மனித மூளை கம்ப்யூட்டரை விட சிக்கலான ஒரு அமைப்பு கொண்டது. காட்சிகள் சம்பந்தப் பட்ட விஷயத்தை நினைவு கொள்ள அதற்கு அதிக நினைவிடம் தேவை என்பது கம்ப்யூட்டர் கண்டுபிடித்த பின்புதான் தெரிய வந்தது. ஏனென்றால் 1980 வரை ஒரு போட்டோவை கம்ப்யூட்டரில் பார்ப்பது அரிதாக இருந்தது. இன்றைக்கு மோட்டிகன் என்ன சைஸில் இருந்ததோ அதுதான் அன்று அனிமேஷன் விண்டோவின் சைஸ். அன்றைக்கு ஒரு ஹார்ட் டிஸ்க்கின் மெமரி சைஸ் 640 MB என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.இன்று செல்போனுக்குள் வைக்கும் விரல் நகம் அளவு உள்ள சிப்பில் 2 ஜிபி உள்ளது

ஆனாலும் நமது மூளை கம்ப்யூட்டரை போல் அல்லாது சில விஷயங்களை எளிதாக நினைவிலிருந்து எடுத்து வர ஒருவித யுக்தியை கையாள்கிறது. ஒரு நினைவை இன்னொன்றுடன் சம்பந்தப் படுத்தி வைத்துக் கொள்வதன் மூலம் எளிதில் நினைவுக்கு (Data access or Retrieve) கொண்டுவர முடிகிறது.ஒரு விஷயத்தை இன்னொன்றுடன் தொடர்பு படுத்துவதால், அதை வேண்டும் பொழுது நினைவுக்கு கொண்டு வரமுடிகிறது. இதற்காகத்தான் ஒரு விஷயத்தை ஒரு கதையுடன் பின்னிச் சொல்வார்கள். அல்லது உவமானத்துடன் சொல்வார்கள்

பொதுவாக எல்லோரும் சில வரிகளை படித்துக் காண்பித்துவிட்டு திரும்பவும் சொல்லச் சொன்னால் திணறுவார்கள். அதையே ராகத்துடன் பாடி சொன்னால் எளிதாக யாரும் திருப்பிச் சொல்லிவிடுவார்கள். கச்சேரியில் பார்த்து இருப்பீர்கள் நாதஸ்வரக்காரர் எவ்வளவு நேரம் வாசித்தாலும் தவில்காரர் தனது தவிலில் அதே சங்கதியை பிட்டு விடாமல் அடித்து கான்பிப்பார். இதெல்லாம் ராகம் சம்பந்தப் பட்ட விஷயம். திருமண வீட்டில் பெண்கள் நலுங்குப் பாடல்களை எவ்வளவு நீளமாக பாடினாலும் நம்ம நாதஸ் அப்படியே முழுவதையும் ராகமாக நினைவு படுத்தி, தனது வாத்தியத்தில் பாடிக் காண்பிப்பார்.

தொலைகாட்சி விளம்பர பாடல்களை குழந்தைகள் அட்சரம் பிசகாமல் பாடுவதைக் கேட்டிருப்பீர்கள் ஆனால் பாடத்தை நினைவில் கொள்ளமாட்டார்கள். வார்த்தைகளை நினைவில் பத்திரப் படுத்த இந்த இடத்தில் வார்த்தைகள் ராகத்துடன் கோர்க்கப்படுகிறது. ராகத்துடன் பாடுவதற்கு வார்த்தைகள் ஒத்துழைக்க வேண்டும். வார்த்தைகள் ஒத்துழைக்காத பட்சத்தில் வார்த்தைகளை சிறிது மாற்றி உச்சரிக்கலாம் தப்பில்லை. முதல்வன் திரைப் படத்தில் ”முத்தல்வனே” ”வன்னே வன்னே வன்னே வன்னே” என்பது போன்று கடித்து துப்பலாம். இதுவே கொஞ்சம் அதிகம்தான். அதற்காக ஆங்கிலப் பாடல் ராகத்தில் பாடுவதாகக் கூறிக் கொண்டு வார்த்தைகளை அடித்து சுருக்கி, இழுத்து நீட்டி மெட்டுக்கு தோதாகக் கொண்டு வந்து என்னவென்று புரியாத மாதிரி பாடித் தொலைக்கிறார்களே அது கருமத்துக்கு ரொம்ப அதிகம்.

