(முந்தைய பதிவிற்கு)
சதுரங்க விளையாட்டின் வரலாறும், மூலமும்.3

நாம் ஆராயப் போவது சதுரங்கத்திற்கு முற்றிலும் மாறுபட்ட விஷயமான ஜோதிடத்தைப் பற்றித்தான். ஜோதிடத்திற்கும் சதுரங்கத்திற்கும் என்ன தொடர்பு? முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சா?
உங்களுக்கு ஜோதிடமும் செஸ்ஸூம் தெரிந்திருந்தால் இந்நேரம் மனதில் மின்னல் அடித்திருக்க வேண்டுமே?

நான் ஏற்கனவே எனது முதல் பதிவில் கீழ்க்கண்டவாறு க்ளூவும் கொடுத்திருந்தேன்.
//ராஜா (சூரியன்) , மற்றும் மந்திரி(சந்திரன்) ஆகியோரின் இடமதிப்பு அது மட்டுமல்லாது காயை நகர்த்திய பின் எதிராளி எந்தெந்த காய்களை நகர்த்தும் வாய்ப்பு,// என்று எழுதியிருந்தேன்

ஜோதிடத்தில் உள்ள அத்தனை நுணுக்கங்களும் செஸ் விளையாட்டிலும் உள்ளது என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.



அதில் முதன்மையானதும் முக்கியமானதும் இவ்விளையாட்டின் பழமையே. ஜோதிடத்தின் பழமையிலும் சதுரங்கத்தின் பழமையிலும் உள்ள ஒற்றுமை ஒன்றே இரண்டும் ஒரே வழி வந்தவை என்பதை உணர்த்துகிறது. சதுரங்கம் (செஸ்) என்பது ஜோதிடத்திலிருந்து பிறந்ததால் ஜோதிடத்தின் பழமைதான் சதுரங்கத்தின் பழமைக்கும் காரணமாக அமைகிறது. அதுமட்டுமில்லாமல் ஜோதிடம் இந்தியாவிலிருந்துதான் பரவியது என்கிற உண்மையை வரலாறு மறைத்தாலும் சதுரங்கம் சாட்சியாக நின்று உலகுக்கு எடுத்துச் சொல்லி இந்தியனுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தான் சதுரங்கம்.

இன்றைய செஸ்ஸிற்கும் அன்றைய சதுரங்கத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது ஆகவே அது வேறு, இது வேறு என்பர் அறியாத சிலர். ஆனால் உண்மையில் சதுரங்கத்தின் வரலாற்றை உற்று நோக்கினால் இன்றைய செஸ்ஸில் மாற்றங்கள் என்பது மொத்தத்தில் 5 சதவீதத்திற்கும் மேல் மிகாது. சில பெயர்களையும் உருவத்தையும் மட்டும் தங்களது கலாச்சாரத்தை ஒட்டி ஐரோப்பியர் மாற்றியுள்ளனர். காய்களை நகர்த்தும் விதிகளில் பெரிதாக மாற்றம் ஏதுமில்லை. அப்படி காலத்தினால் செய்த மாற்றமும் கூட ஜோதிட விதிகளை ஒட்டியே அமைந்துள்ளது என்பது பெரும் வியப்பிற்குரியது.

இந்தியாவின் சதுரங்கம் கி.பி இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெர்சியாவுக்கும் அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் கொண்டு செல்லப்பட்டதாகவும் ஐந்தாம் நூற்றண்டில் சீனாவுக்கும், 7 நூற்றாண்டில் ரஷியாவுக்கும் எடுத்துச் செல்லப் பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.
http://en.wikipedia.org/wiki/Chatrang

கிட்டதட்ட ஜோதிடமும், அதே காலகட்டத்தில்தான் இந்தியாவில் இருந்து பரவியது என்பதற்கு இதைவிட சிறந்த விளக்கம் இருக்கவே முடியாது. ஜோதிடமும் இந்தியர்களுடையதுதான் என்பதற்கு ராசிகளின் அடையாளங்களாகிய ஆடு, காளை, இரட்டையர், நண்டு, சிங்கம், கன்னி, தராசு, தேள், தணுசு, கும்பம், மகரம், மீனம் ஆகியவை சொல்கின்றன. இவைகளில் பெரும்பாலனவை வெப்பமண்டல பிரதேசத்திற்குரிய அடையாளங்கள்தான். வெப்ப மண்டல பிரதேசங்களில் முக்கியமானவை தென் அமெரிக்காவும், ஆப்பிரிக்காவும், இந்தியாவும்தான். இந்த மூன்றிலும் முதன்மையானது இந்தியாதான் என்பது மறுக்கமுடியாத விஷயம்.

 ராசிக்கட்டம்


 ராசிக்கட்டம்


அதிலும் மகரம் குறிப்பாக தமிழ்நாட்டின் அடையாளம். மகரம் என்றால் முதலை என்று அர்த்தமும் உண்டு. மகரயாழ் அல்லது மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள யாளி ஆகியவைதான் மகரத்திற்கு சரியான  அடையாளம்.
  மகரம், யாளி

மகரம்



யாளி

அது மட்டுமல்லாது, உலகில் பெரும்பாலான மக்கள் கற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களில், உத்ராயணம், தட்சினாயணம் என சூரியனின் பயணத்தை வகைப்படுத்தி வைத்திருக்கும் பாங்கைப் பார்க்கும் போதும், தெற்கு, வடக்கு என்று ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே திசை சொல்லும் போதும், அவன் பூமத்தியரேகைப் பகுதியை ஒட்டித்தான் இருந்திருக்க வேண்டும். அதாவது பூமத்திய ரேகையிலிருந்து தெற்கு அல்லது வடக்காக
ஒரு 10 டிகிரிக்குள்தான் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஒரு வேளை அவன் லெமூரியாவில் வாழ்ந்த தமிழனாக கூட இருக்கலாம் என்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.



லெமூரியா அல்லது குமரிக்கண்டம்


ஆக ஜோதிடம் என்பது இந்தியாவில் (தமிழகத்தில்) இருந்துதான் பரவியிருக்க முடியும். ஜோதிடத்திற்கும் செஸ் விளையாட்டுக்கும் உள்ள ஒற்றுமையை இது வரை யாரும் இவ்வளவு தெளிவாக கூறியிருக்க முடியாது. என நினைக்கிறேன்.
பூமியின் கடக ரேகை , மகர ரேகை, பூமத்திய ரேகை, தட்சினாயணம், உத்ரயாயணம்  மற்றும் வெப்பமண்டலப் பிரதேச விளக்கப் படம்.



உத்ராயணம்                 -            தட்சினாயணம்


தொடரும் ......................................
இரா.சந்திரசேகர்,
பழனி.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான பதிவு ! தொடருங்கள் சார் ! நன்றி !

Ganesh said...

மிக மிக அருமை!!

top