரர்களில் மூத்தவர்களை விட இளையவர்கள் திறமையாக செயல்படுவதை காணலாம். அதாவது நிலைத்து வாழும் பண்புகளான ”ஏறி மிதித்துச் செல்லும் திறன்” அதிகமாக காணப் படும். இது அப்பிறவிகளின் தோற்றக்கால இடைவெளியில் பெற்றோர்களின் அனுபவம் கூடுவதால் அதன் பலன் இளைய பிறவிகளுக்கு அதிகமாக கிடைப்பதால் இருக்கலாம்.அது பற்றி பின்னர் பார்ப்போம்.

உயிரினங்கள் வாழ்ந்து கொண்டே, தனது மேம்பட்ட சந்ததியினருக்கும், பூமியில் நிலைத்து இருப்பதற்குமான வழிகளை தன்னை அறியாமலே ஆராய்ந்து கொண்டே இருக்கின்றன என்பதையும், ஆராய்ச்சியின் முடிவுகளால் ஏற்படும் தீர்மானங்களை தன் மரபணுக்களில் ஏற்றிக் கொள்கின்றன என்பதும்தான் பரிணாமத்தின் வழிமுறைகள்.
தொடரும்.............


முந்தைய பதிவு

4 comments:

yasir said...

கட்டுரை மிக அற்புதமாக உள்ளது . தங்களின் மற்ற பகுதிகளையும் படித்துவிட்டு பிறகு சந்திக்கிறேன். நன்றி

Chandru said...

Guna ம்ற்றும் Yasir ஆகியோரின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

Unknown said...

மாம்ஸ் நீங்கள் இளையவரா. அதுதான் தைரியமாக எழுதியுள்ளீர்கள். நானும் இளையவன்தான் எங்கள் வீட்டில் உங்கள் தியரி ஒர்க் அவுட் ஆயிருச்சுன்னு நினைக்கிறேன்.

நாட்டாமை said...

//ஒரு குடும்பத்தில் பிறந்த சகோதரர்களில் மூத்தவர்களை விட இளையவர்கள் திறமையாக செயல்படுவதை காணலாம். அதாவது நிலைத்து வாழும் பண்புகளான ”ஏறி மிதித்துச் செல்லும் திறன்” அதிகமாக காணப் படும். இது அப்பிறவிகளின் தோற்றக்கால இடைவெளியில் பெற்றோர்களின் அனுபவம் கூடுவதால் அதன் பலன் இளைய பிறவிகளுக்கு அதிகமாக கிடைப்பதால் இருக்கலாம்.அது பற்றி பின்னர் பார்ப்போம்.//
அதாவது ”ஏறி மிதித்துச் செல்லும் திறன்” என்றால் நேர்மைக்கு புறம்பாக செயல்படுவார்கள் என்கிறீர்களா?

அறிவுள்ள பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்கிறீர்களா? இதுவும் முரன்பாடாகத் தெரியுதே

top