இங்கே சிலர் பாடுவதை கேட்டுப் பாருங்கள் புரியும்.

(இதற்குத்தான் சொல்வார்கள் ”தரத்தை தரம் அறியவேண்டும் தடிக்கம்பை நாய் அறிய வேண்டும்” என்று.நமது தரம் தெரிந்து கொண்டு மேடை ஏற வேண்டும்.இல்லாவிட்டால் இந்த கேவலத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.: இது அந்த விஜய் டிவி வீடியோவிற்கான கமெண்ட்)

எதிலும் ஒரு ரைம் இருக்கவேண்டும் அதைத்தான் எதுகை மோனை என்கிறார்கள். நன்பர்கள் பேசும் பொழுது கூட க னாவுக்கு கா னாவா என்று நக்கல் அடிப்பார்கள். உங்களுக்கு ஹிந்தியில் 1,2,3 என்ற எண் வரிசை சொல்லத் தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள் பெரும்பாலோர் தெரியாது என்பார்கள். ஆனால் அவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். ”ஏக்தோ தீன் சார்பான்ஞ்” என்ற ஹிந்திப் பாடலை ஆரம்பியுங்கள் அவர் என்ன பாடுகிறோம் என அறியாமலே ஹிந்தியில் எண்களுக்கான வரிசையில் 13 வரை பாடி முடித்து விடுவார்.அதுதான் கவிதையின் மகத்துவம். இதை யெல்லாம் உணர்ந்த தமிழர்கள் மிகப் பழங்காலத்திலே, சொல்லும் விஷயம் எதுவாயினும் கவிதையில் சொல்வோம் என வழிவகுத்தனர். அந்த வழியில் வந்தது தான் ராகம், மெட்டு, கவிதை.அதற்கு அடுத்த கட்டமாக வந்தவைகள்தான் சீர், தளை, எதுகை மோனை என்ற யாப்பிலக்கணம்.

ஒரு கருத்தை விளக்க முதலில் உரைநடையில் விளக்குவது, பின் பழகு தமிழில் சொல்லுவது. அடுத்து பண்பட்ட தமிழில் பேசுவது அதற்கு அடுத்து எதுகை மோனையுடனும், பின் அடுக்கு மொழியிலும் பேசுவது பிறகு உவமான உவமேயங்களுடன் பேசுதலாகும். பின்னர் உவமானத்தை மட்டும் சொல்வதாகும். பாமரத்தமிழன் கூட தான் பேசும் போது ராகம் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழில் அர்த்தமற்ற சொற்களையும் அன்றாடம் பயன்படுத்துகிறான். உதாரணமாக

சத்தம் கித்தம் போடக் கூடாது,
பஸ்ஸுக்கு கிஸ்ஸூக்குன்னு அலையாம ட்ரெயின்ல வந்துரு.
பாட்டுகீட்டு ன்னு பாடுங்க ஆனா அதுல மெட்டுகிட்டு இருக்கனும்
கவிதை கிவிதைன்னுட்டு எவனாச்சும் வந்தீங்க.........
யாப்புகீப்புன்னு நீங்கதான் கழுதையா கத்துறீங்க எவன் கேக்றான்( உதாரணத்துக்குதாங்க, உடனே ஆதாரத்தோட சண்டைக்கு வராதீங்க)
நாய் கீய் வந்தா கல்லக் கில்ல கொண்டு எறிந்து விடாதே கடித்து கிடித்து தொலைந்துவிடும்.

இதுல கித்தம், கிஸ்ஸு,கீட்டு, கிவிதை,கிட்டு, கீப்பு, கீய், கில்ல, கிடித்து இவை எல்லாம் அர்த்தமற்றவை என எல்லோருக்கும் தெரியும்.ஆனாலும் ஓசைநயத்துக்காக இவற்றை சேர்த்துப் பேசுகிறான்.

தமிழன் மொழிப் பற்று மிகுந்தவன். மற்றவர்களெல்லாம் வேற்று மொழியில் திட்டினால்தான் தெரியாமல் சிரித்துக் கொண்டே இருந்து விடுவார்கள்.ஆனால் தமிழனை தமிழில் திட்டினால் பொறுத்துக் கொள்வான்.ஏனென்றால் திட்டுவது யாராக இருந்தாலும் காதில் விழும் போது தமிழாக இருப்பதால் மெய் மறந்து விடுகிறான். தமிழில் பாடினால் தலையையே கொடுத்தவனின் கதையும் கலம்பகம் பாடினால் பரலோகம் நிச்சயம் என்று தெரிந்தும் பாடச்சொல்லி கேட்டவனும் தமிழன்தான் ..காட்டு மிராண்டி என்று திட்டினால் சிலை வைப்பவனும் தமிழன்தான். அடுக்குமொழியில் பேசினால் ஆட்சிப் பொறுப்பையே கொடுத்து விடுவான்.என்பது நிகழ்கால சான்றாகும்.இங்கெல்லாம் தமிழுக்குதான் முக்கியவத்துவம் கொடுக்கிறான்.ஏனென்றால் தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்.

ஹிட்டான பாடல்கள் சிலவற்றில் இதைக் கவனித்திருப்பீர்கள்.

ஒருவன் ஒருவன் முதலாளி,
தில்லானா தில்லானா தித்திக்கின்ற
கண்ணும் கண்ணும் பேசியது
கட்டிப்பிடி கட்டிப்பிடி டா
தீப்பிடிக்க தீப்பிடிக்க
கண்ணே கண்ணே கொல்லாதே
கண்டேன் கண்டேன்
(ஆதவன் படப் பாடல்கள் முழுவதும்)


ஒரு வார்த்தைக்கு ஒத்திசைவா (Harmony) அதே வார்த்தையைப் போட்டு பாடுகிற போது நன்றாக அமைந்து விடுகிறது. இப்படி இருக்கும் போது வரிக்கு ஒரு வார்த்தை போட்டு ஒற்றைச் சீரில்(வார்த்தையில்) கவிதை எழுதினால் அதில் என்ன சங்கதி வைக்க முடியும்.

இப்படி அநேகமாக எல்லா வார்த்தைகளுக்கும் ஒட்டும் மெட்டும் போட்டு பேசுபவர்கள் அதிகமாக இருக்கும் பொழுது கவிதை பாடுகிறேன் என்று சில பேர்வழிகள் ஓசை நயமில்லாமல் ஒற்றை வார்த்தைகளை (இதெப்படி!! ஓவன்னாக்கு ஒனா) படிக்கட்டாக அடுக்கிவிட்டு கவிதை என்றால் அதை நாம் படிக்கனுமா?


பழமொழிகள் எல்லாமே எதுகை மோனையுடந்தான் இருக்கும். அதனால்தான் சொல்ல வேண்டிய விஷயத்தை பழமொழியில் சொல்லி எளிதாக புரிய வைக்கிறார்கள்.பழமொழி கூட குறள் வடிவில் இருக்கிறது பாருங்கள்.

ஆறிலும் சாவு
நூறிலும் சாவு

ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையுமா

ஆயிரம் பேரைக் கொன்றவன்
அரை வைத்தியன்

உழுதவன் கணக்குப் பார்த்தால்
உழக்கு மிஞ்சாது

நொறுங்கத் தின்றால்
நூறு வயது

.
ஒப்பாரிப் பாட்டிலும் கேட்கலாம்.

கல்லால கோட்டை கட்டி கவணமா நீ இருக்க
காலன் வந்து பூந்திட்டானோ
இரும்பாலே கோட்டை கட்டி இறுமாப்புடன் நீ இருக்க்
ஏமன் வந்து பூந்திட்டானோ

ஏன் தாலாட்டுப் பாடல்களிலும்
இந்த எதுகை மோனை இருப்பதைக் கானலாம்.

"கானல் அடிக்கிதுன்னு
கையாலே குடை பிடிச்சு
வெய்யில் அடிக்கிதுன்னு
விரலாலே குடை பிடிச்சு

தரையிலே விட்டா
தண்டைக்கால் நோகுமின்னு
மார்மேல் தொட்டில் கட்டி
மடிமேல் நடை பழக்கி
தோள்மேல் தொட்டில் கட்டி
தொடைமேல் நடை பழக்கி..."


கவிதையில் எதுகை மோனை இல்லாவிட்டாலும் ராகம் அமைத்து மெட்டுப் போடுபவர்கள் வரிகளுக்கு, பாடும் திறமையால் உயிர் கொடுப்பார்கள்.
உதாரணமாக வறுமையின் நிறம் சிவப்பு என்ற படத்தில் கதையின் நாயகியான ஸ்ரீதேவி மெட்டை சொல்லி வார்த்தையை போடுமாறு கதாநாயகன் கமலிடம் கேட்க ஒரு பாடல் உருவாகும் பாருங்கள், ஆஹா என்ன மாதிரியான ஒரு காட்சி அமைப்பு.அதில் அந்த மெட்டுக்கு வார்த்தையைப் போடும் போது மனதில் உள்ள காதலையும் வார்த்தையில் கலந்து கவிதையாய் பாடும் நேர்த்தி, உன்மையில் மெட்டுடன் கூடிய கவிதையின் பிரசவத்தை நேரில் பார்த்த மாதிரியான ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. அதைச் சொல்வதற்கும் வார்த்தைகள் கிடையாது.





சரி, திரையுலக பிதாமகன் அவரிடம் வித்தை இருக்கிறது என்று காட்டி விட்டார் என்று மகிழ்ச்சியும் சமாதானமும் அடையும் போது அவருடைய மாணவன் கமல் சவாலாக ”ஐயா உமது கதாநாயகன் கதைப்படி சிறந்த அறிவாளியாக காட்டியுள்ளீர்கள் அதனால் அவன் மெட்டுக்குத் தகுந்த வார்த்தைகளைப் போட்டான். அதில் ஒன்றும் சிறப்பு இல்லை, ஆனால் எனது கதாநாயகனோ ஒரு பைத்தியம். இந்த பைத்தியத்தின் வார்த்தைக்கும் தகுந்த மாதிரி கதாநாயகியினால் மெட்டு போட்டு பாடமுடியும் என சந்தானபாரதியுடன் சேர்ந்து நிரூபித்துவிட்டார் கமல்.ஆக குருவை மிஞ்சிய சீடராகி விட்டார். அதற்கு சிறந்த உதாரணம் குணாவில் வரும் பாட்டு. அந்த அரைக் கிறுக்கு சொல்லும் வார்த்தைகளை பாடலாகப் பாடிக் காட்டுவதால் பாடல் அமையும் முறை தெளிவாகப் புரியும். ஆனால் அதற்கு ஒரு மெட்டு அமைக்கும் வித்தகர் தேவைப் படுவார். இந்த இரண்டு பாடல்களையும் நன்றாக கேட்டு புரிந்து கொண்டால் போதும் கவிதையும் ராகமும் கலக்கும் விதம் தெரிந்து கொள்ளலாம்..





ஆனால் நாளடைவில் கவிஞர்களுக்கு, கவிஞர்கள் தங்கள் திறமையை காட்டும் முகமாக, சுற்றி வளைத்து பொருள் கொள்ள வைப்பது, புதிர் போடுவது போல் எளிதில் புரியாத மாதிரி எழுதுதல் என ஆரம்பித்தனர். ஆனாலும் ராகத்துக்கு மிகவும் அடிப்படையான யாப்பிலகணத்தைப் பின் பற்றினர்

மேலும் படிக்க...!
இப்பொழுதெல்லாம் மக்கள் என்ன செய்கிறோம் என்று யோசிக்காமலே காரியம் செய்கின்றனர். உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன். அன்று வியாழக்கிழமை தெட்சினாமூர்த்தி சன்னதியில் கூட்டம் அதிகமாக இருந்தது.

அங்கு எனது நன்பர் ஒருவரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவரிடம் கேட்டேன் ”வியாழனை பார்த்தீர்களா” என்று. அதற்கு அவர் அவன் சன்னதியில் இருந்து கொண்டே இந்தக் கேள்வியை கேட்கலாமா? என்று பதில் கேள்வியை போட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் நிற்பதோ தெட்சினாமூர்த்தி சன்னதியில் இவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் முழித்துவிட்டு என்ன சொல்கிறீர்கள் என்றேன். குரு பகவான் சன்னதியில் நின்றுகொண்டு ” குருவை பார்த்தீர்களா” என்று கேட்டால் என்ன சொல்வது என்றார்.
அப்பொழுதுதான் எனக்கும் புரிந்தது, தெட்சினாமூர்த்தியைத்தான் தவறாக குருபகவான் என்று சொல்கிறார் என்று.

பின்னர் அவரிடம் விளக்கம் கூறினேன். குருபகவானின் இஷ்ட தெய்வம் தெட்சினாமூர்த்தியாக இருப்பதாலும் குருபகவானுக்கு என்று தனியாக சன்னதி இல்லாததாலும் அவருடைய இஷ்ட தெய்வமான சிவபெருமானாகிய தெட்சினாமூர்த்தியை வணங்கினால் நம்மை ஒரே சாமி கும்பிடுகிற பங்காளியாக கருதி நமக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் ஏற்பட்டதுதான் தெட்சினாமூர்த்தியை, அவரது கிழமையில் வணங்கும் முறை என்று சொன்னேன். உன்மையில் நாம் வணங்குவது ஆதிமூலமான ஆலமர்ச்செல்வனாகிய, சிவபெருமானைத்தான் என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்லி புரிய வைத்தேன்.



இப்பொழுது மீண்டும் கேட்டேன் வியாழனைப் பார்த்தீர்களா? என்று. அவர் ஒரு மாதிரியாகப் பார்த்தார். சரி அவரை மேலும் குழப்ப வேண்டாமென்று நானே சொன்னேன். கடந்த ஒருமாதமாக வானில் தெரியும் வியாழனைப் பார்த்தீர்களா? ஏனென்றால் சுமார் 75 வருடங்களுக்கு ஒரு முறைதான் அது பூமிக்கு மிக அருகில் வருகிறது. அந் நிகழ்வு தற்பொழுது நடக்கிறது. போனமாதம் செப்டம்பர் 20 தேதி பூமிக்கு மிக அருகில் வந்த விஷயத்தையும் தற்பொழுது நிலவுக்கு அருகில் மிகவும் பளிச்சென்று இருப்பதையும் வானில் காட்டினேன். நீங்கள் தினமும் உங்கள் வீட்டு மாடியில் நின்றவாறே இன்னும் பலவாரங்களுக்கு வணங்கலாம் என்று கூறி அவரை குழப்பி அனுப்பிவிட்டேன்.

அவர் வீட்டிலிருந்து வணங்குவாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் தினமும் அந்த காட்சியை கான வானத்தைப் பார்க்கிறேன். நிலவுடன் தோன்றி நிலவுடன் சென்று மறைகிறது. ஆனாலும் இந்த பருவ நிலை காரணமாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் காணக் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் வானத்தைப் பார்த்து மகிழுங்கள்

மேலும் படிக்க...!
top